Wednesday, July 6, 2011

தி.மு.க கட்சி அழிந்துவிடும் -வீரபாண்டி ஆறுமுகம்


தி.மு.க வில் மாவட்ட செயலாளர்கள் பதவியை காலி செய்துவிட்டு,தி.மு.க வில் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமிக்கப்போகிறார்கள் .இது பற்றி கலைஞர் கருணாநிதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அது மாவட்ட செயலாளர்களாக இன்று கோலோச்சும் வீரபாண்டி ஆறுமுகம்,கே.என்.நேரு,பொன்முடி,ஐ.பெரியசாமி,சுரேஷ்ராஜன்,எ.வ.வேலு,சாத்தூர் ராமச்சந்திரன்,கருப்பசாமி பாண்டியன்,தென்சென்னை ஜெ.அன்பழகன்,பழனிமாணிக்கம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்க்ளை கொந்தளிக்க செய்துவிட்டது.

மேற்க்கண்ட செயலாளர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாய் இன்று உருவெடுத்திருக்கும் வீரபாண்டி ஆறுமுகம் இது தொடர்பாக கட்சி பொது செயலாளர் அன்பழகனிடம் நேரில் சென்று கொந்தளிப்பாக விளாசி விட்டு வந்தாராம்.

எம்.ஜி.ஆர் காலத்து அடக்குமுறையையே எதிர்த்து கட்சி வளர்த்த எங்களை மாற்றி விட துடிப்பது யார்..?எங்களை எடுத்துவிட்டு,கட்சியை நடத்த முடியுமா..?மாவட்ட செயலாளர்கள் நாங்கள் இல்லை என்றால் கட்சி அழிந்துவிடும் என எகிறி குதித்த வீரபாண்டியாரை கண்டு கருணாநிதி அதிர்ச்சியடைந்திருக்கிறாராம்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...