Wednesday, September 20, 2017

செம்பு குடங்களில் நீர் எதற்கு...? செம்பு(தாமிரம்) என்னதான் செய்கிறது???



இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் அவசியம் அறிந்தே தீரவேண்டிய தகவல்கள்.. சற்று பெரிய பதிவுதான் கண்டிப்பாக படியுங்கள்
அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ, நாடே நவீன மயமாகிவிட்டதால், கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பல தண்ணீர்கள் முந்திக்கொண்டு வர செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். சித்தர்கள் தண்ணீர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா?
செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரைவைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று அந்த நிறுவனம் அறிவித்தது. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்து தான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்ற தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் 'மினரல் வாட்டர்' மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம். செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும்.
மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகளில் செம்புக்குடம்தான். இன்றைக்கும் சில கிராமங்களில் செம்பு குடத்தில்தான் தண்ணிர் குடிக்கிறார்கள்.
தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம்.
தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இந்திய பண்பாட்டின் படி, தாமிர பானையில் இருந்து தண்ணீர் குடிப்பது ஆயுர்வேதத்தின் அடிப்படையாகும். ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல் படி, உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவுகிறது. அதனால் தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும். இயற்கை தந்த வரப்பிரசாதமான இளநீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!! அறிவியலின் பார்வையில், தாமிரம் என்பது உடலுக்கு தேவையான தாமிரமாகும்.
இதுப்போக, தண்ணீர் மக்கி போகாமல் இருக்க தாமிரம் ஒரு எலெக்ட்ரோலைட்டாக செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர், நாட்கணக்கில் நற்பதத்துடன் விளங்கும். தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீரை பருகுவதனால் கிடைக்கும் பல்வேறு உடல்நல பயன்கள் கீழ்வருமாறு:
1) பாக்டீரியாக்களை கொல்லும் தண்ணீரில் உள்ள நோய் கிருமிகளை ஒழிக்கும் குணத்தை கொண்டுள்ளது தாமிரம். முக்கியமாக வயிற்று போக்கினால் உண்டாகும் ஈ-கோலி போன்ற பாக்டீரியாக்களுக்கு எதிராக இது சிறப்பாக செயல்படும். அதனால் தாமிர பானையில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் இயற்கையாகவே சுத்தமானவையாக இருக்கும்.
2) தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் தாமிரம் என்பது அரியக் கனிமமாகும். தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
3) கீல்வாத வலியை குணப்படுத்தும் தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
4) புண்களை வேகமாக குணப்படுத்தும் புதிய அணுக்களை உருவாக்கி அதனை வேகமாக வளரச் செய்ய தாமிரம் உதவும். இதனால் புண்கள் வேகமாக குணமாகும். இதிலுள்ள வைரஸ் நீக்கி மற்றும் பாக்டீரியா நீக்கி குணங்கள் தொற்றுக்களின் வளர்ச்சியை தடுக்கும்.
5) மூளை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளை பாதுகாக்க மயலின் உறைகள் அதனை மூடும். இந்த மயலின் உறைகளை உருவாக்க கொழுப்பு வகைப் பொருட்களை தொகுக்க தாமிரம் உதவுகிறது. இது போக வலிப்பு வராமலும் அது தடுக்கும்.
6) செரிமானத்தை மேம்படுத்தும் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவாக்க ஊக்குவிக்கும் அறிய குணத்தை தாமிரம் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். அதனால் தான் தாமிரம் கலந்துள்ள தண்ணீரை பருகினால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெற்றிடலாம்.
7) இரத்த சோகையை எதிர்க்கும் நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
8) கர்ப்ப காலத்தின் போது: கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
9) புற்றுநோய்க்கு எதிராக பாதுகாக்கும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
10) வயதாகும் செயல்முறை குறையும் தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்
அறிவியல் பார்த்தோம் ஆன்மீகத்தில் செம்பு பற்றி என்ன சொல்கிறார்கள் ?????
செம்பு சொம்பில் தண்ணீர் ஊற்றி குடித்தால் தான் தரித்திரம் ஒழிந்து உடலில் ஆற்றல் சக்தி கூடும் இதனால் லட்சுமி கடாட்சாரம் பெருகும், செம்பு உடம்பில் பட்டாலே தரித்திரம் விலகும், அதனால்தான் ஆலயங்களில் செம்பினால் ஆன சாமி உருவம் பதித்த டாலர் விற்பனை செய்கிறார்கள்,யந்திரம் எழுதினாலும் செம்பு தகட்டிலேயே எழுதுகிறார்கள், தாயத்து குப்பி கூட செம்பிலேயே இருக்கும், செம்பு பரிபூரண சூரிய சக்தியை உறிஞ்சக்கூடிய உலோகமாகும் . சூரியனே உயிர்ப்புக்கு உரியவர் ஆவார் எனவே செம்பை காப்பு செய்து கையில் அணியலாம், செம்பு டாலர் போட்டுக்கொள்ளலாம், செம்பு சொம்பில் தண்ணீர் வைத்து குடித்தால் ஆண்மை சக்தி பெருகும், அணுக்கள் உடலில் கூடி குழந்தை பாக்கியம் உண்டாகும், உடலில் வசிய சக்தி உண்டாகும், சூரியனே உலகின் அனைத்து உயிர்களின் வசியக்காரன் ஆவார், அவர் சக்தி நிறைந்த உலோகம் செம்பு என்பதனால் அதை பயன்படுத்துபவருக்கு தலைமை பண்பு கிட்டும் .
செம்பு மற்றும் வெள்ளி அதிகம் உடலில் படும் படி செய்து வரவும். இரண்டும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. செம்பு மோதிரம் அல்லது கை வளையம் மற்றும் இடது கை ஆட்காட்டி விரலில் வெள்ளி மோதிரம் (கற்கள் எதுவும் இல்லாத சாதாரணமான ஒன்று) அணிவது தான ஆகர்ஷ்னா முறைகளில் ஒன்று. வலது கை சுண்டு விரலில் செம்பு மோதிரம் அணியவும்.
நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சு பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும்.
இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள். நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது.
நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது செம்புக்காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.
பெரும்பாலான தெய்வ யந்திரங்கள் எழுதப்படுவது அக்கால முதலே செம்புவில் தான். சிறந்த மின் கடத்தியும் செம்புதான்,தங்கத்தில் செம்பு சிறிதளவாவது கலந்தால்தான் நகைகள் உருவாகும், இருடியம் எனும் அனுப்பொருளை தக்க வைக்கும் ஆற்றல் செம்புவிற்கு உண்டு, இடியால் உருகாமல் அதன் சக்தியை கிரகிக்கும் ஆற்றல் செம்புவிற்கு உண்டு, செம்பினால் செய்யப்பட்ட பிரமிடுகள் சிறியதானாலும் மிக சக்தி வாய்ந்ததாகும், சக்தி வாய்ந்த தெய்வ சிலைகளெல்லாம் செம்பினால் செய்யப்பட்டவையே, செம்பினால் செய்யப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்த போது மக்கள் நேர்மையை பரவலாக கடைபிடித்தனர்,ஆக செம்பு மிகச்சிறந்த சக்தி வாய்ந்த உலோகம், அது அனைத்திலும் சிறந்த வசிய உலோகமாகும், இதில் பரிபூரண மகாலட்சுமி அருள் நிறைந்திருப்பதால் இந்த செம்பு உலோகத்தில் திருவிளக்கு செய்து அதில் தீபம் ஏற்றினால் அஷ்டலட்சுமி அருள் நிச்சயம் கிட்டும், ஆலயத்தில் தீர்த்த பாத்திரம்கூட செம்பிலேயே இருக்கும், புகழ்பெற்ற பழம் பெரும்நடிகர் தியாகராஜ பாகவதர் தினசரி செம்பு சொம்பில் தண்ணீர் குடித்தே புகழ் பெற்றார், வாஸ்து குறைபாட்டை கூட செம்பு கம்பிகள் சரிசெய்யும் செம்பு பாத்திரங்களை பயன்படுத்திய குடும்பம் புகழ் பெற்றதாகவே இருந்திருக்கிறது .
அக்காலத்தில் செம்பு குடம் ஒன்று சீதனமாக கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது . ஆக செம்பு உலோகம் மகாலட்சுமி அருள் பெற்றுள்ளதால் அனைவரும் பயன்படுத்தி அன்னையின் அருளை பெறுங்கள்,அக்காலத்தில் செம்பு குடம் யாரிடம் உள்ளதோ அவர்கள் வசதி படைத்தவர்களாக கருதப்பட்டனர், பணக்காரர்கள் தினசரி செம்பு குடத்தில் ஜலம் வைத்து பருகி விடுவார்கள்,ஏழைகள் என்ன செய்வது என்று யோசித்த முன்னோர்கள், இதற்கு ஒரு தீர்வாக ஆலயத்தில் தீர்த்தம் வழங்க செம்பு பாத்திரத்தையே பயன்படுத்தினர், தினசரி யார் தீர்த்தம் பருகிறார்களோ அவர்கள் லட்சுமி கடாட்சரத்துடன் தீர்க்காயுசுடன் இருப்பர், இது அக்காலத்திலிருந்தே நிரூபிக்கப்பட்ட உண்மை . இன்று மக்கள் ஆரோக்கியத்தில் அக்கரை எடுத்துக்கொள்வதில்லை, வந்த பின்பு எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விடுகிறார்கள், ஆனால் செல்வம் சேர்ப்பதில் மட்டும் ஆர்வம் பெருகிக் கொண்டே போகிறது, அவ்வாறு செல்வ பெருக்கம் வேண்டுவோர். இந்த முறையை கையாண்டாலே போதும், கொஞ்ச கொஞ்சமாக உயர்நிலைக்கு வருவீர்கள், இது உறுதி, தீய சக்திகளை விரட்டும் சக்தி செம்புவிற்கு உண்டு, அனைவரும் இதன் பயனை கொண்டு அன்னை மகாலட்சுமியின் அருளை பெறுக, வளமோடு நலமோடு வாழையடி வாழையாக வாழ்க .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...