புதிதாக தங்க நகைகள் வாங்குபவர்கள் மற்றும் அடகு நகையை மீட்டு கொண்டு வருபவர்கள் அல்லது வேறு ஒருவருடைய நகையை அணிபவர்கள் தங்கத்தினால் வரக்கூடிய தோஷத்திலிருந்து தப்பிப்பதற்கு இந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று ஆன்மீகம் கூறுகிறது. நம்முடைய சொத்தாக இருக்கும் சில உலோகங்களுக்கு கெட்ட அதிர்வலைகளை வெளியிடக்கூடிய ஆற்றல் உண்டு. அது போல நம்மிடம் இருக்கும் கெட்ட விஷயங்களை கிரகித்துக் கொள்ளக் கூடிய தன்மை வஸ்திரம் மற்றும் நகைகளுக்கு கண்டிப்பாக உண்டு. இதனால் தான் பழைய வஸ்திரங்களை நீங்கள் ஒருவருக்கு தானமாக கொடுக்க வேண்டும் என்றால் ஒரு முறை கல் உப்பு கலந்த தண்ணீரில் ஊற வைத்து நன்கு அலசி காய வைத்து பின்னர் அதை தானமாக கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அது போல புதிய நகைகள் வாங்கி வரும் பொழுது தோஷம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். புதிதாக தங்கம் செய்தாலும் அது பல கைகளில் இருந்து மாறி மாறி தான் நம் கைகளுக்கு வந்து சேர்கிறது. அது போல அடகில் இருக்கும் நகையும் தோஷத்தை உடையதாக இருக்கிறது. வேறு ஒருவர் அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அணிவதாக இருந்தாலும் தங்க தோஷத்தை பெறுகிறீர்கள். இத்தகைய தங்கத்தினால் வரக்கூடிய தோஷத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? புதிதாக தங்க நகை வாங்கப் போகிறீர்கள் என்றால் முதலில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு பின்னர் செல்லுங்கள். இதனால் நீங்கள் வாங்கக்கூடிய தங்க நகை எந்த காலத்திலும் அடகு போகாமல் உங்களிடமே பத்திரமாக இருக்கும். மேலும் மேலும் தங்க நகையை வாங்க கூடிய யோகத்தையும் இச்செயல் பெற்றுத்தரும் எனவே மகாலட்சுமியை வணங்கி விட்டு தங்க நகையை வாங்க செல்லுங்கள். நகையை வாங்கி வந்த பிறகு ஒரு சிறிய அளவிலான அசுத்தம் இல்லாத புதிய வெள்ளை துணி ஒன்றை விரித்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கல் உப்பை போட்டு நீங்கள் வாங்கி வந்த தங்க நகையை உப்புடன் சேர்த்து முடிந்து இதை பீரோவில் வைத்து விடுங்கள். பிறகு சிறிது நேரம் கழித்து எடுத்து அதை ஒரு முறை தண்ணீரில் அலசி விட்டு பின்னர் பயன்படுத்துங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தங்கத்தில் இருக்கும் தோஷம் அகழுவதாக நம்பப்படுகிறது. இதே போல அடகு சென்ற நகையை மீட்பது என்பது பலருக்கும் சவாலான காரியமாக இருக்கிறது. எனவே மீட்டு வந்த தங்க நகையை ஒரு முறை இதே போல துணியில் கல் உப்பை முடித்து வைத்து நகையுடன் சேர்த்து பீரோவில் வைத்து விட வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு எடுத்து அதை தண்ணீரில் அலசி மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அந்த தங்கம் மீண்டும் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கும். ஒருவருடைய உடம்பில் பட்ட நகை இன்னொருவருடைய உடம்பில் படுவதற்கு முன்பு இதே போல கல்லுப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் நன்கு அலசி எடுத்த பின்பு பயன்படுத்தப்பட வேண்டும். இதனால் ஒருவரிடம் இருக்கும் தோஷம், இன்னொருவருக்கு வராமல் இருக்கும் எனவே தங்க தோஷத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கல்லுப்பை இப்படி பயன்படுத்தி பயனடையலாமே!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment