Friday, February 5, 2016

நமக்கென்ன என்று இல்லாமல் ஒரு தமிழனின் சாதனை

பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சா ரம் தயார் செய்து அதன் மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாத புரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையா புரத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட் ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்பு களை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித் துள்ளார்.
இந்த செல்போன் சார்ஜர் கருவியை பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல் போன் சார்ஜரில் உள்ள விசிறியை சுற்றும். அந்த விசிறி மின்சா ரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுற்று ம். டைனமோ சுற்று வதால் ஏசி மின்சாரம் உற்பத்தியாகிறது. செ ல்போனை டிசி மின் சாரம் மூலமே சார்ஜ் செய்யமுடியும். இதை யடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறிய டையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதனுடன் இணைத்துள்ள செ ல்போன் சார்ஜ் ஆகிறது. இதற்கு தயார்செய்ய அதிகபட்சமாக ரூ.350 வரை செலவாகிறது. சைக் கிள் டைனமோ(6 வோல்ட்), தகடா ல் ஆன விசிறி, டையோடு(4007), வயர், சிறிய பெட்டி ஆகிய பொரு ட்களை கொண்டு இதை தயாரிக்க லாம். பஸ், ஆட்டோ, கார், பைக் போன்ற‌ வாகனங்களில் நெடுந் தூர‌ரம் பயணம் செய்யும் பயணிக ளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர் கூறினார்.


நமக்கென்ன என்று இல்லாமல் ஒரு தமிழனின் சாதனையை  உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களு க்கும்  “பகிர்ந்து” உலகுக்கு எடுத்துரைப்போம்!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...