Sunday, October 29, 2023

தேவரின் ... #தங்க_கவசம்: #முடிவு_கிடைக்காமல் #தொடரும்_சர்ச்சை !

 

♦பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட ..
♦13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறுவது யார் என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பினர் ..
♦ஒவ்வோர் ஆண்டும் உயர் நீதிமன்றத்தை நாடி நீதிமன்றம் வழங்கும் உத்தரவின் அடிப்படையில் ...
♦கவசம் பசும்பொன்னில் உள்ள தேவருக்கு பொருத்த எடுத்துச் செல்லப்படுகிறது.
♦முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசம் தொடர் சர்ச்சையாக மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
♦முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் யாருக்கு உள்ளது என்பதைக் காட்டவே ஓ.பி.எஸ், ஈபிஎஸ் தரப்புகள் கவசத்திற்கான உரிமையைக் கோருகின்றனரா?
♦விடுதலைப் போராட்ட வீரரும் ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவருமாக இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ..
♦நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.
♦இது தவிர மீனாட்சி அம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோருக்காக ஆலையப் பிரவேசம்,
♦தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தனது சொத்துகளை எழுதி வைத்தது ஆகிய செயல்களையும் மேற்கொண்டார்.
♦முத்துராமலிங்கத் தேவர் கடந்த 1963ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் மறைந்தார்.
♦அதன் பிறகு அவரது உடல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்டோபர் 30ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
♦அதன் பிறகு தொடக்கத்தில் ஆண்டுதோறும் அவர் வழிநடத்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், கிராம மக்கள் குருபூஜை நடத்தி வழிபாடு செய்து வந்தனர்.
♦பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவை அரசு விழாவாக எம்.ஜி.ஆர். அறிவித்தார்.
♦அதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும் ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று நேரில் பசும்பொன்னுக்கு சென்று தங்களது மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.
♦பசும்பொன்னில் உள்ள அவரது சிலைக்கு முழு தங்க கவசம் வழங்கப்படும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 2010ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அறிவித்தார்.
♦அதன்படி 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி அதிமுக சார்பில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை ...
♦பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவித்து அதற்கான பொறுப்பை பசும்பொன் நினைவிடப் பொறுப்பாளரிடம் வழங்கினார்.
♦தேவருக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள பொதுத்துறை வங்கியில் (Bank Of India) வைக்கப்பட்டு ...
♦ஒவ்வோர் ஆண்டும் தேவர் குருபூஜைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு பொறுப்பாளர் மற்றும் அதிமுகவின் பொருளாளர் கையெழுத்தைப் பெற்று அரங்காவலர் பாதுகாப்பில் குரு பூஜை விழாவிற்காக எடுத்துச் செல்லப்படும்.
♦பிறகு விழா முடிந்ததும் மீண்டும் வங்கிக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு வைக்கப்படும்.
♦தங்கக் கவசம் வழங்கியபோது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதை முத்துராமலிங்கத் தேவர் மணிமண்டபத்தின் பொறுப்பிலேயே கொடுத்திருந்தார்.
♦ஆனால், தங்க நகைகள் என்பதால் அதில் ஏதேனும் குளறுபடிகள் நிகழ்ந்து விடக்கூடாது என்று காந்தி மீனாள் அதை ஏற்க மறுத்து ...
♦அதிமுகவில் ஒருவரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
♦அதனால், அதிமுக பொருளாளர் கையெழுத்திட்ட பிறகு அதை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் விதமாக வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு வைக்கப்பட்டது.
♦ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அதிமுகவின் பொருளாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கையெழுத்து இட்டு தேவரின் தங்கக் கவசத்தைப் பெற்று வழங்கி வந்தார்.
♦அதன் பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது.
♦அந்நேரத்தில் அதிமுக கட்சியின் பொதுக்குழு, எடப்பாடி கே. பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராகவும் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராகவும் தேர்வு செய்தது.
♦மேலும் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
♦இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மதுரை உயர்நீதிமன்றத்தில் யார் பொருளாளராக கையெழுத்து இட்டு தங்கக் கவசத்தைப் பெறுவது என வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
♦கடந்த ஆண்டு இருவரும் தங்களுக்குத்தான் அதிமுக பொருளாளர் உரிமை உண்டு எனப் பல ஆவணங்களைச் சமர்பித்தனர்.
♦ஆனால் நீதிமன்றம் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி
♦மதுரை, ராமநாதபுரம் இரு மாவட்ட டி.ஆர்.ஓ-கள் தங்கக் கவசத்தைப் பெற்று மீண்டும் பாதுகாப்பாக வங்கியில் வைக்க உத்தரவிட்டது.
♦அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த ஆண்டு தேவரின் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து பெற்றிடும் உரிமையைத் தனக்கு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.
♦இந்த வழக்கு கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
♦அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி இதற்கு ஓ.பி.எஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.
♦உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் அதை அங்கே பார்த்துக் கொள்ளும் படியும்,
♦தற்போது அதிமுகவின் பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன், தேவர் மணிமண்டப பொறுப்பாளர் ஆகியோர் இணைந்து தங்கக் கவசத்தைப் பெற்றுக் கொள்வார்கள் எனவும் உத்தரவு வழங்கினார்..
♦முத்துராமலிங்கத் தேவர் முதலில் எங்கள் கட்சியின் தலைவர். மறைந்தது முதல் ஃபார்வர்டு பிளாக் கட்சி, கிராம மக்கள் சார்பில் மரியாதை செய்து வந்தோம்.
♦அதன் பிறகுதான் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் அரசியலுக்காக நேரில் வந்து தங்களின் மரியாதையைச் செலுத்த வேண்டி சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
♦அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கக் கவசத்தை அளித்தார்.
♦தற்போது ஒவ்வோர் ஆண்டும் நீதிமன்றம் சென்று தங்கக் கவசத்தைப் பெற்று தேவருக்கு அணிவிக்க வேண்டிய சூழல் உள்ளது.
♦இது அவரது புகழுக்கு நெருடலை ஏற்படுத்தும். எனவே, அதிமுக தாமாக முன்வந்து தங்கக் கவசத்தை அரசிடம் ஒப்படைத்து,
♦அரசின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் அதைப் பெற்று பொருத்த வேண்டும்.
♦அதுவே அவருக்கு அதிமுக சார்பில் செய்யும் கூடுதல் மரியாதையாக இருக்கும்," எனக் கூறுகிறார் பார்வார்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன்.
♦இந்நிலையில், தங்கக் கவசம் விவகாரம் அதிமுக தான் முடிவு செய்யும் என்கிறார் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்திமீனாள்.
♦ஆனால், ஓ.பி.எஸ் தந்த வெள்ளிக்கவசத்தை பசும்பொன் நினைவிடம்தான் பாதுகாத்து பராமரித்து வருகிறது..
♦பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவச் சிலைக்கு 10.4 கிலோ எடை கொண்ட வெள்ளிக் கவசத்தை கடந்த 2022ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.
♦அதிமுக சார்பில் வழங்கிய தங்க கவசத்தை, கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த இரு ஆண்டுகளாக நீதிமன்றம் சென்று பெற்று வருகிறோம்.
♦இந்நிலையில், அந்தக் கவசத்தின் முழு பொறுப்பையும் பசும்பொன் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது குறித்து அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும்.
♦மூத்த பத்திரிக்கையாளர் கார்த்திகேயன், "திராவிட கட்சிகள் எந்த நேரத்திலும் விடுதலைப் போராட்ட வீரர்களை சாதிய தலைவர்களாகப் பார்த்தது கிடையாது.
♦ஆனால், அதிமுக முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அதிகமாகத் தங்கள் பக்கம் இருப்பதை உறுதி செய்ய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்க கவசம் வழங்கியது.
♦ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக சந்தித்த 2019, 2021 ஆண்டு தேர்தல்களில் முக்குலத்தோர் சமுதாயத்தின் வாக்குகள் 10% முதல் 15% வரை சரிவைச் சந்தித்தது,"
♦இந்த நிலையில், மேற்கு மாவட்டத்தைத் தாண்டிய வாக்குகளைத் தன்னால் பெற முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே ..
♦எடப்பாடி பழனிசாமி தங்கக் கவசத்தின் மீது அதீத கவனம் செலுத்துவதாகவும் கூறுகிறார் கார்த்திகேயன்.
♦அதிமுகவில் கவுண்டர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் சாதி ரீதியாக கட்சி பிளவுபட்டு இருப்பதைத் தவிர்க்கவும்,
♦மேற்கு மாவட்டத்தைத் தாண்டி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைத் ..
♦தன்னாலும் பெற முடியும் என்பதைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் கூறுகிறார்.
♦அதற்காகத்தான் தென் மாவட்டத்தைக் குறி வைத்து மதுரையில் அதிமுகவின் மாநில மாநாடு,
♦பசும்பொன் தேவருக்கு இந்த ஆண்டு நேரில் சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...