Thursday, December 28, 2017

அதிமுகவில்_களையெடுக்கும்_பணி_தொடர்கிறது...???

ஜெயலலிதா அம்மையாருக்கு துரோகமிழைத்து ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்ததாக சசிகலா உள்ளிட்ட 420 தினகரனின் மன்னார் குடி மாஃபியா கும்பலை ஜெயலலிதா அம்மையார் கட்சியைவிட்டு தூக்கி எறிந்தார். பிறகு சசிகலாவின் நாடகத்தை நம்பி அவரை மட்டும் கட்சியில் சேர்த்து க்கொண்டார். 420 தினகரன் உள்ளிட்ட மன்னார் குடி மாஃபியா கும்பலை சேர்ந்த எவரையும் கட்சில் சேர்த்துக்கொள்ளவே இல்லை. அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத 420 தினகரன் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற அனைத்து தகிடுதத்தங்களையும் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு துணை போகும் துரோகிகள் தினகரன் ஆதரவு நிர்வாகிகளை களையெடுக்கும் பணியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி,ஆகியோர் இறங்கியுள்ளனர்.ஆர்கே நகர் தேர்தல் முடிவுக்கும் அடுத்த நாளே வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டனர்.
இன்றும் பல மாவட்டங்களைச் சேர்ந்த புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர்களை நீக்கி அதிமுகவின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, புரட்சித் தலைவி அம்மா பேரவையைச் சேர்ந்த விழுப்பும் தெற்கு செயலாளர் ஞான மூர்த்தி, தருமபுரி மாவட்ட செயலாளர் தென்னரசு, நீலகிரி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், புறநகர் மாவட்ட செயலாளர் சமயபுரம் ராமு, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை, தேனி மாவட்ட செயலாளர் ஸ்டார் எம்.ரபீக் ஆகியோர் அ.தி.மு.க வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் மொத்தம் 44 நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நீக்கம் தொடரும் என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள்.
இது காலம் கடந்த செயல் என்றாலும்கூட... அதிமுகவின் உண்மைத்தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் இதை வரவேற்கிறார்கள்..!!! (28 -12 -2017 - வியாழக்கிழமை)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...