Monday, March 7, 2016

‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்


‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலியாடுகளாகும் மாணவர்கள்! – அதிர வைக்கும் உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்
கேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில்
மாணவர்கள் ஒருகல்லூரியை தேர்ந்தெடுப்பதற்கு இதுதான் மந்திரச்சொல். மாணவர்களு க்கு மட்டுமல்ல கல்லூரிகளு க்கும் இதுதான் தூண்டில் முள். ‘எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு கேம்பஸில் தே ர்வானவர்கள் 500 பேர்’ என்றெல்லாம் விளம்பரப்படுத்திதான் ஒவ் வொரு ஆண்டும் மாணவர்களை சேர்க்கிறார்கள். படிப்பு முடியும் மு ன்னரே அப்பாய்ண்மென்ட் ஆர்ட ரை கையில் வாங்கும் இந்த கேம் பஸ் மோகத்தில் மாணவர்களும், பெற்றோர்களும் மயங்கிக் கிடக்கி றார்கள். அவர்களின் மயக்கத்தில் மருந்து தெளித்திருக் கிறது அண்மையில் வெளியான அந்த செய்தி.
‘ஹெச்.சி.எல். நிறுவனத்தில் கேம் பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வா கி ஆண்டுக் கணக்கில் காத்திருக் கும் 59 மாணவர்கள் சென்னையி ல் உண்ணாவிரதம்’ என்ற செய்தி மாணவர்கள், பெற்றோர்கள், கல் லூரிகள் என அனைத்துத் தரப்பின ரிடையேயும் அதிர்ச்சிஅலைகளை உருவாக்கி இருக்கிறது. சென்னை யில் மட்டுமல்ல… பெங்களூரு, நொய்டா, டெல்லி என நாட்டின் இத ரப் பகுதிகளிலும் இதே போன்ற போராட்டங்களை மாணவர்கள் ந டத்தத் துவங்கியுள்ளனர்.
“ஆர்டரை மட்டும் வைத்துக்கொண் டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கி றோம். இதனால் வேறு வேலைக்கு ம் செல்ல முடியவில்லை. எங்களு க்கு ஒரு வழி சொல்லுங்கள்’’ என்ற அவர்களின் கோபம் மிக நியாயமா னது. இது அவர்களின் குரல் மட்டும ல்ல… ஒவ்வொரு ஆண்டும் கேம்பஸ் மூலம் தேர்வாகி காத்திருக்கு ம் பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் குரலும் கூட‌. கேம் பஸ் என்ற ஜிகினா பொம்மையின் உண்மை முகம்வெளியில் வரத்துவங்கியுள்ளது . உண்மை நிலை என்ன? கேம்பஸில் தேர்வாகியும் வேலை கிடைக்காமல் தாமதம் ஆவது ஏன்? இக்கேள்விக்குப் பதில்சொல்கிறார் ஐடி துறையில் பணி புரிபவரும், ‘சேவ் தமிழ்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்.
“பொதுவாகப் பார்த்தால் கேம்பஸ் இண்டர்வியூ என்பது மாணவர்களுக்கு வசதியானது போல தோன்றும். நிறுவனங்களும், கல்லூரிகளும் மாண வர்களின் நலனுக்காக தேடிவந்து வே லை தருகிறார்கள் என்பதைப் போன்ற எண்ணம் வரும். ஆனால் உண்மை அது வல்ல. கேம்பஸ் இண்டர்வியூவினால் நிறுவனங்களுக்குதான் லாபம். அவர்க ள் தங்களுக்குத் தேவையான தகுதியான ஊழியர்களை எந்த அலைச்சலும் இல் லாமல் ஒரே இடத்தில் இருந்து சலித்து எடுத்துக் கொள்கிறார்கள். புகழ்பெற்ற முன்னணி கல்லூரிகளுக்கு மட்டும்தான் கேம்பஸ் இண்டர்வியூ நடத்த வருகிறார் கள். அங்கு +2-வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்கள்தான் படிப்பார்கள் என்பதா ல், தரமா ன ஊழியர்கள் கிடைத்துவிடுகின்றனர்.
கல்லூரிகளை பொருத்தவரை ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பது பெரி ய வரப்பிரசாதம். சக போட்டிக் கல் லூரிகளைவிட ஒவ்வொரு ஆண் டும் தங்கள் கல்லூரியில் இருந்து தான் அதிகம்பேர் கேம்பஸ் மூலம் வேலை பெறுகிறார்கள் என்று கா ட்டிதான் அடுத்த ஆண்டுக்கான மா ணவர்களை சேர்க்கின்றனர். ஆக வே இதை ஒரு சலுகையாகவோ, மாணவர்களுக்கு வழங்கும் சிறப் பு ஏற்பாடாகவோ கருத வேண்டிய து இல்லை.
இப்போதைய பிரச்னை எதனால் உருவாகிறது? கேம்பஸ் மூலம்வேலைக்கு எடுத்துவிட்டு பிறகு வே லை தராமல் இழுத்தடிப்பது எதனா ல்? கல்லூரி களை பொருத்தவரை டோட்-1 கல்லூரிகள், டோட்-2 கல் லூரிகள் என இரண்டு வகை உண்டு. டோட்-1 என்பது அண்ணா பல்கலை க்கழகம், பி.எஸ்.ஜி. போன்ற முன்ன ணி கல்லூரிகளை உள்ளடக்கியது. நிறுவனங்கள், கேம்பஸ் இண் டர்வியூவுக்கு முதலில் வருவது இந்த கல்லூரிகளுக்குதான். டோ ட்-2 கல்லூரிகள் என்பவை இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள சாதாரண கல்லூரிகள். இங்கு கேம்பஸ் நடத்த எந்த நிறுவனமும் வருவதில்லை. கல்லூரிகள் கெஞ்சி, கூத்தாடிதான் நிறுவனங்களை அ ழைத்து வருகின்றன.
இந்த டோட்-2 கல்லூரிகளில் தேர்வா கும் மாணவர்களுக்குதான் தற்போது பிரச்னை வருகிறது. நாடு முழுவதும் கேம்பஸில் தேர்வாகி வேலை தரா மல் இழுத்தடிக்கப்படுவதில் டோட்-2 கல்லூரி மாணவர்கள்தான் அதிகம். இவர்கள் யார் என்று பார்த்தா ல், பெரும்பாலும் கீழ்நடுத்தர வர்க்கத்தைசேர்ந்த, கிராமப்புற மாண வர்களாக இருக்கின்றனர். எப்படியேனும் பொறியியல் படித்தால் எதிர்காலம் வள மாகிவிடும் என்று நம்பி சொத்துகளை விற்று படிப்பவர்கள் இவர்கள். எல்லோரு மே நன்றாக படிப்பவர்கள்தான். அதனால் தான் கேம்பஸில் தேர்வாகியுள்ளனர். ஆ னாலும் நிறுவனங்கள் இவர்களை மட்டும் அலைகழிப்பது எதனால்? அதற்கு ஐ.டி. நிறுவனங்கள் செயல்படும் முறையை தெரிந்துகொள்ள வேண்டும்.
ஐ.டி. நிறுவனங்களை பொருத்தவரை ஊழியர் எண்ணிக்கையும் அவர்களுக்கு ஒரு சொத்துதான். ‘எங் களிடம் 2 லட்சம் ஊழியர்கள் இருக் கிறார்கள்; 3லட்சம் ஊழியர்கள் இரு க்கிறார்கள்’ என்று கணக்கு காட்டி தான் நிறுவனங்கள் புராஜெக்ட் பிடி க்கின்றன. அதனால்தான் ஒவ்வொ ரு ஆண்டும் பல்லாயிரம் பேரை வே லைக்கு எடுக்கிறார்கள். இந்நிலை யில் அமெரிக்க பொருளாதார தேக் கநிலை, ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சி என பல காரணங்களால் எதிர்பார்த்த அளவில் புராஜெக்டுகள் கிடைக்காமல் போகலாம்.அத்தகைய சூழலில் நிறுவனங்கள், அனுபவம்மிக்க மூத்தஊழியர்களை வேலையைவிட்டு அனுப்பமுடியாது என்பதால், புதிய ஊழியர்களை வே லைக்கு எடுப்பதை தள்ளிப்போடுகி ன்றன. அல்லது வேலைக்கே எடுக் காமல் தட்டிக்கழிக்கின்றன. அப்படி யே வேலைக்கு எடுத்தாலும் டோட் -1 கல்லூரிகளுக்கு முன்னுரிமைக்கொடுத்துவிட்டு கடைசியாக வே டோட்-2 கல்லூரிகளுக்கு வருகிறார்கள். இதுதான் தற்போதை ய பிரச்னையின் நதி மூலம்” என்கிறா ர் செந்தில்.

ஹெ.சி.எல். நிறுவனத்தில் மட்டும் 2013 -ம் ஆண்டின் நிலவரப்படி இந்தியா முழுவ தும் 6,000 பேர் கேம்பஸில் தேர்வாகி வே லை கிடைக்காமல் உள்ளனர். இவர்கள் ஃபேஸ்புக்கில் எதேச்சையாக ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி ஒரு ரகசிய குழுமம் ஒன்றை உருவாக்கி ஒருங்கிணைந்துள் ளனர். அதன் வழியேதான் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்க ளில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேபோல இதர நிறுவனங்களையும் கணக்கிட்டால், இப்படி வேலை க்காக காத்திருப்பவர்களின் எண்ணிக் கை குறைந்தது 1 லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். இவர்கள் அ னைவரும் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, நடுத்தர வர்க்கத்து குடும்பங்களின் பிள் ளைகள். இந்தப் பிரச்ச னை குறித்து பேச, ஃபேஸ்புக்கில் ‘நாலெட்ஜ் புரொஃபஷனல் ஸ் ஃபோரம்’ என்ற பெயரில் குழு ஒன்று இயங்குகிறது. அதைச் சேர்ந்த சுதிர் என்பவரிடம் பேசியபோது…
“ஒருமுறை கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொண்டு ஒரு நிறுவனத்தில் தேர் வாகிவிட்டால் கல்லூரி முடியும் வரை வேறு நிறுவனத்தின் கேம்பஸில் கலந்து கொள்ளமுடியாது. எல்லோருக்கும் வாய் ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண் ணத்தில் செய்யப்பட் ட ஏற்பாடுதான் இது. ஆனால் திறமையாக பங்கேற்று முதல் முயற்சியிலேயே ஆர்டர் வாங்கியவர்கள் வருடக்கணக்கில் காத்தி ருக்க … அதன்பிறகு கேம்பஸில் தேர்வானவர்கள் எல்லாம் மிக நல் ல வேலையில் சேர்ந்துவிட்டனர். இவர்கள் ஏமாளிகளாக காத்திருக் கி றார்கள்.
நாளை வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குப் போனால் ‘நீங்க ஃப் ரெஷ்ஷரா? அல்லது எக்ஸ்பீரியன் ஸ் இருக்கிறதா’ என கேட்பார்கள். ஃப்ரெஷ்ஷர் என்றால் பிரச்சனை இல்லை, வேலையில் சேர்ந்து விடலாம். ‘வெட்டியாக வேலைக்கா ககாத்திருந்தோம்’ என்றுசொன்னால் எந்த நிறுவனத்திலும் உடனே வேலை தர மறுப்பார்கள். அப்படியே வேலை கொடுத்தாலும் ஜூனி யர்களுடன் போட்டிப் போடவேண்டும். ஒ வ்வொரு கல்லூரியிலும் நன்றாக படிக்கு ம் மிகச்சிறந்த மாணவர்களை தேர்ந்தெடு த்து அவர்களின் வாழ்க்கையை சிதைக்கி ன்றனர்” என்று அதிர்ச்சியான இன்னொரு முகத்தை சொ ல்கிறார்.
 இதில்கல்லூரியின் பொறுப்பு என்ன?
கேம்பஸ்மூலம் தேர்வான மாணவர்களுக்கு வேலைகிடைக்கவில் லை என்றால் அது கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம்தானே… அதற்காகவேனும் அவர்கள் இதி ல் தலையிடலாம்தானே… என்று கேட் கலாம். ஆனால் யதார்த்தம் என்னவெனில் கல்லூரிகள், நிறு வனங்களை கெஞ்சி கூத்தாடிதா ன் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு அழைத்து வருகின்றன. ஆகவே ‘ஏன் வேலை கொடுக்க வில்லை?’ என்று கேட்க முடியாது. கேட்டால் அடுத்த ஆண்டு கேம்பஸுக்கு வர மாட்டார்கள். இதனால் கல்லூரிகள் இதைப்பற்றி கண்டுகொள்வது இல்லை.
10 ஆயிரம் ரூபாய்க்கு வாஷிங்மெஷின் விற்பவன் கூட ஒரு வருடத்துக்கு வாரண்டி கொடுக்கிறான். 10 லட்சம், 20 லட்சம் கட்டி நமக்கு பொ றியியல் படிப்பை விற்கும் கல்லூரி கள், படிப்பு முடிந்ததும் கொஞ்சம் கூட கண்டு கொள்வது இல்லை. ஆ னால் எந்த கூச்சமும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ‘எங்கள் கல் லூரியில் இருந்து இவ்வளவுபேர் கேம்பஸ்மூலம் தேர்வாகியுள்ளனர்’ என்று விளம்பரப்படுத்திக் கொ ள்கிறார்கள். அதில் எத்தனை பேர் வேலையில் சேர்ந்துள்ளனர் என்று கேட்க வேண்டிய பொறுப்பு பெற் றோர்களுக்கு இருக்கிறது.
இந்த நிலைமை குறித்து மாணவர்கள் வெளிப்படையாக பேசவும் முடியாது. அப் படி பேசினால் பிறகு எந்த நிறுவனத்திலு  ம் வேலை கிடைக்காது. ஒரு ஐ.டி. முத லாளிக்கு பிரச்னை என்றால் மற்றவர்க ள் ஒன்று கூடிக் கொள்வார்கள். அவர்க ளுக்கு என ‘நாஸ்காம்’ சங்கம் இருக்கிற து. மாணவர்களுக்கு இத்தகைய அமைப்புகள் எதுவும் இல்லை.
“இதுதான் ஐ.டி. துறையின் உண்மையான பிரச்னை. பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு இவை எல்லாம் ஒரு பொது விதிக்கு உட்பட்டு நடக்கும். ‘இத்தனை வருட அனுபவம் உள்ளவ ர்களுக்கு இத்தனை சதவிகிதம் சம் பள உயர்வு’ என்று இருக்கும். ஐ.டி. துறையில் மட்டும் ஒவ்வொரு ஊழி யரையும் தனித் தனியே அழைத்து ரகசியம் போல பேசுவார்கள். இந்த வெளிப்படை யற்றத்தன்மைதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்படி செய்வதன் மூலம் எல்லா ஊழியர்க ளையும் தனித்தனியே பிரித்து வைக்கிறார்கள். ஒருபோதும் இவர் கள் ஒன்று சேர்வது இல்லை.” என்கிறார் ‘சேவ் தமிழ்ஸ்’ செந்தில்.

இந்த ‘கேம்பஸ் இண்டர்வியூ’ என்பதன் உண் மை அபாயத்தை வேறொரு கோணத்தில் இ ருந்தும் புரிந்துகொள்ள வேண்டும். கல்லூரி ப் படிப்பு என்பது வெறுமனே வேலைக்கு ஆட் களை தயார்செய்யும் பட்டறைஅல்ல. அது சுயமாக சிந்திக்கவும், சமூகத்தை சொந்த அறிவுடன் அணுகவும் கற்றுத்தரும் இடம். உலகம் முழுவதும் மாணவர்கள் அரசியல் அறிவு பெறும் இடம் கல்லூரிதான். இந்த கே ம்பஸ் இண்டர்வியூ என்பதோ, மாணவர்களி டம் இருந்து சமூக உணர்வை துண்டிக்கிறது. மண்டை முழுக்க ‘கேம்பஸ் இண்டர்வியூ’வில் வேலை பெறுவது ம ட்டுமே சுற்றிக்கொண்டிருக்கிறது. ‘ந ன்றாகபடி, வேலைக்குப்போ, சம்பாதி, கடன் வாங்கு, வீடு வாங்கு, கார் வாங் கு, இ.எம்.ஐ. கட்டு, செத்துப்போ’ என வாழ்க்கை முழுவதும் ஓர் இயந்திரத் தைப்போல சிந்திப்பதற்கான மூளை யை கல்லூரியிலேயே தயார் செய்கி றார்கள்.
இப்பிரச்னையில் மிக முக்கியமானது கல்விக்கடன். இலவச கல்வி யை கை கழுவிவிட்ட (இந்த ஆட்சிக்கும் முன்பு ஆட்சிப்பீடத்தில் இருந்த‌) காங்கிரஸ் அரசு, கல்விக்கடன் வழங் குவதை பெரிய திருவிழாபோல கொண்டாடியது. ப. சிதம்ப ரம் இதை முனைப்புடன் செய்கிறார். ஆண் டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் பொறியியல் முடித்து வெளியில் வருகிறார்கள் என்றா ல் ஒரு லட்சம் பேர் கடனாளிகளாக வருகிறார்கள் என்று அர்த்தம். கல்லூரி முடித்த முதலாம் ஆண்டு முடிவில் இருந்து கல்விக் கட னை திருப்பிச் செலுத்தியாக வேண்டும். ‘கேம்பஸில் எப்படியேனும் தேர்வா கிவிட வேண்டும்’ என மாணவர்க ள் துடிப்பதற்கு இதுவும் ஓர் முக்கிய மான காரணம். ஒரு பக்கம் கல்விக் கடன் நெருக்க… மறுபக்கம் கைக்கு எட்டிய வேலை வாய்க்கு எட்டுவதில்லை. 

‘இதற்கு நிறுவனங்கள் என்ன செய்யு ம்?
அவர்களுக்கு எதிர்பார்த்ததுபோல ஆர்டர்கிடைத்திருந்தால் வேலைக் கு எடுத்திருப்பார்கள்.கிடைக்கவில் லை; எடுக்கவில் லை’ என்று சிலர்சொல்லலாம். அது உண்மைய ல்ல. என்னதான் ஆர்டர் குறைந்திருந்தபோதிலும் ஐ.டி. நிறுவனங்களின் லாப விகிதம் எப்போதும் போல, ஆண்டுக்கு 35 சதவிகிதம் என்ற அளவில் தொடர்கிறது. அந்த லாபத்தின் சிறுபகுதியையும் இழக்க முதலாளிகள் தயார் இல்லை. இந்த லாப வெறியின் பலி ஆடுகள்தான் அப்பாய்ண்மென்ட் ஆர்டருடன் காத்தி ருக்கும் மாணவர்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...