Tuesday, September 19, 2017

அரசியல் நெருக்கடியை உருவாக்காதா?

#திமுக எம்எல்ஏ.,க்கள் ஒட்டுமொத்தமாக #ராஜினாமாசெய்தால் என்னவாகும்?- முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி பிரத்யேக பேட்டி -தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்டாவிட்டால் திமுக எம்.எல்.ஏக்கள் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாக ஒரு கருத்து நிலவுகிறது. அப்படி ராஜினாமா செய்தால் சட்டப்பேரவை தொடர்வதில் சட்ட சிக்கல் வருமா?
திமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக 89 பேரும் ராஜினாமா செய்தால் எந்த சட்ட சிக்கலும் வராது. எடப்பாடி அரசுக்கு ரொம்ப வசதியாக போய்விடும்.
அப்படியானால் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தொடரலாமா?
தாரளமாக தொடரலாம் சட்டப்பேரவையில் இருக்கும் மீதமுள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தொடரலாம்.
ஒட்டுமொத்தமாக 89 உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் அது அரசியல் நெருக்கடியை உருவாக்காதா?
எந்த நெருக்கடியும் உருவாகாது. சொல்லப்போனால் சட்டபேரவையில் எடப்பாடிக்கு இன்னும் எளிதாக போய் விடும். அதிமுகவினர் மகிழ்ச்சியடைவார்கள்.
ராஜினாமா செய்த தொகுதிகள் குறித்து தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும்?
மீண்டும் அத்தனை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவார்கள்.
மொத்தமாக உறுப்பினர்கள் ராஜினாமா செய்வது என்பது எந்த விளைவையும் ஏற்படுத்தாதா?
ஒன்றும் ஏற்படுத்தாது, சற்றே பின்னோக்கி பார்த்தால் உங்களுக்குத் தெரியும் ஆந்திராவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா கோரிக்கையை முன் வைத்து மூன்று தடவைக்கு மேல் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த வரலாறு உண்டு.
இவ்வாறு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால் சாமி தெரிவித்தார்.
இதே கேள்வியை முன்னாள் தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் வைத்தபோது அவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் ஒட்டுமொத்தமாக உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும். எதிர் வரிசையில் இருப்பபவர்களுக்கு மெஜாரிட்டி கூடி விடும் எந்தப் பிரச்சனையும் வராது.
பொதுவாகத்தான் நான் இதில் கருத்து சொல்ல முடியும், ஆனாலும் பெரும்பான்மை ஆட்கள் ராஜினாமா செய்தால் எதிர் தரப்பினருக்கு ஆதரவு கூடும். பெரும்பான்மையை நிரூபிக்க சிக்கல் வராது.
ஆனால் அதிகமான எம்.எல்.ஏக்கள் வைத்துள்ள அதிமுக பிரச்சனை இல்லாமல் தொடரத்தான் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அரசியல் ரீதியான பிரச்சனை இது இதில் அதிகம் கருத்து சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து எதிர்ப்பை காட்டினால் அது எடப்பாடி அணிக்கே சாதகமாக அமையும் என்பதே இருவர் கருத்தின் சாராம்சம் ஆகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...