**தாய் இருந்தால் துன்பம் இல்லை,*
*தந்தை இருந்தால் தவிப்பு இல்லை,*
*தங்கை இருந்தால் தனிமை இல்லை,*
*தாத்தா இருந்தால் தயக்கம் இல்லை,*
*பாட்டி இருந்தால் பயம் இல்லை,*
*அக்கா இருந்தால் அன்னையின் பிம்பம் தெரியும்,*
**அண்ணன் இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு,*
*தம்பி இருந்தால் தாங்கி நிற்க இன்னொரு கால் கிடைக்கும்,*
*மனைவி இருந்தால் மண்ணுலக வாழ்க்கை சிறக்கும்,*
*மகள் இருந்தால் மழலை பருவம் தெரியும்,*
*மகன் இருந்தால் மான்புமிக்க வம்சம் நிலைக்கும்,*
*மண்ணில் இறக்க போகிறோமே தவிர,*
*மீண்டும் மண்ணில் ஒன்றாக பிறக்க போவது இல்லை,*
*வாழும் போது பிரியாமல் சொந்த பந்தங்களோடு இருப்பது ஒரு வரம்,*
*குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம்,*
*அதை சொர்க்கமாக்குவதும்,* *நரகமாக்குவதும்*
*நம் கையில் தான் உள்ளது.*
அனைவருக்கும் இனிய குடும்ப தின 


வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment