Thursday, March 17, 2016

அறிவியலும் தமிழும்

1. நான் பள்ளியில் கற்ற போது "தமிழன் அறிவியல் முன்னோடி" என்று ஒரு பாடம் இருந்தது.
நினைவிலிருக்கும் காட்டுகளைச் சொல்கிறேன்.
அ. "நடப்பன நடாஅய், கிடப்பன கிடாஅய்" என்பது நியூட்டன்-இன் விதியை முன்உரைக்கிறது.
ஆ. "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி ..." அணுவைப்பற்றிய கொள்கை நம்மிடமே இருந்தது.
இ. "ஆழ அமுக்கி முகப்பினும், நாழி முகவாது நானாழி ..." பஸ்கால்-இன் நீர்ம விதி
ஈ. ஒரு இளவரசி (மீனாக்ஷி ?) ஊஞ்சலில் ஆடும் போது ஊஞ்சலின் வீச்சும், அவள் காதணிகளின் வீச்சும் வேறு வேறு அலைஎண்களில் இருந்ததான ஒரு பாடல் (பாடல் நினைவில்லை. யாரேனும் எடுத்துக்காட்டி சிறு விளக்கமும் கொடுத்தால் நன்றி).
இப்படி இன்னும் சில இருந்ததாக நினைவு. இவைகளிலிருந்தே பார்ப்போமே.
2. என் இப்போதைய தெளிதல் படி:
அ: இறையின் உயர் ஆற்றலை உரைக்க எழுதிய பாடல். நல்ல கவிதை வரிகள். ஆனால் இவை உயிர்/உயிரற்ற இரு திணைகளையும் குறித்த வரிகள். இயல்பியல் விதிகள் உயிரற்ற பொருண்மைகளைப் பற்றியவை. இவ்வரிகள் ஏதாவது 'விதி'களைச்சுட்டினாலும் அவை இறையியல் 'விதி'கள். இயல்பியல் விதிகளல்ல.
ஆ: இதற்கும் இன்றைய இயல்பியலின் அணுவுக்கும் தொடர்பில்லை. உயர்வுபுகழ்ச்சி அணி. அவ்வளவுதான். ஆனால் வேறு பரிமாணங்கள் உள்ளன. அவைபற்றி கீழே.
இ. அறிவியல் கூற்றாகவே கொள்ளலாம். பருண்மைக் காட்சி --> கருதுகோள் --> இசைவு நோக்கல் --> பொதுமைப் படுத்துதல் --> விதி என்ற நவஅறிவியலின் கூறுகளில் முதல் மூன்றும் ஏகதேசம் சரி. பொதுமைப் படுத்துதல் படி தவறு. அதனால் என்ன. பாடலாசிரியர் (ஔவை?) நவ அறிவியலுக்கு முந்தியவர். பாடு பொருளும் அறிவியல் தொடர்பானது அல்ல. ஒரு Phenomenological Theory க்கு இது போதும். நவ அறிவியல் மொழிதான் இல்லை.
ஈ. ம்ம்ம். பாடல் வரிகள் இல்லை. மிகச்சிறந்த கூர்மையான காட்சிப் பதிவு. இந்த அளவு பொருண்மை உலகை ஒருவர் இக்காலத்தில் நோக்கினால் கூட நாம் 'scientific temper' என கவலைப் படவேண்டியது இல்லை.
3. மேற்கூறியவை எல்லாம் எப்படி ஒரு பழம் சமுதாயத்தை, அதன் கலை இலக்கிய வெளிப்பாடுகளை, அதன் கால கருத்துப் புலத்தில் இருத்தி இசைவாக்கி, இக்கால அறிவியலின் கூறுகள் ஏதேனும் அவற்றில் உண்டா என்று நோக்குவதுதான். எங்களுக்கு அப்பவே தெரியும் என்று குரலெழுப்ப அல்ல. இன்றைய இயல்பியல் பாவிக்கும் 'atom' எனும் கருதுகோளுக்கும், கிரேக்கர்கள் பாவித்த 'atom' என்பதற்கும் ஒரே semantics இல்லை. ஆனாலும் மேற்கில் அவர்கள் பழையதின் தொடர்ச்சியாக, வளர்ச்சியாகத்தான் இதைப் பார்க்கிறார்கள். இப்படி பிற கலாச்சாரங்களும் தம் முன்னோர் கருதுகோள்களை மீட்டெடுக்க யாதொரு தடையும் இல்லை. அவை வகையாக, சரியாக செய்யப் படவேண்டியவை கூட.
4. அறிவியலின் முதற்படி அளத்தல் அல்லவா. அளவைகளில் தமிழில் உள்ளவை ஒருபாடு குறிகளும், கருத்தமைவுகளும்.
எண்ணல்:
முழுக்கள் : ஒன்றிலிருந்து ஆயிரம் வரை, அப்புறம் இருக்கிறது அதிர்ச்சி: பதினாயிரம், நூறாயிரம்,பத்து நூறாயிரம், கோடி, அற்புதம்(10^8),... கற்பம்(10^12) ..., வெள்ளம் (10^16)...புரியம்(10^20) ......
பின்னங்கள்: நமக்குத் தெரி஢ந்த முக்கால்,அரை,கால்,வீசம் போக, மும்மா(3/20) ... இருமா(1/20)...முக்காணி (3/80) ... கீழ்னாலுமா (1/16000) ..., கீழொருமா(1/64000), ... இம்மி(1/1075200) ... (எடுத்துக் காட்டுகள்தான். பலவற்றை விட்டுவிட்டேன்).
nano, giga எல்லாம் இங்கேயே சாத்தியம்தான். ஏதும் அந்நியமல்ல.
இப்படியே இன்னும் நிறுத்தல், முகத்தல், நீட்டல் எல்லாம் உண்டு. சங்க காலத்திலிருந்து தொடங்கி எத்தனையோ பாடல்கள் இவற்றை சுட்டியுள்ளன.
5. அறிவியலின் இரண்டாம் படி:
வகைப்படுத்துதல்:
தாவரங்கள், விலங்குகள், பறவைகள், நீருயிரிகள், இப்படி தமிழ்ப் பாடல்களில் எவ்வளவு தேறும் என நினைத்தால் வியப்பாக உள்ளது. நான் கண்டவரை ஆயிரக்கணக்கில் உள்ளன. Naming, classifying ... all done.
நம் காட்டுக்குள் நம் மலைமைந்தர் வழிகாட்ட நடந்து சென்று அவர் காட்டிய செடிமர உயிரிகளுக்கு வெள்ளைக்காரர் தம் பெயர்களை வைத்தமையும், அவை அறிவியல் ஆய்வு ஆவணங்களாக இருப்பதையும் காண்கிறோம். யார் கொள்ளுவார் இச்செல்வம் யாவும்?
6. தமிழில் உள்ள சாத்திரங்கள்: சிற்ப,கட்டிட, சித்த,மருத்துவப் பனுவல்கள். எத்தனை. எத்தனை. நடராஜர் சிற்பத்தை செய்யும் முறையக்கொண்டு நம்மால் ஒரு முழு நவ உலோகவியல் பாடத்திட்டத்தையே வகுக்க முடியும். நமக்கோ சடங்குகள்தான் முக்கியம். ஒருசாரார் உடை. மறுசாரார் தொழு.
ஞானபண்டிதரான முருகப்பெருமானின் சீடர்களாகிய ‪#‎தமிழ்ச்சித்தர்கள்‬வகுத்த தமிழ் தனித்தே சாதரண ஒரு மொழி மட்டுமல்ல. அது கட்டற்ற அறிவியற் களஞ்சியம். தோண்டத்தோண்ட வற்றா அறிவருவி. தமிழில் இல்லாதது ஏதுமில்லை.
தமிழ் தந்து கோடி யுகங்கள் தாண்டியும் இன்றும் யோதிவடிவாக வாழ்கிறார்கள் சித்தர்கள். சித்தர்கள் மொழியே தமிழ்மொழி. சித்தர்கள் கோடியுகம் வாழ்ந்தால் தமிழும் கோடியுகங்கள் வாழ்வதாகக் கருதமுடியும். இது பலரதும் புருவத்தை நம்பமுடியாமல் உயர்த்தவே செய்யும். தமிழ் பேசவல்ல சித்தர்கள் ௯(9) கோடி இருப்பதாக சித்தநூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் தந்த தமிழில் இல்லாதது ஒன்றுமில்லை. விளையாட்டாக வெளிநாட்டவர் ஒருவர் அப்ப மயிர்பற்றி சித்தர்கள் தமிழில் உள்ளதா எனக்கேட்க, உண்டெனக் கூறி தமிழறிஞர்கள் ஆயிரம் உதாரணம் காட்ட அசந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு:-
தலை முடி கறுக்க:
"எண்ணெய் இட்டு முழுகும் பொது
நெல்லிமுள்ளி யெடுத்து பாலில் ஊறவைத்து
அரையப்பா அரைத்து போட்டு முழுகு"
நெல்லிமுள்ளியை எடுத்து பாலில் ஊறவைத்து அரைத்து எடுத்து, எண்ணெய் தேய்த்து முழுகும் போது தலையில் தேய்த்து முழுகினால் தலை முடிகறுக்கும்.
"தலை நரைக்கு மாத்து பொன்பருத்தி
யிலைச் சாறு தேச்சு முழுவு கறுப்பாம்".
பொன்பருத்தியிலைச் சாறெடுத்து தலையில் பூசி முழுக நரை முடி கறுக்குமாம்.
சித்தர்கள் அறிந்திராத கலையெதுவுமில்லை. 64 கலைகளையும் தாண்டி 65வது கலையாகிய சாகாக்கலையையும் அறிந்திருந்தனர். இன்றும் இவர்கள் யோதிவடிவாக வாழ்கிறார்கள் என நம்பப்படுகிறது. அகத்தியர், திருவள்ளுவர், 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த வடலூர் வள்ளலார் வரை அனைவரும் சித்தர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அய்யன் வள்ளுவர் அருளிய திருக்குறளில் துறவறவியல் பகுதியில் அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் ஆகிய 13 அதிகாரங்களில் ஞானக்கருத்துக்கள் உள்ளன. அதிலொரு சில குறள்கள் மட்டும் எடுத்துக்காட்டுகிறோம்.
(எ.கா)
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. (குறள் : 345-துறவு)
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (குறள் : 357-மெய்யுணர்தல்)
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. (குறள் : 358-மெய்யுணர்தல்)
சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றுஅழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் : 359-மெய்யுணர்தல்)
திருவள்ளுவர் திருக்குறளை மட்டும் அருளவில்லை. அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள் எண்ணற்றவை. இனி வரும் ஞானச்சித்தர் காலத்தில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும். அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்களில் சில :
1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. இரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
ஞானபண்டிதரான முருகப்பெருமானின் சீடர்களாகிய சித்தர்கள் வகுத்த தமிழ் எண் வடிவங்கள்
தமிழ் எண்கள்
* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
தமிழ் எண்வரிசையும் அளவீட்டு முறைகளும்
ஏறுமுக எண்கள்
**************
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் - one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் - one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -
10000000000000000000 = பரார்த்தம் —
100000000000000000000 = பூரியம் -
1000000000000000000000 = முக்கோடி -
10000000000000000000000 = மகாஉகம்
இறங்குமுக எண்கள்
*****************
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்
அளவைகள்
----------------
நீட்டலளவு
**********
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு ==> 10 Ångströms = 1 nanometer ?!!
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
பொன்நிறுத்தல்
************
4 நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
பண்டங்கள் நிறுத்தல்
*****************
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
முகத்தல் அளவு
*************
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
பெய்தல் அளவு
*************
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...