கரியையும் சாம்பல்தூளையும் கொடுத்து
பல் விளக்கச்சொன்னபோது ,
பட்டிக்காடு என இளித்த பற்கள்
இன்று வேரற்று போனபோது ,
ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட்
என பல்பொடி வாங்க...
*தாத்தாவும் பாட்டியும்*
*சிரிக்கிறார்கள்*.....
வெந்தயமும் சீகைக்காயும்
வடிதண்ணீரில் அரைத்து
தேய்த்துக்குளி என்றபோது ,
பித்துக்குளிகள் என எள்ளி நகையாடி சிக் ஷாம்புவை சிக்கென பிடித்து இன்று வெண்கேசம் வந்தபின்பு ஓடுகின்றேன்
சீகைக்காய் வாங்க......
*தாத்தாவும் பாட்டியும்*
*சிரிக்கிறார்கள்*....
பாசிப்பயறோ கடலை மாவோ
அரைத்துக்குளி என்ற போது ,
லிரில் , லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின்
அழகு சோப் என அத்தரித்திரங்கள்
கைகாட்டிய கட்டிகளை எல்லாம் போட்டு தோள் சுறுங்கி வயோதிகம் தெரிந்த பின்பு ,
ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க
*தாத்தாவும் பாட்டியும்*
*சிரிக்கிறார்கள்*.....
இருமலோ தும்மலோ வந்தபோது துளசி தூதுவளை சுக்கு மிளகு போட்டு கசாயம் தந்தபோது ,
முகத்தை சுளித்து காஃப் சிரப்
குடித்து தைராய்டு வரை சென்ற பின்பு ,
ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்செடி வளர்க்க.....
*தாத்தாவும் பாட்டியும்*
*சிரிக்கிறார்கள*்......
வயிற்று வலி என்றபோது வெறும் வயிற்றில் வெந்தயக்களியோ கற்றாழைச்சாறோ கொண்டு வந்து தந்தபோது
சீறி தூக்கி எறிந்து ,
ப்ருஃபென்னும் பெயின்கில்லரும் போட்டு கருப்பை பழுதடைந்த பின்பு ,ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க......
*தாத்தாவும் பாட்டியும்*
*சிரிக்கிறார்கள்*......
நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி
மணமாய் தந்தபோது ,
சன்ஃபிளவர் ஆயில் பார் முகம் காட்டும் தூய்மை எனக்கூறி முகத்தில் அறைய
பதிலுரைத்துவிட்டு, இன்று உடல் நோய்க்கு இடமாக ஓடுகின்றேன் செக்கு நோக்கி .....
*தாத்தாவும் பாட்டியும்*
*சிரிக்கிறார்கள*்......
மண்பானை சமையல் மண்பானை குளிர் நீரை எல்லாம் மாற்றி விட்டு ,
ஆர்வோ வாட்டர் என புழு பூச்சி கூட வாழத்தகுதி அற்ற நீரைக்குடித்து குடித்து
சவமான பின்பு ஓடுகின்றேன் மண்பானை வாங்க.....
*தாத்தாவும் பாட்டியும்*
*சிரிக்கிறார்கள்* ......
படித்த தலைமுறை எனும் நாகரீகத்தில் திளைத்து
குருகுலக்கல்வியை
கோடிக்கணக்கான ரூபாய் கல்வியாக்கி ,
கொல்லைத்துளசி
வைத்தியம் மறந்து ,
மாடிகளில் குளீருட்டப்பட்ட அறைக்கு இலட்ச
இலட்சமாய்க்கொட்டி , நடைப்பிணமாக
வாழ்வில் எங்கே சுதந்திரம் ஏது சுகாதாரம் என்று எங்கெங்கோ திாிந்து அலைகிறேன்.....
*தாத்தாவும் பாட்டியும்*
*சிரிக்கிறார்கள்* ........
****
"மூத்தோா் சொல்லும்
முதுநெல்லிக்காயும்
முன்னே கசக்கும் ,
பின்னே இனிக்கும்..

No comments:
Post a Comment