Monday, August 27, 2018

நாமஏமாறும்போதுதான்அந்தவலியும்வேதனையும்புரியும்.....

3மாணவர்கள் சரியாக படிக்காத காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட் அடித்து விட்டு படத்துக்கு சென்றனர்.
படம் முடிந்ததும், ஆடையில் சேற்றை பூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர்.
அவரிடம் "சார் காலையில் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்...
வர்ற வழில பைக் பஞ்சராகி மூணு பேரும் சேத்துல விழுந்துட்டோம் சார்...
எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார் என்றனர்.
ஆசிரியரும் புரிந்து கொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார்.மூண்று நாள் கழிச்சு மூண்று பேரும் நல்லா படிச்சிட்டு வந்தாங்க.
மூணு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார்.
கேள்வி தாள்ல நாலே நாலு கேள்வி தான் இருந்திச்சு.
1.யாருக்கு கல்யாணம்?(25 மார்க்)
2.கல்யாணம் எங்க நடந்துச்சு?(25 மார்க்)
3.மாப்ள என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்?(25 மார்க்)
4.எந்த பைக்ல போனீங்க?(25 மார்க்)
கண்டிசன்: பதில்லெல்லாம் ஓரே மாதிரி இருக்கனும்..........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...