Wednesday, August 22, 2018

அண்ணாமலையாருக்கு அரோகரா...

திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அறிந்து கொள்ள சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமி முழுவதும் பரப்பியவருமான அகத்திய மகரிஷி விரும்பினார்;
எனவே,அவர் திருக்கையிலாய மலையில் இருக்கும் நந்தி பகவானிடம் சென்று கேட்டார்;
திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை கூற இயலுமா? என்று கேட்கின்றார்;
இந்த கேள்வியை கேட்டதும் நந்திபகவானுக்கு கண்ணீர் வருகின்றது;அழுகின்றார்;அழுகின்றார்; அழுதுகொண்டே இருக்கின்றார்;எவ்வளவு காலம் தெரியுமா?
2000 பிரம்மாக்களுடைய ஆயுள் காலம் வரை!
பூமியில் 432 கோடி ஆண்டுகள் ஆனால்,அது பிரம்மாவுக்கு ஒரு நாள்! அப்படி 100 வருடங்கள் ஆகி விட்டால் ஒரு பிரம்ம பதவி நிறைவடைந்துவிடும்; இன்னொருவர் பிரம்மா பதவிக்கு வந்துவிடுவார்;இப்படி 2000 பிரம்மாக்களின் ஆயுள் காலம் வரை நந்தி பகவான் அழுகின்றார்; அது ஆனந்த கண்ணீர்!
அகத்திய மகரிஷிக்கு வருத்தமாகிவிட்டது; ஏதும் தெரியாமல் கேட்டுவிட்டோமோ? என்று மனம் வருத்தப்பட்டுவிட்டார்;
அப்புறம் தான் தெரிகின்றது;
திரு அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அதுவரை யாருமே கேட்கவில்லை; அகத்திய மகரிஷி முதன் முதலில் கேட்டதால் உண்டான பூரிப்பால் அத்தனை காலம் நந்தி பகவான் அழுதிருக்கின்றார் என்று;
குருவி மூளை கொண்ட நம்மால் இச்சம்பவத்தை ஓரளவுக்கு மேல் ஜீரணிக்க முடியுமா? ஓவர் பில்ட் அப் என்றுதான் எண்ணுவோம்; ஆனால், நாம் இயல்பாக யாராவது ஒரு ஆன்மீக உண்மையை சொன்னால் பின்பற்றுகின்றோமா?
அதன் பிறகு,நந்திபகவான் அண்ணாமலை கிரிவலத்தின் மகிமைகளை அகத்திய மகரிஷியிடம் சொல்ல ஆரம்பிக்கின்றார்;இன்று வரையிலும் பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன;இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்;அவரது உபதேசத்தை அகத்திய மகரிஷி கேட்டுக் கொண்டே இருக்கின்றார்.
பிரபஞ்சத்தின் ஆன்மீக மையமாக இருப்பது அண்ணாமலை!
யார் ஒரே பிறவியில் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் நிறைவு செய்கின்றார்களோ,அவர்களுடய அனைத்து முற்பிறப்பு கர்மவினைகளும் முழுமையாக அழிக்கப்படுகின்றன;அதனால், அவர்களுடைய சத்குருவை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கின்றது;அதன் பிறகு,மீண்டும் இந்த பூமியில் பிறவாத வரம் அண்ணாமலையாரால் கிடைக்கின்றது;
இந்த பிறவியிலேயே அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வரவே பிறவி எடுத்திருக்கின்றோம். நமது 7 வது வயது நிறைவடையும் வரை மட்டுமே இந்த ஆன்மீக லட்சியம் நினைவில் இருக்கின்றது;அதன் பிறகு,இதை மட்டும் மறந்துவிடுகின்றோம்;
இன்றைய கால கட்டத்தில் யாரெல்லாம் அகில இந்திய அளவில் ஆன்மீக அமைப்புகளை நடத்திவருகின்றார்களோ,அவர்கள் அனைவருமே தமது 20 அல்லது 30 வது வயதிற்குள் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வந்தவர்கள் தான்!
இன்றைய காலகட்டத்தில் நம் ஒவ்வொருவராலும் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும்;வாரம் ஒரு நாள் அல்லது 15 நாட்கள் ஒருமுறை என்று அண்ணாமலையாரை கிரிவலம் வர திட்டமிடவேண்டும்;இந்த 5 ஆண்டுகள் வரை அசைவம்,மது இரண்டை மட்டும் தவிர்த்தால் போதும்;வேறு எந்த கட்டுப்பாடும் கிடையாது;
அப்படி 1008 முறை அண்ணாமலையை கிரிவலம் வந்துவிட்டால்,நமது ஜன்ம நட்சத்திர சற்குருவின் தரிசனம் கிடைக்கும்;அவரது அருளால்,அடுத்த மூன்று உலகங்களிலும் அவரது ஆன்மீக வழிகாட்டுதல் கிடைக்கும்;
ஒரே ஒருமுறை "அண்ணாமலை" என்றோ "அருணாச்சலம்" என்றோ "சோணாச்சலம்" என்றோ சொன்னால் 3 கோடி முறை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தமைக்குச் சமம் என்று அருணாச்சலேஸ்வரர் நமக்கு உபதேசமாக தெரிவித்திருக்கின்றார்;
கடந்த 30 ஆண்டுகளாகத்தான் அண்ணாமலையில் "பவுர்ணமி கிரிவலம்" பிரபலம் ஆகியிருக்கின்றது;
பவுர்ணமி அன்று மட்டும் தான் அண்ணாமலை கிரிவலம் செல்வார்கள் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்;இது தவறு;
ஒவ்வொரு தமிழ் மாதம் 1 ஆம் தேதி அன்றும் கிரிவலம் செல்வது சைவர்களின் வழக்கமாக இருக்கின்றது;
முதன் முதலில் அண்ணாமலையை கிரிவலமாக வலம் வந்தது நம் அனைவருக்கும் தாயாக இருக்கும் பார்வதி தேவி;தேய்பிறை சிவராத்திரி திதி அன்றுதான் அன்னை கிரிவலம் வந்தாள்;நமது அன்னைக்கு பக்கபலமாக வந்தது நம் அனைவருக்கும் முதல் குருவாக இருக்கும் அகத்திய மகரிஷி தான் கிரிவலம் வந்தார்;
காஷ்மீர் முதல் கண்டி வரையிலும்,குஜராத் முதல் வியட்னாம் வரையிலும் வாழ்ந்து வரும் ஒவ்வொரு இந்துக்குடும்பத்திலும் திருமணம் ஆன தம்பதியர்கள் மணமான மறுநாளே குடும்பமாக வாழ மாட்டார்கள்;
மணமான ஓராண்டுக்குள் மணமகனின் பெற்றோர்+உடன் பிறந்தோரும்; மணமகளின் பெற்றோர்+உடன் பிறந்தோரும் அண்ணாமலைக்கு வருவர்; வந்து தம்பதியாக கிரிவலம் வருவார்கள்; கிரிவலம் நிறைவடைந்த பிறகு, அண்ணாமலையாரையும்,
உண்ணாமுலையையும் வழிபட்டுவிட்டு அவர்களுடைய ஊருக்கு திரும்புவர்;அதன் பிறகுதான் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பார்கள்!!! இந்த நடைமுறையை இன்றும் சில சமுதாய மக்கள் மட்டும் விடாப்பிடியாக செயல்படுத்தி வருகின்றார்கள்;
கணபதி லோகம், இந்திர லோகம், எம லோகம், பைரவ லோகம், ஸ்ரீசக்கர லோகம், ஸ்ரீவைகுண்டம், சத்திய லோகம்,
கந்தர்வ லோகம், நாக லோகம், வாயு லோகம், அக்நி லோகம், முனி லோகம் என்று ஏராளமான உலகங்கள் இருக்கின்றன;இங்கே வாழ்பவர்களுக்கு அண்ணாமலை கிரிவலம் பற்றி நிறைய்ய்ய்ய்ய தெரியும்; ஆனால், அங்கே இருந்து அண்ணாமலை கிரிவலம் செல்ல அவ்வளவு சுலபமாக அனுமதி கிடைக்காது;
நமக்கோ நினைக்கும் போதெல்லாம் அண்ணாமலை கிரிவலம் செல்லும் சந்தர்ப்பம் அமைகின்றது;சரியாக பயன்படுத்திக் கொள்வோம்;
விண்ணுலகங்களில் பித்ருக்கள் உலகம் என்ற ஒன்று இருக்கின்றது;அங்கே நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் பல லட்சம் ஆண்டுகள் தவம் இருந்தால்,இங்கே அவர்களுடைய பேரன்/பேத்தியாகிய நமக்கு ஒரே ஒரு முறை அண்ணாமலை கிரிவலம் செல்லும் பாக்கியம் கிட்டும் என்று நாடிக்கிரந்தங்கள் தெரிவிக்கின்றன;
கிரிவலம் செல்லும் முறைகள் மட்டும் 1,00,008 விதங்கள் இருக்கின்றன;
ஒவ்வொரு சதுர்த்தி திதி அன்றும் கணபதி கிரிவலம் வருகின்றார்; கண்பதியின் அருளைப் பெற ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் நாம் கிரிவலம் வரலாம்;
ஒவ்வொரு பஞ்சமி அன்றும் வராகி அன்னை கிரிவலம் வருகின்றாள்;
ஒவ்வொரு அஷ்டமி அன்றும் பைரவர் கிரிவலம் வருகின்றார்;பைரவ சித்தர்களும் கிரிவலம் வருகின்றார்கள்; கடுமையான கஷ்டங்கள் உள்ளவர்கள் ஒவ்வொரு அஷ்டமி அன்றும் கிரிவலம் வர நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவார்கள்;
ஒவ்வொரு திருவாதிரை அன்றும் முனி கிரிவலம் வருகின்றார்; முனி கணங்கள் கிரிவலம் வருகின்றன;
ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும் ஈசனின் துணைவியும், நம் அனைவருக்கும் அன்னையாக இருக்கும் பார்வதி தேவி கிரிவலம் வருகின்றாள்;
அடுத்த 5 ஆண்டுகள் எல்லாவிதமான பொழுதுபோக்குகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய முயற்சி செய்யலாம்;
அருணாச்சலேஸ்வரரின் அருளைப் பெறுவோம். வாழ்கமெய்அன்பர்கள் வளர்க அண்ணாமலையார் புகழ். அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...