Thursday, September 21, 2017

தமிழக_வழக்கறிஞர்களில்_எவருமே_திறமையானவர்கள்_இல்லையா..???...!!!

தினகரனின் ஆதரவு பலி ஆடு MLAக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தினகரனும், திமுகவும் தொடர்ந்த வழக்கு 20.09.2017.விசாரணைக்கு வந்தது.
இதில் நீதிபதி திரு. துரைசாமி அளித்த உத்தரவு.
1.18 MLAக்கள் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவிற்கு தடை இல்லை.
2. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காலியாக இருக்கும்18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கூடாது.
3. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது.
4.வழக்கு விசாரணை 04.10.2017 க்கு ஒத்திவைக்கப்படுகிறது
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கிற்காக திமுக தரப்பில் வாதாட வந்தவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் *வடநாட்டு கபில்சிபல்...* அமரேந்தர் சரண்.
தினகரன் ஆதரவு பலிஆடுகள் 18 MLA க்களின் சார்பாக வாதாட வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் *வடநாட்டு * சல்மான் குர்ஷித்.. துஷ்யந்த் தவே. பி.எஸ்.இராமன்*
ஆகியோர்.
தமிழக முதல்வருக்காக ... *வடநாட்டு முகுல்ரோத்தகி....*
வைத்தியநாதன்.
தமிழக சபாநாயகர் தனபால் சார்பில் அரிமா சுந்தரம்.
தமிழக தலைமைச் செயலாளர் சார்பில் சுப்ரமணியன் பிரசாத்.
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சார்பில் ராகேஷ் திரிவேதி
இந்த மூத்த வழக்கறிஞர் கள் அனைவரும் வட நாட்டவர்களே..
ஏன் .. தமிழ் நாட்டிலிருந்து ஒரு தமிழன் கூட இவர்களுக்கு வழக்கறிஞராகக் கிடைக்கவில்லையா..??
*அல்லது தமிழக வழக்கறிஞர் களின் திறமை மீது இவர்கள் எவருக்கும் நம்பிக்கை இல்லையா..???*
*அல்லது தமிழக வழக்கறிஞர் களில் எவருமே திறமையானவர்கள் இல்லையா..???*
இதுவரை தமிழகத்தை ஆண்டவர்களின் ஆட்சியின் கல்விக் கொள்ளையால் / கொள்கையால் *நல்ல தகுதியும் திறமையும் உள்ள ஒரு வழக்கறிஞரைக் கூட இந்த ஆட்சியாளர்களால் உருவாக்க முடியவில்லையா....???*
வட இந்திய வழக்கறிஞர்களை நம்பிப் பிழைப்பு நடத்தும் தமிழக அரசியல்வாதிகளே
உங்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக மக்களை ஏமாற்ற *நீட் வேண்டாம், நவோதயா வேண்டாம், தமிழகத்தில் கல்வித்தரம் மற்ற மாநிலங்களை விடச் சிறந்து முன்னேறியிருக்கிறது என்று என்று மயிர்பிளக்கும் வாதங்களை செய்து கூவிக்கொண்டு, இருக்கிறீர்களே...!!!
உங்கள் வழக்குகளை வாதாட வட இந்திய வழக்கறிஞர்கள் வேண்டும்.
உங்கள் மருத்துவ சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை...
பிற மாநில மருத்துவர்கள் ...
அயல் நாட்டு மருத்துவர்கள் என்று தேடிப்போய் மருத்துவம் பார்ப்பீர்கள்...
நீங்களே CBSE பள்ளிகள் நடத்துவீர்கள்..
உங்கள் பிள்ளைகளை CBSE பள்ளிகளில் படிக்க வைத்து இந்தியும் கற்று தருவீர்கள்.
உங்களை நம்பி வாக்களித்த தமிழக மக்களை வாக்களிக்கும் இயந்திர ங்களாக, தமிழக மாணவர்களை தற்குறிகளாக, தகுதியற்றவர்களாக அடிமைகளாக, ஏமாளிகளாகவே வைத்திருப்பீர்கள்....
தனியார் மருத்துவ கல்லூரியின் கல்வி கொள்ளையர்களை காப்பாற்ற ..NEET தேர்வு எதிர்ப்பு நாடகமாடி .. தகுதியும் திறமையும்
திறமையும் வாய்ந்த அன்பு மகள் அனிதா வை அவநம்பிக்கை பாலூற்றி கொலை செய்வீர்கள்...
இந்த சுய நல அரசியல் வாதிகளின் பிடியிலிருந்து தமிழகம் என்று மீளுமோ...???
தமிழகத்தை உண்மை யும் நேர்மையும் என்று ஆளுமோ...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...