Friday, February 5, 2016

வெண்குஷ்டம் நோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

தோல் நோய்களில் மிகவும் கடுமையாக, கொடுமையாக உள்ளத்தைபாதிக்கும் தோல் நோய் எதுவென்றால் அது வெண் குஷ்டம்தான்! இதற் குப் பிறகு தான் “சோரியாஸிஸ்’ என்கிற, மிகவும் அரிப்புடன் கூடிய, தற் கொலை செய்யக் கூட தூண்டக் கூடிய செதில் படை நோய் வருகிறது. இந்த வெண் குஷ்டத்தால் உடலுக்கு ஒரு துளி பாதி ப்பும் இல்லை என் றாலும், அக்கம், பக்கம், உற்றார், உறவினர் கேட்கும் போதும், பார்க்கும் போதும் ஒரு குற்ற உணர்வு ஏற்படும்.
வெண்குஷ்டம் காரணமாக ஒருவரின் உடல் நலமோ அல்லது அவருடன் தொட ர்புடையவர்களின் உடல் நலமோ எந்த விதத்திலும் பாதிக்கப் பட மாட்டாது. அது தொற்று நோயும் அல்ல. உலகில் “விடிலி கோ’ எனப் படும் வெண்படை நோய் ஒரு சதவீத மக்களிடம் மட்டுமே காணப்படுகி றது.
இந்த நோய் காரணமாக ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பாதிக் கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களி ல் 30 முதல் 40 சதவீத நோயாளிகளின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் இந்நோய் வர வாய் ப்பு உண்டு. அன்றாட வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் சில நிகழ்வுகளும், பழக்க வழக்கங்களுமே இந்த நோய் வர காரணமாக உள்ளன.
உதாரணமாக அடிக்கடி உராய்வுக் காயங்கள் ஏற்படும் கால் மூட்டு, கை மூட்டு, மணிக்கட்டு போன்ற இடங் களில் வெண் குஷ்டம் வரலாம். சிறிய வெட்டுக் காயங்கள், நகம் கொண்டு பிராண்டிய இடங்களிலு ம் இந்த நோய் வரலாம். பெண்கள் தரமற்ற குங்குமப் பொட்டை வை த்துக் கொள்வதால் நெற்றியிலும், பிளாஸ்டிக் மணி பர்ûஸ வைத்துக் கொள் பவர்களுக்கும் வெண்குஷ்ட ம் வர வாய்ப்பு உண்டு.
மேலும் சிலர் அணியும் ரப்பர் செ ருப்புகளால் கால்களிலும், மூக்குக் கண்ணாடியின் சட்டம் படும் காதுப் பகுதிகளிலும், இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வா ர் நாடாக்களின் அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப் பு அதிகம். சூரிய ஒளி அதிகம் படும் முக ம், முதுகு, கைகளில் தான் வெண் குஷ் டம் முதலில் அதிக மாக தெரிய வரும். தொடக்கத்தில் முகம், அக்குள், தொடை இடுக்குகள், மார்பகக் காம்பு, பிறப்பு உறு ப்பு ஆகியவற்றில்தான் அதிகமாக வெண் குஷ்டம் ஏற்படும்.
பொதுவாக, இந்த வெண்படை உடலின் இரு பக்கங்களிலும் காணப்படும். எனினு ம் சில நேரங்களில் ஒரு பக்கமாகவோ அல்லது ஒரு குறிப் பிட்ட நரம்பு மண்டல த்தின் பகுதியிலோ காணப்படும். சிலருக் கு இந்த நோய் ஏற்பட்டு அது பல காலம் அப்படியே இருக்கும். சிலருக்கு மெது வாகப் பரவலாம். மற்று சிலருக்கு அது மடமடவெனப் பரவி உடலின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கலாம்.
மனிதனின் தோலுக்கு நிறம் கொடுக்கும் பொருள் “மெலனின்’ எனப்ப டும் நிறமி. மெலனின் நிறமியின் அடர்த்தியைப் பொருத்து, அது அதிகம் இருந்தால் தோ லின் நிறம் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளு ப்பாகவும் அமைகிற து. இந்த மெலனின் – மெலனோசைட் டுகள் என்ற சிறப்புச் செல்களை தயாரிக் கின்றன. தோலின் மேற்பரப்பில் அமை ந்துள்ள “எபிடெர்மிஸ்’ என்ற பகுதியில் மெலனின் நிறமிகள் உள்ளன. வெண்குஷ்டத்தால் பாதிப்புக்குள்ளான பகுதியில் சிறப்புச் செல்களானமெலனோசைட்டுகள், அழிக்கப்படுவதா ல் மெலனின் நிறமிகள் போதிய அளவு தயாரிக்கப்படுவதில்லை. எனவே அந்தப் பகுதி நிறமற்ற வெளு ப்பாக மாறுகிறது.
இந்த நோய் ஏற்பட்டதற்கான புறக்கார ணங்கள் தெரிந்தால் அவற்றைத் தவிர்க் க வேண்டும். உதாரணமாக குங்குமம் வைப்பதால் நெற்றியில் அந்த இடம் வெளுப்பாகத் தெரிந்தால் குங்குமத்துக்குப் பதிலாக வேறு பொருளைப் பயன்படுத்த வேண்டும். செருப்பு, உள்ளாடைகள் போன்ற வற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...