Wednesday, July 6, 2011

தயாநிதி மாறன் ஏர்செல்லுக்கு உரிமம் வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்தார்: முன்னாள் செயலர்

முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் அவரது சகோதரர்  நிறுவனத்தின் லாபத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் உரிமத்தை முடக்கி வைத்தார் என்று  தயாநிதி மாறனின்   முன்னாள் செயலர் நிருபேந்திர மிஸ்ரா சிபிஐயிடம் தெரிவித்துள்ளதாக சிஎன்என்-ஐபிஎன் செய்தி வெளியிட்டுள்ளது.
தயாநிதி மாறன் ஏர்செல்லுக்கு உரிமம் வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்தார்: முன்னாள் செயலர்
 
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்ததில் சிபிஐ விசாரணையில் மிஸ்ரா முக்கிய சாட்சியாக உள்ளார். மாறன் வேண்டுமென்றே ஏர்செல்  உரிமையாளராக சிவசங்கரன்  இருந்தபோது ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதை தயாநிதி மாறன் முடக்கி வைத்தார் என்று மிஸ்ரா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.
 
ஏர்செல்லின் துணை நிறுவனங்கள் குறித்தும், ஏர்செல் நிறுவனம் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகள் குறித்தும் அவசியமே இல்லாமல் வேண்டுமென்றே தயாநிதி மாறன் கேள்விகளை எழுப்பியதாக மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
 
தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன்  ரூ 750 கோடி அளவுக்கு  பலனடைந்தது  தயாநிதியின்  தந்திரங்கள் காரணமாக என சிபிஐ தெரிவித்தன. இதற்கு முன் இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட சிவசங்கரன், எனது நிறுவனத்தை விற்க தயாநிதி மாறன்தான் நிர்ப்பந்தம் செய்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
 
அய்யா கணம் கோர்ட்டார் அவர்களே, இந்த தயாநிதி, கனிமொழி, ராசா, மற்றும் அலைகற்றை ஊழலில் சிக்கியுள்ள அணைத்து தியாகிகளையும், மற்றும் உள்ளே வர துடியாய் துடிக்கும் நமதருமை கழக உண்டன்பிறபுகள் அனைவரையும் ரொம்ப கவனமா டீல் பண்ணுங்க.. இவனுங்க எமகாதனுங்க சிறையிலே ஊழல் பண்ணுவானுங்க.. ஏன்ன இவங்க கட்சியும், கட்சி தலைவரும் அப்புடி.. நான் சொல்றது பொய்யின்ன சர்க்காரியா கமிசன்ட்ட கேட்டுபாருங்க.. கட்சி பேருதான் திராவிட முன்னேற்ற கழகம்.. உண்மையிலே அது அப்படியில்ல திருட்டுபயபுல்லைக முன்னேற்ற கழகம்.. சாகிரத்தை யுவர் ஆனர்.. ஜாமீன்ல விடாதீங்க.. இவனுங்க குடும்பம் பாதிபேர் திகார்லையும் மீதிபேர் டெல்லி அப்டி இப்டி நு அலையிரதுனால தமிழ்நாடு கொஞ்சம் நல்ல இருக்கு..
 
வாருங்கள் "ஸ்பெக்ட்ரம்" தயாநிதி அவர்களே. தங்கள் வருகைக்காக எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். ஆனால் நீங்கள் உள்ளே வந்த பின் கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிடும். இப்படிக்கு "திஹார் முன்னேற்ற கழகம்- புது டெல்லி "
 
சபாஷ் நிருபேந்திர மிஸ்ரா எப்படியும் ஏற்கனவே ஐ. ஏ. எஸ். காரனுக்க மூணு நாலு பேரு திஹார்ல இருக்கானுக. எப்படியும் உன்னை சி பி ஐ பொறி வைக்கும்னு சரியான நேரத்துல எடுத்து விட்டு நல்ல ஆப்பு தயாவுக்கு கொடுத்து விட்டாய். இதிலிருந்து இன்னா தெரியுதுன்னா அரசியல்வாதியும் அதிகாரியும் கூட்டு சேந்தா நாடு கொள்ளை போகும். அம்புடுதான். நம்ம தலைவரு கூட்டுக்கு வரும் அதிகாரிகளை நல்லவருன்னு சொல்லுவாரு மத்தவங்களை ஆரியன், எட்டப்பன் அது இதுன்னு சொல்லுவாரு. அப்படீன்னு நடுநிலை அதிகாரிகள் சொல்கிறார்கள்.
 
இந்த KD Brothers இன்னும் சில தினங்களில் பிரதர் "K " புழல் சிறையிலும் பிரதர் "D " திஹாரிலும் குடி புகுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அப்படியே அந்த தில்லு முள்ளு டி வி சானலையும் சீல் வைத்தால் தமிழகத்திற்கு மிக சந்தோஷமாக இருக்கும். பத்மநாபா சாமீ கோயில் தங்கம் போல , மாறன் சகோதரர்களின் ஊழல் தோண்ட தோண்ட , வந்து கொண்டே இருக்கிறது .இவர்கள் செய்த ஊழல் . பார்க்கும் போது ,வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் இருந்தாலும் ,தீராது போலிருக்கிறது.தோண்டுங்க அண்ணா, தோண்டுங்க.இவுங்க எப்பவும் இப்படிதான்.
 
 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...