Sunday, October 22, 2023

தேவர்.

 திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றிக்கும் வித்திட்டது. சின்னப்பா தேவருக்கு அப்படிக் கிடைத்த நண்பர்... எம்ஜிஆர்.

🌹சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார் தேவர். ‘சொந்தமாக படமெடுத்தால் என்ன’ எனும் எண்ணம் தோன்றியது. நண்பர்கள் கையிலிருந்த பணத்தைக் கொடுத்து உதவினார்கள். ‘தேவர் பிலிம்ஸ்’ உருவானது.
🌹எம்ஜிஆரை ஹீரோவாக்கினார். பானுமதி, கண்ணாம்பா முதலானோர் நடித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தேவர் பிலிம்ஸா... மிருகங்களை வைச்சு அசத்துவாங்களேப்பா’ என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு தனி அடையாளத்துடன் திகழ்ந்தார். முதல் படம் எம்ஜிஆருடன். படத்தை எடுத்து முடித்து, ரிலீஸ் செய்து, வெற்றிப் படமாகவும் அமைந்தது.
🌹பழைய நட்பு இன்னும் கெட்டிப்பட்டது. ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’ என்று தொடர்ந்து படங்கள் பண்ணினார்கள். எல்லாமே ஹிட்டடித்தன. நடுவே, ரஞ்சன், சி.எல்.ஆனந்தன், ஜெமினி கணேசன் என ஒரு ரவுண்டு போய்விட்டு வந்தார் சிவாஜியை வைத்து ஏ.பீம்சிங் ‘ப’ வரிசை படங்களை இயக்கினார் என்றால், சின்னப்பா தேவர் எம்ஜிஆரை வைத்து ‘த’ வரிசைப் படங்களை தயாரித்தார். தன் படங்களுக்கென கதை இலாகாவை உருவாக்கினார்.
🌹டைட்டிலில் ‘தேவர் பிலிம்ஸ் கதை இலாகா’ என்றே வெளிவரும். இசைக்கு கே.வி.மகாதேவன். பாடலுக்கு கண்ணதாசன். இயக்கத்துக்கு சகோதரர் எம்.ஏ.திருமுகம். பாட்டெல்லாம் ஹிட்டாகின. அந்தக் கதையில், எம்ஜிஆருக்கென சின்னச்சின்ன விஷயங்கள் சேர்க்கப்படும்.
🌹எல்லோரும் பார்க்கும்படியான கதையாக அமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். பூஜை தேதி அறிவிக்கப்படும். பூஜையின் போதே, ரிலீஸ் தேதியும் தைரியமாக அறிவித்துவிட்டுதான் வேலையில் இறங்குவார். சொன்ன தேதியில் ரிலீஸ் செய்தும்விடுவார்.
🌹எம்ஜிஆரும் தேவரும் நகமும் சதையும் போல. அப்படியொரு நட்பு இருவருக்கும். ஆனாலும் உடம்பு முழுக்க சந்தனமும் நெற்றி நிறைய விபூதியும் பூசிக்கொண்டிருக்கும் தேவர், எம்ஜிஆரை, ‘ஆண்டவரே’ என்றுதான் அழைப்பார். எத்தனையோ பேருக்கு வள்ளலென வாரிவாரிக் கொடுத்த எம்ஜிஆர், சின்னப்பா தேவரை ‘முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார்.
🌹தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடிக்கிறார் என்றாலே, விநியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் ரசிகர்களும் குஷியாகிவிடுவார்கள். அந்த அளவுக்கு இந்தக் கூட்டணி மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.
🌹பார்ப்பதற்கு பயில்வான் போல், கொஞ்சம் முரட்டு ஆசாமியாகவும் கறார் பேர்வழியாக இருந்தாலும் சிறந்த பக்திமானாகவும் திகழ்ந்தார் சின்னப்பா தேவர். மிகச்சிறந்த முருகபக்தர். அதிலும் மருதமலை முருகன் மீது அப்படியொரு பக்தி கொண்டிருந்தவர். வார்த்தைக்கு வார்த்தை ‘முருகா முருகா’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். மருதமலை கோயிலுக்கு கணக்கிலடங்காத அளவுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார். சொல்லப்போனால், மருதமலை முருகன் கோயில் இன்றைக்கு பிரசித்தமாகியிருப்பதற்கு, சின்னப்பாதேவர்தான் காரணம்.
🌹திரையுலகில் அழியாப் புகழ் பெற்றவர் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் இனி அவரைப் போல ஒருவரைப் பார்க்கவே முடியாது. அப்பேர்ப்பட்ட உத்தமர் அவர்’’ என்று சின்னப்பா தேவரின் மரணத்தின் போது நெகிழ்ந்து உருகிச் சொன்னார் எம்ஜிஆர். சின்னப்பா தேவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
No photo description available.
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...