Tuesday, August 21, 2018

தந்தையின் புகைப்பட‌ மோகத்தால் ஆற்றில் விழுந்த சிறுவன்.

கரூர் நகராட்சி எல்.ஜி.பி நகரை சேர்ந்த பாபு -‌சோபா தம்பதியினரின் 4 வயது‌ மகன் தன்வந்த். நேற்று தன்வந்துக்கு பிறந்த நாள் கொண்டாடிய நிலையில், தந்தை பாபு மகனை காரில் அழைத்து கொண்டு மோகனூர் - வாங்கல் காவிரி ஆற்று பாலத்திற்கு தண்ணீரை காண வந்துள்ளார். அப்போது பாலத்தின் கிழக்கு புறம் உள்ள 24 வது தூண் மீது மகன் தன்வந்தை அமர வைத்து அவனை இடது கையால் தாங்கி பிடித்தபடி செல்போனில் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக‌ தன்வந்த் நிலை தடுமாறி காவிரி ஆற்றில் விழுந்துள்ளான். காவிரி ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பாய்ந்துகொண்டிருக்கும் நிலையில் சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாயானுர் கதவனை பகுதியிலும் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாபுவை மோகனூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் இன்று ஆற்றில் விழுந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...