Monday, August 27, 2018

பெண் நீதிபதி அதிரடி – வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால்.

பெண் நீதிபதி அதிரடி – வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால்

பெண்  நீதிபதி அதிரடி – வயதுக்கு வந்த பெண்ணை திருமணத்துக்குமுன் காதலன் ஏமாற்றினால்
திருமணத்துக்கு முன் காதலன் ஏமாற்றினால் உறவுக்கு விருப்பம் தெரிவித்த  பெண்தான்
பொறுப்பு ஏற்க வேண்டும்: பலாத்கார வழக்கில் மும்பை உயர்நீதி மன்றம் தீர்ப்பு ( #Mumbai #HighCourt #Judge #Judgement #SexBeforeMarriage )
திருமணம் செய்வதாகக் கூறி உறவுகொண்டபின் காதலன் ஏமாற்றி னால், உறவுக்கு விருப்பம் தெரிவித்த படித்த பெண்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பாலியல் பலாத்கார வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையைச்சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் காதலன் திருமணம் செய்வதாகக்கூறி தன்னை தூண்டி உறவுகொண்டு விட்டு ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்றுகோரி 21 வயது காதலன்மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மிருதுளா பக்த்கர் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளிப்பதை, உறவுக்கு தூண்டி யதாக ஒவ்வொரு பலாத்கார வழக்கிலும் கருதமுடியாது. படித்த இளம் பெண் திருமணத்துக்கு முன்பாக பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளித் தால், அவருடைய முடிவுக்கு அவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
உறவுக்கு இளம்பெண் தூண்டப்பட்டார் என்பதை நம்புவதற்கு முகாந்தி ரமாக ஆதா ரங்கள் இருக்க வேண்டும். எனவே, இதுபோன்ற வழக்குக ளில், திருமண ஆசை காட்டி ‘தூண்டினார்’ என்று கூறமுடியாது.
இந்த சமுதாயம் மாறி வருகிறது. அதேவேளையில் பல நடத்தை நெறிக ளை இந்த சமுதாயம் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக திருமணத்தின்போது கற்புடையவளாக இருக்க வேண்டியது பெண்ணின் பொறுப்பு என்று காலம்காலமாக கூறப்பட்டு வருகிறது. இந்த சமுதாயம் பல நம்பிக்கைகளில் இருந்து விடுபட முயற்சித்தாலும், திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவை கண்டிக்கிறது.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு முன்ஜாமீனும் வழங்கி நீதிபதி உத்தர விட்டார். மேலும், ‘படித்த, வயதுக்கு வந்த பெண்கள் திருமணத் துக்கு முன்பு உறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என்ற முந்தைய தீர்ப்பையும் நீதிபதி மிருதுளா சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...