Sunday, March 27, 2016

இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டையுமே ஒரே கண்ணோட்டத்தில் எடுத்துகொள்ளும் மனப்பான்மை வரும்.

இன்பமும் துன்பமும் புலன்களின் எண்ணங்களே! ஆகையால் புலன்களை, தியானத்தின் மேல் திருப்பினால், இன்பமாக இருக்கலாம் !!
இன்பங்களும் துன்பங்களும் மனிதர்களாக ஏற்படுத்திகொண்ட ஒரு மாயையான சிந்தனையாகும். நடக்கும் நிகழ்ச்சிகள் தனக்கு சாதகமாக இருந்தால் அதை இன்பம் என்றும், பாதகமாக இருந்தால் துன்பம் என்றும் ஒருவர் செயற்கையாக, மனதின் தவறான உந்துதலில் அல்லது மனதின் தவறான சிந்தனையானால் எடுத்து கொள்கிறார்.
எனவே ஒருவர் துன்பம் என்று தன்னை மனதாலும் உடலாலும் கஷ்டபடுத்தி கொள்கிறார் என்றால் அது மனம் சார்ந்த பிரச்னை அல்லது சிந்தனை என்று அடித்து கூறலாம். இந்த மனம் சார்ந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு மனதை சரியாக சிந்திக்க செய்வதுதான்.
தியானத்தின் மூலம் ஒருவர் மூளையினுடைய அலைகளை ஒழுங்கு படுத்தபடுத்தி எது உண்மை, எது போலி என்று சிந்திக்க செய்ய முடியும் . அப்படி சிந்திக்கும்போது அங்கு இன்பம் துன்பம் என்ற மாயைகளுக்கு வேலை இல்லை.
துன்பங்கள் என்று மனிதன் நினைத்து கொண்டு இருக்கும் செயல்கள் எதுவும் நிரந்திரம் அல்ல. அதே போன்று இன்பம் என்று மனிதர்கள் நினைத்து கொண்டு இருக்கும் எந்த செயல்களும் நிரந்திரம் அல்ல. மனது தெளிவாக அல்லது சரியாக சிந்தனை செய்யும்போதுதான்.இதனை நாங்கள் உணருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. குடும்பத்தில் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒத்து சென்றால்தான் குடும்ப வாழ்க்கை பிரகாசிக்கும். இந்த உலகத்தில் பெரும்பாலானோர் பிறக்கும்போதே பணக்காரர் ஆக பிறக்கவில்லை. உண்ணும் உணவுக்கும், உடுக்கும் ஆடைக்கும் வழியே இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவும் நாமும் இந்த உலகத்தில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கைதான் அவர்கள் இன்றும் பணக்காரர்களாக இருக்கின்றனர். இன்று தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை ஒரு பொருட்டாக அல்லது துன்பமாக அவர்கள் எடுத்து கொண்டிருந்தால் அவர்கள் பிற்காலத்தில் பெரிய பணக்காரர் ஆக இருந்திருக்க முடியாது அல்லது இருக்க முடியாது.
துன்பம் என்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது, துன்பம் என்னும் வியாதியை தியானம் என்னும் மருந்து கொண்டுதான் அந்த மருத்துவர் குணபடுத் துவார்.தியானத்தின் மூலம் மனது சரியாக சிந்திக்க முடியும்.
மனது சரியாக சிந்திக்க செய்யும்போது அங்கு இன்பம் துன்பம் என்ற பாகு பாடு இல்லை. இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டையுமே ஒரே கண்ணோட்டத்தில் எடுத்துகொள்ளும் மனப்பான்மை வரும். எனவே தேவையில்லாத விருப்பு, வெறுப்பு, எல்லா நிகழ்வுகளையும் சாதரணமாக எடுத்து கொள்ளும் மனப்பான்மை தியானம் செய்வதின் மூலம் வரும் என நம்பலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...