Wednesday, August 15, 2018

திருதராஷ்டிரன் போல் மகன்கள் முட்டிக்கொள்வதை பார்த்தவரும் கூட.

திரு சோ அவர்கள் கூறிவந்ததுபோல் கருணாநிதி தக்க சமயத்தில் ஸ்டாலின்-க்கு முடிசூடியிருக்கவேண்டும். பதவி ஆசை அவர் கண்ணை மறைத்தது. அதை தன் மகனுக்கு விட்டுக்கொடுக்கவும் விரும்பவில்லை. ஸ்டாலின் கட்சிக்காக சிறுவயதிலிருந்தே தொண்டனாய் கஷ்டப்பட்டு படிப்படியாய் கட்சிக்குள் முன்னேறி செயல் தலைவர் பதவியை பிடித்தார். இளைஞரணி செயலாளராய் நிறைய ஆண்டுகளும், பொருளாளராக சில ஆண்டுகளும் பொறுப்பு வகித்த பின்னரே அவருக்கு இந்த செயல் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. கருணாநிதி உடல்நிலை நன்றாக இருக்கையிலேயே ஸ்டாலின்ஐ தலைவராக்கி அழகு பார்த்திருப்பாரேயானால் அவர் சமாதி ஈரம் காயும் முன்னரே தொடங்கிவிட்ட தொந்தரவுகள் நிச்சயம் இருந்திருக்காது. அழகிரி மூலம் தொடங்கியிருக்கும் சவால்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் மூலம் அதிகரிக்குமே ஒழிய குறையவோ தீரவோ வாய்ப்பிருப்பதுபோல் தெரியவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...