Thursday, June 27, 2019

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்!!

கரியையும் சாம்பல்தூளையும்
கொடுத்து பல் விளக்கச் 
சொன்னபோது ,
பட்டிக்காடு என இளித்த பற்கள்
இன்று வேரற்று போனபோது ,
ஓடி நின்றேன் சர்வோதயா காதிகிராப்ட் என பல்பொடி வாங்க...
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
வெந்தயமும் சீகைக்காயும்
வடிதண்ணீரில் அரைத்து தேய்த்துக் குளி என்றபோது ,
பித்துக்குளிகள் என
எள்ளி நகையாடி சிக் ஷாம்புவை
சிக்கென பிடித்து இன்று வெண்கேசம்
வந்தபின்பு ஓடுகின்றேன்
சீகைக்காய் வாங்க.
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
பாசிப் பயறோ கடலை மாவோ
அரைத்துக்குளி என்ற போது ,
லிரில் , லக்ஸ் சினிமா நட்சத்திரங்களின்
அழகு சோப் என அத்தரித்திரங்கள்
கைகாட்டிய கட்டிகளை எல்லாம்
போட்டு தோள் சுறுங்கி
வயோதிகம் தெரிந்த பின்பு ,
ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
இருமலோ தும்மலோ வந்தபோது
துளசி தூதுவளை சுக்கு மிளகு
போட்டு கசாயம் தந்தபோது ,
முகத்தை சுளித்து காஃப் சிரப்
குடித்து தைராய்டு வரை சென்ற பின்பு ,
ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்
செடி வளர்க்க.
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள.
வயிற்று வலி என்றபோது
வெறும் வயிற்றில் வெந்தயக் களியோ கற்றாழைச் சாறோ கொண்டு வந்து தந்தபோது
சீறி தூக்கி எறிந்து ,
ப்ருஃபென்னும் பெயின்கில்லரும் போட்டு கருப்பை பளுதடைந்த பின்பு ,
ஓடுகின்றேன் கற்றாழை
வளர்க்க..
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி
மணமாய் தந்தபோது ,
சன்ஃபிளவர் ஆயில் பார்
முகம் காட்டும் தூய்மை
எனக் கூறி முகத்தில் அறைய
பதிலுரைத்துவிட்டு ,
இன்று
உடல் நோய்க்கு இடமாக ஓடுகின்றேன்
செக்கு நோக்கி .
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள.
மண்பானை சமையல்
மண்பானை குளிர் நீரை எல்லாம்
மாற்றி விட்டு ,
ஆர்வோ வாட்டர்
என புழு பூச்சி கூட வாழத்தகுதி
அற்ற நீரைக்குடித்து குடித்து
சவமானபின்பு
ஓடுகின்றேன் மண்பானை
வாங்க.....
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்.
படித்த தலைமுறை எனும்
நாகரீகத்தில் திளைத்து
குருகுலக் கல்வியை
கோடிக்கணக்கான ரூபாய்
கல்வியாக்கி ,
கொல்லைத்துளசி
வைத்தியம் மறந்து ,
மாடிகளில்
குளீருட்டப்பட்ட அறைக்கு இலட்ச
இலட்சமாய்க் கொட்டி , நடைப்பிணமாக
வாழ்வில் எங்கே சுதந்திரம்
ஏது சுகாதாரம் என்று
எங்கெங்கோ திாிந்து அலைகிறேன்.....
தாத்தாவும் பாட்டியும்
சிரிக்கிறார்கள்
மூத்தோா் சொல் வார்த்தையும்
முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்
வாழ்க வளமுடன்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...