Wednesday, March 9, 2016

சரி மோசடியாளானை கைது செய்யாததேன்?

"ஏமாற்றவேண்டுமென்பதற்காகவே
கடனெடுத்த மோசடியாளர் மல்லையா" என SBIவங்கித் தலைவர் அறிவித்துள்ளார்.
அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என SBIவங்கி அவசர வழக்காக உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது
லண்டன் கம்பெனியிடம் விற்ற 515கோடி சொத்தை முடக்கவும் மனு செய்துள்ளது
லலித் மோடியைப் போலவே சிலவாரங்களாக லண்டனுக்கு ஓடுவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தான் மல்லையா.
சரி மோசடியாளானை கைது செய்யாததேன்?
விசாரிக்காததேன்?
சொத்துக்களைப் பறிமுதல் செய்யாததேன்?
5000கோடி கடன்வாங்கி ஒரு பைசா திருப்பி அடைக்கவில்லை. வட்டி மட்டும்2000கோடி ஆகி விட்டது.
இப்போது முதலை மட்டும் அடைக்கிறேன்,வட்டி 2000கோடி கட்டமுடியாது என்கிறான்.
ஜெட்லி தலைமையில் ஒரு கட்டப் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.
பஸ்ஸ்டாண்டில் 100ரூபாய் திருடிய பிட்பாக்கெட்காரனை தர்மஅடி அடிப்பவர்கள்,
கிராத்தில் மாங்காய் தேங்காய் திருடியதற்காக கட்டி வைத்து அடிப்பவர்கள்,
நாட்டை கொள்ளையடிக்கும்
ருணாநிதி, அம்பானி, அதானி,மல்லையா போன்றோர் மோசடி செய்த செய்தியை சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள்.
பெண்ணுக்கோ,பையனுக்கோ திருமணம் செய்ய 40இடத்தில் பெண்பார்க்கும் படலம், 20பேரிடம் விசாரணை, 10இடத்தில் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் இதே மக்கள்தான் 7.5மக்களை, 125கோடி மக்களை ஆள்வோரின் தகுதியை கொஞ்சம்கூட பார்ப்பதில்லை.
அப்படிப் பார்த்திருந்தால் மல்லையாவைவிட பத்து மடங்கு அயோக்கியனான ருணாநிதியை தேர்தெடுத்திருப்பார்களா
கல்விக்கடன் கட்டமுடியாத மாணவன் பெயரை, கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் எடுத்து ஜப்தியாகி பேப்பரில் பேரோடு போடும் வங்கிகள்தான் பெரும் முதலாளிகளின் வீட்டில் போய் நாய்மாதிரி காவலிருப்பார்கள்.
மின்கட்டணம் கட்டவில்லை என்றால் பீசைப் பிடுங்கும் அரசுதான் முதலாளிகளிடம் பீஸ் போன பல்பாக பம்முவார்கள்.
சிறுதொழிலுக்கு வங்கிக்கடன் கேட்டுப்பாருங்கள்
80பேப்பரில் கையொப்பம் வாங்கி 100நாள் அலையவிடுவார்கள்.
அவ்வளவு சட்ட நடைமுறை.
முதலாளிக்கென்றால் வீட்டுக்கே போய் கையெழுத்து வாங்குவார்கள்
அதானி ஆஸ்திரேலியாவில் இருந்தபடியே SBIவங்கி 6000கோடி கடனளிக்க ஒப்புதல் வழங்கவில்லையா? 
மல்லையா ,30ஆண்டுகளாக வங்கிகளை ஏமாற்றுவதே தொழிலாக வைத்திருப்பவன்.
நட்டக்கணக்குகாட்டி, சட்டத்தில் ஓட்டையைப்போட்டு அரசின் அதிகாரிகளின் உதவியோடு தப்பித்து வந்தவன்.
இவன் ஒரு பக்கா பிராடு என்பதை
ஏதோ இன்றுதான் கண்டுபிடித்தது போல வங்கிகள் அறிவிக்கின்றன.
எப்படி இவனை நம்பி 5000கோடி கடன் கொடுத்தார்கள்?
யார் இவனுக்கு பரிந்துரை செய்தது
என்பதை வங்கி வெளியிடுமா?
இவன் ஏமாற்றியத் தொகையயைப் பாருங்கள்
SBIவங்கி 1600 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி800கோடி
பேங்க் ஆப் இந்தியா-650கோடி
பேங்க் ஆப் பரோடா-550கோடி.
சென்ரல்பேங்க் ஆப்இந்தியா-410
யுகோ வங்கி - 320கோடி.
கார்ப்பரேசன் பேங்க்-310கோடி.
ஸ்டேட்பேங்க் ஆப் மைசூர்-150கோடி
இந்தியன் ஓவர்சீஸ்-140கோடி.
பெடரல் பேங்க்-90கோடி.
பஞ்சாப் சிந்து -60கோடி.
ஆக்ஸிஸ் பேங்க்-50கோடி
இப்படியாக புகுந்து விளையாடி இருக்கிறான்.
ஏதோ இந்த மல்லையா மட்டும்தான்
என்றில்லை.
சென்ற ஆண்டு வங்கிகளின் லாபம் 2லட்சம் கோடி. அதில் வராக்கடன் 150000 கோடி. அதில் 60%கடன் 20பெருமுதலாளிகளின்மோசடிதான் 20%கடன் 500முதலாளிகளின் மோசடிதான்.மீதி 15%தான் 99%(125கோடி)மக்களின் வராக்கடன்
அரசு என்பதும் ,அதிகாரம், சட்டமென்பதும் பணக்காரர்களின்
பொழுதுபோக்கும் கிளப்தான்.
அரசு என்பது மக்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான்.
இனி அதுல விளக்கமா சொல்றதுக்கு  இல்ல.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...