“யாரோ உங்களைப் பார்க்க வந்திருக்காங்க, ஸார்! மிஸ் இந்திராவாம்; வேலை வேணுமாம், நம்ம ஆபீஸில்” என்று பியூன் வந்து தெரிவித்ததும், மானேஜர் குண்டுராவ், “ஐயையோ! ஒரு தடவை அனுபவப்பட்டது போதும்! இனிமேல் நம்ம ஆபீஸில் எந்த ஸ்திரீயையும் வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாது! ‘மானேஜரை இப்போது பார்க்கமுடியாது’ என்று அந்த அம்மாளிடம் சொல்லி அனுப்பு, போ!” என்று உத்தரவிட்டார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, May 18, 2023
*பெயர் மாற்றம்! – ஒரு பக்க கதை*
“காலியாக இருப்பதென்னவோ வாஸ்தவந்தான். ஆனால், ஸ்திரீகளை இந்த ஆபீஸில் வேலைக்கு வைத்துக்கொள்ள உத்தேசமில்லை” என்று பதிலளித்தார் குண்டுராவ்.
“ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாகவே வாழ வேண்டுமென்ற கொள்கை நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டு இருக்கும் இந்த நாளில், பெண்களுக்கு உங்கள் ஆபீஸில் வேலை இல்லை என்றால், அது நியாயமாக இருக்கிறதா, ஸார்? யோக்கியதை இல்லை என்றால் சரிதான்!”
“யோக்யதையைப் பற்றிப் பேசவில்லை. முன்பு ஒரு தடவை ஒரு ஸ்திரீயை கிளார்க் வேலையில் அமர்த்தியதால் நான் ரொம்பவும் அவஸ்தைப்பட்டுப் போனேன்!”
“ஒரு ஸ்திரீயால் அவஸ்தை ஏற்பட்டால், எல்லா ஸ்திரீகளாலுமே அம்மாதிரி அவஸ்தை ஏற் படும் என்று எப்படி நீங்கள் தீர்மானிக்கலாம்?”
“ஏது… நீ ரொம்பப் பிடிவாதக்காரியாக இருக்கிறாயே!”
“என்ன ஸார் செய்கிறது? வேலை அகப்படாமல் வெகு நாளாக திண்டாடிக்கொண்டுஇருக்கிறேன்!”
“சரி, ஒரு நிபந்தனைக்கு நீ உட்பட்டால், போனால் போகிறது என்று உனக்கு நான் வேலை கொடுக்கிறேன்.”
“என்ன நிபந்தனை, ஸார்?”
“உன் பெயரை அலமேலு என்று மாற்றிக்கொள்ளச் சம்மதமா, சொல்!”
“எதனால் அவ்வாறு சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே! ‘இந்திரா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?”
“நீ இவ்வளவு தர்க்கம் செய்வதால் உண்மையைக் கூறிவிடுகிறேன். தூக்கத்தில்கூட நான் ஆபீஸ் விஷயங்களையே நினைத்துக்கொண்டிருப்பவன். அவற்றைப் பற்றியே கனவுகளும் காண்பது வழக்கம்!”
“சரி, அதனால் என்ன?”
“முன்பு ஒரு தடவை ‘மங்களம்’ என்று நான் தூக்கத்தில் பிதற்றி விட்டேன்! ஆபீஸில் மங்களம் என்று ஒரு கிளார்க் இருந்தாள். ஏதோ ஒரு வேலையைப்பற்றி அவளிடம் பேசுவதுபோல் கனவு கண்டிருக்கிறேன் போலிருக்கிறது! அந்தச் சமயத்தில் அந்தப் பெயரைக் கூப்பிட்டிருக்கிறேன்! அதைக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள் என் சம்சாரம். ‘யார் அந்த மங்களம்? அவளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?’ என்று பெரிய சண்டைக்கு ஆரம்பித்து விட்டாள்!”
“அடப் பாவமே!”
“என் சம்சாரத்தின் பெயர் அலமேலு. அந்தப் பெயரை நான் தூக்கத்தில் தட்டுக்கெட்டுப் பிதற்றினாலும், நான் கனவில்கூட அவளை நினைத்துக்கொண்டு இருப்பதாக எண்ணிச் சந்தோஷப்படுவாள்!”
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment