Monday, August 20, 2018

பெரும்பாலான_அசைவ #உணவகங்களில் #குறிப்பிட்டிருக்கும் (100% )#ஹலால் #என்றால்_என்ன.????

நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது
சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன???
சுருக்கமாக ஹலால் என்பது கால்நடைகளை
அறுக்கும் போது அதன் கழுத்து பகுதி முழுவதும்
அறுபடாமல் மூளைக்கு செல்லும் நரம்பு வரை
அறுபதால் ,அதன் வலியை உணர்த்தும் நரம்புகள்
துண்டிக்க பட்டு வலியை உணராமல் இருக்க செய்வதே
ஹலால் ஆகும் . இப்படி அறுக்கும் போது அதன் முழு
ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல்
தடுக்கபடுகிறது. இதற்கு மற்றுமொரு காரணம்
இறைவன் அனுமதி படி அறுபது என்பது பொருள்.
A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது
வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.
கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது
வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது
கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக்
குறைவாகவே வலியை உணருமாறு – மிக
வேகமாக அறுக்கப்பட வேண்டும்.
B. மேற்படி ஹலால் முறையில் கால்நடைகளை
அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும்
இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு –
கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு
மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம்
முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.
இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் ?
அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் – இரத்தக்
குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க
வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது
தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் – இதயத்திற்கு
செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு – இதயம்
நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால்
இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக்
கூடும்.
D. கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக
காரணமாக அமைவது இரத்தமே !
கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக
காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே.
ஹலால்முறையில் கால்நடைகளை அறுக்கும்போது
– கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும்
வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள்
உருவாவதில்லை.
E. . ஹலால் முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின்
இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியில்
இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் – வேறுவிதமாக
கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட
ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட
நேரம் கெடாமல் இருக்கும்.
F. ஹலால் முறையில் கால்நடைகளை
அறுக்கும்போது – கால்நடைகள் வலியை
உணர்வதில்லை.
இதன் முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொ
ழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக
வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக்
கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை
உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து
வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் –
இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும்
மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் –
துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத்
தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.
இதை உண்மை படுத்தும் விதமாக ஹலால் முறையில்
அறுக்க பட்ட உயிரினமும் ,வேறு விதமாக (தலைதுண்டிக்கப்பட்டு ) அறுக்க பட்ட உயிரினங்களை விட
ஹலால் கால்நடைகள் மிக குறைந்த (painless dead ) வலியை உணர்வதாக ஆராய்ச்சியில்
தெரியவந்துள்ளது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...