Sunday, September 17, 2017

*முருகனும்- பூமியும் -செவ்வாயும்.*

பூம்பாரை, பெரிச்சியூர் ஆகிய இடங்களில் போகர் செய்த சோதனை அவபாஷாண சிலைகள் உண்டு. சுத்தி செய்து முடிக்கப்படாத நிலையில் இருப்பது அவபாஷாணம் என்கிறார்கள். பூமியில் ஒரே ஒரு நவபாஷாண சிலை இருப்பது பழனியில்தான். இதுபோக இன்னொன்று இருப்பது செவ்வாய் (மங்கள்) கிரகத்தில். இது பலருக்குத் தெரியாது.

'பூமியில் இருக்கும் சிலை இது ஒன்றே என்று எங்களிடம் உள்ள பனையோலை சுவடியும் அதைத்தான் சொல்கிறது' என்று தவத்திரு ஸ்ரீ சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் முன்னொரு சமயம் என்னிடம் சொன்னார்.
ஆக, முருகனே தன் மேனியை தானே (போகர்) பாஷாண கலவைகொண்டு உருக்கிச் சாய்த்து சிலையாய் கட்டி, அதை தன்னுடைய கோளான செவ்வாயிலும், அக்கோள் கர்பமிருந்த பூமியில் இன்னொன்றையும் நிறுவினார். கலியுகத்தில் பிணி தீர்க்கும் சிலையாய் பழனியில் முருகன் இருப்பது நமக்குக் கிட்டிய பெரும் பேறு. போகர் ஜெனன சாகரம் வாசித்தவர்களுக்கு இது விளங்கும்.
'தரணி கர்ப்ப சம்பூதம்| வித்யுத் காந்தி சமப்ரபம்|| குமாரம் சக்தி ஹஸ்தம் தம்| மங்களம் பிரணமாம்யஹம்' என்ற சுலோகம் பூமி-செவ்வாய் உறவை விவரிக்கும்.
போகர் இந்த சிலையை ஒன்பது வித பாஷாணங்கள் சேர்த்து கட்டிய விதம் குறித்து ஒரு பாடல்.
"பாங்கான பாடாணம் ஒன்பதினும்
பரிவான விபரம்தான் சொல்லக்கேளு
கெளரி கெந்திச்சீலைமால் தேவி
கொடு வீரம்கச்சால் வெள்ளை
பகர்கின்ற தொட்டினோடு சூதம்சங்கு
பூரணமாய் நிறைந்த சிவசக்தி
நலமான மனோன்மணி கடாட்சத்தாலே
நண்ணி நீ ஒன்பதையும் கட்டுகட்டு.
நடக்கவே கலியுகத்தார் பிழைக்கவேண்டி
நாமான மனோன்மனியாள் கிருபையாலே
உள்ளபடி பாடாணம் ஒன்பதும்தான்
உருக்கிச் சாய்த்தேன் சிலயாய்தானே."
No automatic alt text available.
எல்லோரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். முகநூலில் ஈசன் வேறு, முருகன் வேறு என்று பேதம் காட்டி நிறைய பதிவுகளைப் பார்க்கிறேன். ஈசன் தன் அகவொளியிலிருந்து எதையுமே படைக்க இயலாதவர் என்றும், இப்படி இருக்க முருகனை அவர் சிருஷ்டித்தார் என்பது பொய் என்றும் யாரோ ஒருவர் ஈசனுக்கு impotent சான்றிதழ் வேறு அளித்திருந்தார். ஹஹஹா! ஈசனே தன் பஞ்ச முகத்தோடு அதோமுகம் சேர்த்து ஆறுமுகமானார். திருமூலர் இதை உறுதி செய்துள்ளார். சிவன் வேறு முருகன் வேறில்லை.
ஆக, முருகன் உதித்தது ஈசனின் ஆக்ஞா சக்கர ஒளியில், முருகனுக்கு சக்தி கொடுப்பது சக்தி, சக்தி உதித்தது ஈசனிடத்தில், ஈசனின் வாமபாகமே சக்தி /விஷ்ணு, விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் பிரம்மா. இப்படி முருகன் இருக்கும் இடத்தில் எல்லாமே உள்ளது. அப்படி என்றால் முருகனிடத்தில் நவ கோள்களும் இலயமாக வேண்டும்தானே? அதனால்தான் பழனி சிறப்பு வாய்ந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...