Friday, September 22, 2017

தினகரன் இவ்வாறு செய்வது எப்படி நியாயம்? : அம்பலப்படுத்திய வசந்தி முருகேசன்!

டி.டி.வி தினகரன் தி.மு.கவுடன் கூட்டு சேர்ந்துள்ளதால் தான் எடப்பாடி அணிக்கு வந்துள்ளதாக எம்.பி வசந்தி முருகேசன் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான எம்.பி வசந்தி முருகேசன் இன்று திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
தினகரன் இவ்வாறு செய்வது எப்படி நியாயம்? : அம்பலப்படுத்திய வசந்தி முருகேசன்!
இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
டி.டி.வி.தினகரன் தி.மு.கவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாகவும், அவர் ஆட்சியை கலைக்க முயற்சிப்பது எப்படி நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போது தானும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் எம்.பி வசந்தி முருகேசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...