Wednesday, December 27, 2017

இன்று நான் உங்களைிடம் மரசெக்கு என்ற பெயரில் நடத்தப்படும் முறைகேடுகளை பற்றி ஒரு சிறப்பு பார்வை.

இன்று நான் உங்களைிடம் மரசெக்கு என்ற பெயரில் நடத்தப்படும் முறைகேடுகளை பற்றி ஒரு சிறப்பு பார்வை.
1. இன்று பெரும்பாலானோர் எந்த மரத்தில் ஆட்டபடுகிறது என்று தெரியாமல் வாகை மரம் என்று கூறி வருகின்றனர்.
2. இன்று நான் நிறைய ஊர்களில் உள்ள பலசரக்கு கடைகளில் ( Provisional & Department Stores ) பார்ப்பது " செக்கு எண்ணெய்கள் " விற்பனை என்பதே !!! இது மரசெக்குல் பிழியப்பட்ட எண்ணெய் அல்ல என்பதாகும் !!!
3. எண்ணெய் பயன்படுத்தும் வித்துகள் நல்ல தரமான வித்துகளில் இருந்து தயாரிக்கபடுகிறதா என்று அறிய வேண்டும்.
4. தரமற்ற பிஞ்சு வித்துகள் மற்றும் கசப்பு வித்துகள், வண்டுகள் விழுந்த வித்துகள் சேர்த்து ஆட்டபட்டு அதில் நிறமூட்டிகள் மற்றும் மணமூட்டிகள் சேர்க்கப்பட்டு விற்கப்படும்.
5. அனைத்து வேர்கடலை வித்துகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட பயன்படுத்துவது கிடையாது குறிப்டும்படியான இரண்டு வகையான நாட்டு வேர்கடலை வித்துகளில் இருந்து மட்டும் தான் எண்ணெய் பிழியப்படும் ஆனால் இன்று பெரும்பாலான நவீன மரசெக்கு வியாபாரிகள் எந்த வித்துகளில் இருந்து எண்ணெய் பிழியபட வேண்டும் என்பதே தெரியவில்லை!!!. அவர்கள் நமது அறியாமையை தான் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
மிகவும் கவலைக்கிடமான விஷயம் என்னவென்றால் தண்ணீர் பாய்ச்சி விளைவிக்கும் வேர்கடலையே ஆட்டபடுகிறது என்பதே !!!
6. எள் வகைகளில் இரண்டு மட்டுமே உள்ளது 1. கருப்பு 2. செவ்வெள் , மூன்றாவதாக இன்று உள்ள நவீன விவசாய விஞ்ஞானிகள் உருவாக்கிய வெள்ளை நிற எள் ( இது மரபணு மாற்றப்பட்ட வித்துகள் ) இதை தவிர்பதே நல்லது, ஆனால் இன்று இதில் இருந்தும் எண்ணெய் பிழியப்பட்டு எண்ணெய் விற்பனை செய்யபடுகிறது.
7. எள்ளில் இருந்தும் எண்ணெய் பிழிய பனை கருப்பட்டியை தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் சில நவீன மரசெக்கு வியாபாரிகள் மண்டை வெல்லம் என்று சொல்லப்படும் கரும்பு வெல்லம், நாட்டு சர்க்கரை , சீனி சர்க்கரை, இதற்கும் மேலாக சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளான மொழசேஸ் ( Molasses ) சேர்த்து ஆட்டபடுவதே மிகவும் வேதனைகுரியது ஆகும்.
8. இதற்கு அடுத்தபடியாக பாரம்பரிய முறைப்படி சுத்திகரிப்பு செய்ய மூன்று நாட்கள் தேவைபடும். அதில் எந்த வகையான இரசாயன சேர்ப்பு அல்ல , நவீன ரக இயந்திரங்கள் அல்ல. தூய செம்பு பாத்திரங்களும் மற்றும் பொறுமையும் தான் மிக முக்கியம். ஆனால் நவீன மரசெக்கு வியாபாரிகள் 40 நிமிடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்யபடுகிறது இதற்காக அவர்கள் பயன்படுத்துவது நச்சுக்கள் நிறைந்த இராசயானம் பயன்படுத்தபடுகிறது.
9. இதை எல்லாம் விட பாக்கேட் ரீஃபைண்ட் எண்ணெய்களை விட நமது மூதாதையர்கள் பயன்படுத்திய எண்ணெய் வித்துக்கள் தான் சிறந்தது என அவர்கள் வழியே மகேசன் வழி என நாம் பின்பற்ற தொடங்கி விட்டோம்.
ஆனால் கோல்மால் செய்தே பழக்கப்பட்ட சில நயவஞ்சகர்கள் இன்று நமது நாட்டு கடலை வித்துகளை விட்டு மிக மலிவாக கிடைக்கும் குஜராத், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் விளையும் பீனட் எனப்படும் மரபணு மாற்றப்பட்ட வேர்கடலை வித்துகளை வாங்கி வந்து அதில் எண்ணெய் பிழிந்து எடுத்து விற்பனை செய்யபடுகிறது.
10. இந்த மரபணு மாற்றப்பட்ட வித்துகளில் நமது நாட்டு வேர்கடலையை விட அதிகமாக எண்ணெய் அவர்களுக்கு கிடைக்கும். ஆனால் விலை குறைபாட்டு இல்லை. அதே போல் மரபணு மாற்றப்பட்ட மேற்கு வங்காளத்தில் இருந்து இறக்குமதி செய்ய இருக்க கடுகை எதிர்த்து இயற்கை தன்னார்வல இயங்க்கங்கள் போராடி கொண்டு இருக்க , சத்தமில்லாமல் மரபணு மாற்றப்பட்ட எள் வித்துகளை இறக்குமதி செய்து அதில் இருந்து எண்ணெய் ஆட்டி எடுத்து விற்பனை செய்யபடுகிறது.
11. ஏனென்றால் பீனட் எனப்படும் வேர்கடலை பார்பதற்கு முந்திரி பருப்பு போல் பெரியதாக இருக்கும் , நமது அறியாமையை இங்கும் பயன்படுத்தி கொள்கின்றனர்.
12. மரபணு மாற்றப்பட்ட வித்துகளில் திடம் மற்றும் சுவை குறைவாக தான் இருக்கும்.
திடம் குறைவாக இருந்தால் எண்ணெய் மிகவும் விரைவில் காலியாகிவிடும். அதாவது நிறைய எண்ணெய் குடிக்கும்.
13. தேங்காய் கொப்பரை வெள்ளை நிறமாகவும் இருப்பதற்கும் , தேங்காய் மிக விரைவில் உளர்ந்து போவதற்கும் சல்பர் பயன்படுத்தபடுகிறது.
14. இரும்பு செக்குகளில் ஆட்டப்படும் தேங்காய் எண்ணெயில் ஹைட்ரஜன் பென்ஜோயேட் கலப்படம் செய்யப்பட்டு மரசெக்கு நிறத்தில் கிடைக்கும்.
15. கோவில்களில் இடப்படும் சிதறுகாய்கள், விளக்கு ஏற்றபடும் காய்கள் அனைத்தும் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படும்.
இதன் விளைவுகள்.
1. மணமூட்டிகள், நிறமூட்டிகள் பயன்படுதுமையால் நமக்கு கிடைக்கும் பெரிய வெகுமதி வயிற்று புற்றுநோய், குடல் புற்று நோய்.
2. மண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை, சீனி சர்க்கரை பயன்படுத்துமையால் ஒவ்வாமை, அலர்ஜி, சூட்டை கிளப்பி விடுதல் , இதற்கான காரணம் எள் குளிர்ச்சி தர கூடியது பனை கருப்பட்டியும் குளிர்ச்சியைதான் அளிக்கும் ஆனால் கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பொருட்கள் அனைத்துமே உடலுக்கு சூட்டை தரக்கூடியதாகும்.
நமது மூதாதையர்கள் கூற்றுப்படி ஒரு பொருளில் ஒரே வினைகள் உள்ள பொருளை சேர்க்கபட்டால் தான் அது நமது உடலுக்கு தகும். எதிர்வினை பொருட்களை சேர்த்தால் நோய் தான் மிஞ்சும். நமது மூதாதையர்கள் விஞ்ஞானிகள் அல்லவா !!!
3. வெள்ளை எள் எண்ணெய் கசப்பு தன்மையற்று ருசியாக தான் இருக்கும் அதாவது எலும்புகள் குறைந்த பிராய்லர் கோழிகள் எப்படி உடலுக்கு தீங்கோ அதுபோல இந்த வெள்ளை எள் எண்ணெய் உடலுக்கு உகந்தது அல்ல!!!.
4. பிஞ்சு , கசப்பு வேர்கடலைகளில் இருந்து எடுக்கபடும் எண்ணெய் வகைகளில் பித்தம் அதிகம் என கூறுவர். அதே போல் பிஞ்சு, சொத்தை எள்களில் வாதம் அதிகமாக இருக்கும்.
5. பாரம்பரிய முறைப்படி செய்தால் எண்ணெய் அதிக நாட்கள் சிக்கு வாசனை வராமல் பாதுகாக்கலாம். இராசயானம் பயன்படுத்தினால் உடலுக்கு கேடு தான்.
6. மரபணு மாற்றப்பட்ட வேர்கடலை மற்றும் எள்ளை பயன்படுதினாலும் கேடு தான். பிராய்லர் கோழியும் மரபணு மாற்றப்பட்டவை தான். அதில் கறி அதிகமாக கிடைக்கும், இதில் எண்ணெய் அதிகமாக கிடைக்கும். இயற்கைக்கு புறம்பானது என்பது என்றுமே ஆபத்து தான் !!! உடலுக்கு கேடே!!!
7. மரச்செக்குகளில் ஆட்டினால் மட்டும் போதாது ! ! கண்ணை கவரும் பாட்டில் மற்றும் ஸ்டிக்கர் மட்டும் போதாது ! ! எண்ணெய் தரமானதாக இருக்க வேண்டும் ! ! அதுவே மிக மிக முக்கியம். எங்களை போல் உள்ள உண்மைவாதிகளுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து பாருங்கள் !!
சமையல் நிறுவனம் ஒரு தொகுப்பு
1. பழங்கால மரசெக்கு தான் பயன்படுத்தபடுகிறது. இரண்டு வகையான வித்துகளுடைய எண்ணெய் தயாரிப்பதற்கு இரண்டு தனி தனி மரசெக்குகள் உள்ளது.
2. இயற்கையான பாரம்பரிய முறைப்படியான சுத்திகரிப்பு . புலகத்திற்கு செம்பு, பித்தளை பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்தபடுகிறது.
3. எந்த வகையான இரசாயனம் , மணமூட்டிகள், நிறமூட்டிகள் சேர்ப்பு அறவே கிடையாது.
4. நல்ல தரமான , திரண்ட நமது நாட்டு வித்துகளை மட்டுமே பயன்படுத்தபடுகிறது. மரபணு மாற்றப்பட்ட வித்துகளை அறவே பயன்படுத்துவதில்லை.
5. சுண்ணாம்பு குறைத்து சேர்க்கப்பட்ட வேம்பாரூ நயம் பனை கருப்பட்டியை தான் எள்ளுடன் நல்லெண்ணய் பிழிய சேர்க்கபடுகிறது.
6. முற்றிய தேங்காய் வித்துகளை எங்கள் உறவினர்கள் தோட்டத்தில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு நன்றாக வெயிலில் 18 நாட்கள் காயவைத்து அதற்கு பிறகு செக்கில் இட்டு ஆட்டபடுகிறது.
7. இதை அனைத்தையும் விட நாங்கள் தமிழக விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்களுக்கு தேவையான வித்துகளை நாங்களே விளைவித்து கொள்கிறோம். அதிக தேவைக்கு எனது உற்றோர், உறவினர்கள், நண்பர்கள் விளை நிலங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறோம்.
இங்கு விவசாய இடைத்தரகர்கள் இல்லை !! இங்கு வியாபார இடைத்தரகர்கள் இல்லவே இல்லை !!! நேரடியாக பல தலைமுறையாக இந்த ஆட்டும் தொழிலை செய்பவர்கள்.
எங்கள் எண்ணெய் வகைகள் நுரைக்காது, வெடிக்காது, கருகினபுகை வராது, கசக்காது, கரிக்காது இது அனைத்தும் தரமற்ற பொருட்களும், கலப்படம் பயன்படுத்துமையால் வரக்கூடியது. எங்கள் பொருட்களில் இது வராது என்பதற்கு நாங்கள் உறுதி தருகிறோம்.
எங்கள் மரசெக்கு எண்ணெய் வகைகளில் நிறைவான மணம் ! ! சரியான திடம் ! ! உண்மையான நிறம் ! ! திருப்திகரமான சுவை! !
எங்கள் தரமான வித்துக்கும் செக்குக்குரிய சிறிய அளவிலான பராமரிப்பு செலவுக்கும், எனக்கு தகுந்த சொற்ப லாபம் போதும் , அதுவே எனக்கு நிறைவானதாகும் ! ! !
எனது இனிய நண்பர்களே, ஒரு நிமிடம் நீங்கள் எந்த நோக்கத்திற்காக நமது மூதாதையர்கள் பயன்படுத்திய எண்ணெய் வகைகளை மறுபடியும் பயன்படுத்த தொடங்கினீர்கள் என்பது ஒரு நிமிடம் யோசித்து பார்த்துவிட்டு ஒரு தடவை எங்களுக்கு ஒரு வாய்ப்பை நல்கி பாருங்கள் !!!
வாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷியே எனது ஆத்மார்த்தமான குரு அவரது கூற்றுப்படி என்னால் முடிந்த அளவுக்கு எனது சேவையை இந்த சமுதாயத்திற்கு அர்பணிக்கிறேன்! ! !
எங்கள் நோக்கம் உயர்ந்த தரம் !! குறைந்த லாபம் !! உங்கள் ஆரோகியத்தை என்றுமே பேணி பாதுகாப்போம் !!! உங்கள் வாழ்த்து !!
நமது சமையல் நிறுவனத்து மரசெக்கு கடலெண்ணய் ரூ. 230 ; இரசாயனமற்ற பனை கருப்பட்டி சேர்க்கப்பட்ட மரச்செக்கு நல்லெண்ணய் ரூ.260 மற்றும் மரச்செக்கு தேங்காய் எண்ணெய் ரூ. 260 மட்டும் தான்.
வாழ்க வளமுடன் !! வாழ்க வளமுடன்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...