Thursday, September 28, 2017

உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது…!

#கதறி_அழும்_தினகரன்...
#கையை_விரித்த_தேர்தல்_ஆணையம்
#கம்பி_நீட்டிய_MLAக்கள்.
#கனவுகள்_எல்லாம்_தகர்ந்தது ...!!!
************************************
அ.தி.மு.கவுக்குள் எழுந்த கோஷ்டி மோதலை அடுத்து தினகரன் கும்பல் கட்சியையும்,ஆட்சியையும் கபளீகரம் செய்யும் முயற்சியில் இறங்க இதை முறியடிக்க பன்னீர்செல்வம் எடுத்த சரியான முயற்சியால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தடுத்து வைக்கப்பட்டது.
பன்னீர் மற்றும் சசிகலா அணியினர் தனித் தனியே இரட்டை இலையை மீட்க ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், பன்னீர்ச்செல்வம் அணியோடு சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இணைந்தார்.
தற்போது ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்த பிறகு, இரு அணிகளும் இணைந்து இரட்டை இலையை மீட்க நடவடிக்கைகள் எடுத்த நிலையில். தேர்தல் ஆணையம் ஆவணங்களை தாக்கல் செய்து முடிக்க நாளை செப்டம்பர் 29-ஆம் தேதி கடைசி நாள் என அறிவித்திருந்தது.
வருகிற அக்டோபர் 6-ஆம் தேதி இரட்டை இலை தொடர்பான விசாரணை நடக்கும் என்றும் அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், தனக்கு இனி இரட்டை இலை கிடைக்க வாய்பில்லை என்பதை புரிந்து கொண்ட தினகரன்... தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என்கிற உணர்வோடு தனக்கு கிடைக்காத இரட்டை இலை சின்னம் தனது எதிரிகளான ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் இருக்கும் அதிமுக வுக்கும் கிடைக்க கூடாது என்கிற உணர்வோடு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார் தினகரன்.
ஆனால் அந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இதனால் தினகரனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், தினகரன் அணியில் இருந்து புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் நான்கு பேரும் பன்னீர் - பழனிசாமி அணிக்கு தாவியுள்ளனர்.இது தினகரனுக்கு பெரும் பின்னடைவாகவும், பேர் இடியாக வும் அமைந்துள்ளது. இந்த நிலையில் தினகரன் அணியில் உள்ள மற்றவர்களும் தாக்குப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கூர்க்கில் முகாமிட்டிருந்த தினகரன் எம்.எல்.ஏக்கள் அங்கிருந்து வெளியேறி விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த இலை மீட்பு போரில் தினகரன் வெல்வது கடிணம் என்கிற உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது…!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...