Thursday, December 28, 2017

தமிழக மக்கள் இப்பொழுது விழித்துக்கொண்டு இருக்கிறார்கள் .

ஓட்டுக்கு 3000 ரூபாய் கொடுத்தும் கோபாலபுரத்தில் இருந்த கருணாநிதியை அறிவாலயம் அழைத்து வந்தும் அழைத்து வந்த அடுத்தநாள் கருணாநிதி ஆர்கே நகர் வெற்றி விழாவுக்கு வருவார் என்று சொல்லியும் திமுக 2016 இல் வாங்கிய 57673 ஓட்டுகளில் இருந்து 24651 ஓட்டுக்கு இறங்கிவந்தது. இதற்கு என்ன காரணம்.
1. கருணாநிதி குடும்பத்தின் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை
2. ஸ்டாலின் உடனே முதலமைச்சர் ஆகவேண்டும் எங்கிற ஆசையை மக்கள் விரும்பவில்லை
3. தேர்தல் அன்று வந்த 2G ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பை தமிழக மக்கள், இவர்கள் தப்பித்து விட்டார்கள் என்றுதான் பார்த்தார்களே ஒழிய இவர்கள் நிரபராதி என்று நினைக்கவில்லை.
4. தெருவில் நடந்து போகும் பாத்து இளைஞர்களை கூப்பிட்டு விசாரித்துப் பாருங்கள் அவர்களில் ஒருவர்கூட திமுக என்று சொல்ல மாட்டார்கள்.
5. சட்டசபையில் ஸ்டாலின் நடவடிக்கைகளை இந்த மக்கள் ஏற்கவே இல்லை. சபைக்குள் உள்ளே போனால் உடனே வெளியே வந்துவிடுவதை இந்த மக்கள் விரும்பவே இல்லை
5. இந்த நிலையில் இருக்கும் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதை தமிழக மக்களில் அந்த காட்சி காரர்களைத்தவிர வேறு யாருமே விரும்ப வில்லை. எல்லோரும் மனிதர்கள்தானே நினைத்து பார்க்க மாட்டார்களா என்ன?
6. ஸ்டாலினின் மேடைக்கு மேடை இன்னும் 3 மாதத்தில் ஆட்சி மாறுகிறது 6 மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்கிறது என்கிற பேச்சை இந்த மக்கள் விரும்பவே இல்லை.
7. இந்த டிவிக்காரர்கள் ஸ்டாலினுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் திமுகவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் ஸ்டாலின் படத்தை காட்டுவதையும் இந்த மக்கள் விரும்பவில்லை. பல வீடுகளில் செய்தி வாசிப்பவர்கள் திமுக ஸ்டாலின் என்று காதில் கேட்டவுடன் வேரு சேனலுக்கு மாற்றி விடுவார்கள். .
8. சர்க்காரியா கமிஷனைப்பற்றி மறக்காதவர்கள் தமிழ்நாட்டில் நிறையபேர் இன்னும் உண்டு.
9. இலங்கை பிரச்னையின்போது கருணாநிதி நடந்துகொண்டவிதத்தை மக்கள் நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
ஆர்கே நகர் மக்களைப்போல் தமிழக மக்கள் இப்பொழுது விழித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..

1 comment:

  1. RK nagar makkal vizhithu kollavillai oru mayakkathil irunthu inoru mayakkathukku senrarkal affvalavea.

    ReplyDelete

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...