Wednesday, August 22, 2018

ஒரு சிறிய குப்பை தொட்டி இத்தனை பேரை பிழைக்க வைக்கிறது .

செய்த தொழிலில் படு தோல்வியடைந்த ஒருவன் மிகுந்த மனவேதனையுடன் நடந்து வந்து கொண்டிருந்தான் !
வழியில், தெருமுனையில் போவோர், வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது எதிரில் உள்ள குப்பை தொட்டியில் ஒருவர் தனக்கு தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி செல்வதைக் கண்டான் !
சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பை தொட்டியில் தனக்கு தேவையான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து எடுத்து சென்றார் !
மீண்டும் ஒருவர் தனக்கு தேவையான அட்டை மற்றும் பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார்.
அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த மீதி உணவுகளை சாப்பிட்டு சென்றது.
கடைசியாக வந்த ஒரு பசு குப்பையில் கிடந்த இலைகளை சாப்பிட்டு தன் பசியை போக்கிச் சென்றது !
இதைப் பார்த்துக் கொண்டிருந்த , வியாபாரத்தில் தோல்வியடைந்த அந்த நபர் மனதில் தோன்றிய எண்ணங்கள் ,
ஒரு சிறிய குப்பை தொட்டி இத்தனை பேரை பிழைக்க வைக்கிறது என்றால், இந்த பரந்து , விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம் என்பதே !
தன் மனதை திடப்படுத்திக் கொண்டு இனி தனக்கு தோல்வியே கிடையாது , இனி வரும் காலங்கள் பொற்காலமே , மிக பெரிய வெற்றியே என தன்னம்பிக்கையுடன் சென்றான் !
---- வாய்ப்புகள் நிறைந்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...