Sunday, May 7, 2023

அழுகிய பழ கருப்பையா.

 முரண்களின் மொத்த உருவம் பழ கருப்பையா ! தமிழ்நாடு கவர்னரை சொரணை இல்லாதவர் ! புத்தி இல்லாதவர் என்று சன் நியூஸ் சேனலில் வசை பாடுகிறார் ! இவர் கெட்ட கேட்டுக்கு அவரை சொரணை இல்லாதவர் என்கிறார் ! 2010 துக்ளக் ஆண்டு விழா கூட்டத்தில் கருணாநிதியை அயோக்கியர்களின் தலைவர் என்றார் . பின் அதிமுக வில் இருந்து கருணாநிதியிடம் அடைக்கலம் புகுந்தார் . பின் அங்கிருந்து விலகி கமலஹாசன் கட்சியில் சேர்ந்தார் . பின் அவரை விட்டும் விலகி தனி கட்சி ஆரம்பித்திருக்கிறார் . இது எத்தனை நாளோ ? காமராஜர் சிஷ்யனாக இருந்த போது இந்திய தேசியம் பேசினார் . இப்போது தமிழ் தேசியம் என்கிறார் . திராவிடம் என்கிறார் . பாரதம் எனபதே கிடையாது என்று பிதற்றுகிறார் . வெள்ளைக்காரன் தான் இந்தியாவை இணைத்தான் . காந்திதான் இணைத்தார் என்கிறார் . விடுதலை போராட்டம் காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருவதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது . பின்னர் காந்தி தலைமை தாங்கினார் . மக்கள் எழுச்சி தானாக எழுந்தது . வெவ்வேறு பகுதிகளாக இருந்தாலும் பாரத கலாச்சாரம் ஒன்றாக இருந்ததால்தான் இது சாத்தியமாயிற்று . இந்த முட்டாள் மனிதனுக்கு இது புரியவில்லை . இப்போது தமிழ் தேசியம் என்று சொல்கிறாரே யார் ஏற்கிறார்கள் ? திராவிடம் என்பது பகுதியை குறிக்கும் சொல் . இனத்தை அல்ல . இதை யார் புரியவைப்பார்கள் இவருக்கு ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...