Wednesday, July 6, 2011

கோபாலபுரம் தான் முதலில் பிடிபடும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

:""லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க வேண்டுமென்று கூறுகின்றனர். பிரதமரை சேர்ப்பதில் எங்களுக்கு துளிக்கூட பயம் கிடையாது. ஏனென்றால் அவர் ஒரு அப்பழுக்கற்றவர். அதேபோல், முன்னாள் முதல்வர்களையும் சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் முதலில் பிடிபடும் வழக்கு கோபாலபுரமாகத்தான் இருக்கும்'' என்று, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.
 முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில்,"நான் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு செல்ல முடியாது என, முன்னாள் அமைச்சர் அன்பரசன் பேசியதாக கூறுகின்றனர். என்னை தொடுவதற்கு உங்கள் தலைவருக்கே தயக்கம். ஒரு வரம்போடு நிறுத்திக்கொள்ளவேண்டும். போலீசை பார்த்து பயப்படும் பரம்பரையிலிருந்து வந்தவன் நான் அல்ல. ஒரு ராத்திரியில் போலீஸ் பிடித்தபோது அய்யோ, அம்மா என சத்தம் போட்ட தலைவன் வழியில் வந்தவன் நீ. காங்கிரசை பகைத்துக்கொண்டால், என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியும்.


தயவு செய்து, காங்கிரஸ் கட்சியை சீண்டி பார்க்காதீர்கள். கூடா நட்பு கேடாக முடியும் என்பதை நாங்கள் கூற வேண்டும். ஆனால், நீங்கள் கூறுகிறீர்கள். உங்களோடு இருந்தால் நாங்கள் தோற்றுவிடுவோம் என, நான் கடந்த ஒன்றரை வருடங்களாக கூறிவருகிறேன். கொள்ளையடித்ததால் தான் ஜெயிலில் இருக்கின்றனர்.ஆனால், ஏதோ தியாகம் செய்தது போல் பேசுகின்றனர்.மாவீரன் என்று சொல்கிறார்களே, அந்த அன்பு சகோதரர் இப்போது மதுரையில் வீரத்தை காட்டட்டும். கொள்ளையடிக்க ஒரு வரம்பு வேண்டாமா. இளைஞர் பட்டாளத்தை பயன்படுத்த வேண்டிய நேரம், காங்கிரசுக்கு இப்போது வந்துவிட்டது. லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர்க்க வேண்டுமென்று கூறுகின்றனர். பிரதமரை சேர்ப்பதில் எங்களுக்கு துளிக்கூட பயம் கிடையாது.


ஏனென்றால், அவர் ஒரு அப்பழுக்கற்றவர். ஆனால், அதேபோல் முன்னாள் முதல்வர்களையும் சேர்க்க வேண்டும். அப்படி செய்தால் முதலில் பிடிபடும் வழக்கு கோபாலபுரமாகத்தான் இருக்கும். லஞ்சத்தை விஞ்ஞான ரீதியில் செய்தவரே கருணாநிதிதான். ஜெயலலிதா ஆட்சி ஆரம்பத்தில் மிக சிறப்பாக இருக்கிறது. தவறு எங்கு நடந்தாலும், அதை தட்டி கேட்க நான் தயங்க மாட்டேன். அதுபோல் ஒரு இடத்தில், நல்லது நடந்தால் அதை வரவேற்பேன். விரைவில், தமிழகத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் வரும். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...