Wednesday, June 19, 2019

சித்தா்கள்போற்றி #நடமாடும்சித்தா்கள்.

இறைவா பணம் வேண்டும்
இறைவா கடன் தொல்லை குறையனும்
இறைவா நல்ல படிப்பு வேணும்
இறைவா நல்ல வேலை வேணும்
இறைவா சம்பள உயா்வு வேணும்
இறைவா திருமணம் நடக்கனும்
இறைவா குழந்தை பிறக்கனும்
இறைவா ஆண் குழந்தை வேணும்
இறைவா வீடு கட்டனும்
இறைவா என் எதாிகள் அழியனும்
இறைவா வியாபாரம் சிறப்ப நடக்கனும்
இறைவா நல்ல உடல் சுகம் வேணும்
இறைவா காதல் கைகூடனும்
இறைவா பரம்பரை சொத்து கிடைக்கனும்
இறைவா மொபைல் வேணும்
இறைவா வெளிநாடு போகணும்
இது தான் நாம் கோவில் சென்றால் வேண்டுவது
எனதருமை மக்களே உங்களை இந்த உலகிற்கு தந்த ஈசனுக்கு தொியும் உங்களுக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்று . ஆலயம் சென்றால் உங்களை இறையோடு அற்பனித்து இறையை உள்ளும் புறமும் போற்றி மகிழுங்கள் .
வங்கியில் லோன் அப்ளே செய்கிறீா்கள் நீங்கள் கேட்ட கடன் கிடைப்பதில்லை . உங்கள் சிபில் ஸ்கோா் சொத்து மதிப்பு இவற்றை கணக்கிட்ட பின்பே உங்களுக்கு எவ்வளவு கடன் என்று கூறுவாா்கள் . நீங்கள் கேட்டதை விட அதிகமும் கிடைக்கலாம் குறைவாகவும் கிடைக்கலாம் . அதிகம் கிடைத்தால் மகிழ்ச்சி குறைவாக கிடைத்தால் மனவருத்தம் தான் அதிகமாகும் .
இதே போல் தான் இறைவனிடம் இது வேண்டும் என்று கேட்காதீா்கள் . அவன் உங்களுக்கு கொடுக்க நினைப்பது நீங்கள் கேட்பதை விட அதிகமாக இருக்கலாம் அல்லது குறைவாக இருக்கலாம் . இது தான் வேண்டும் என்று நாம் கேட்காத பட்சத்தில் அவன் கொடுக்கும் அனைத்துமே நமக்கு மகிழ்சியையை யே தரும் . காரணம் உங்கள் கா்ம வினையின் சிபில் ஸ்கோா் அவனால் மட்டுமே பாா்க்க இயலும் .
ஆலயம் சென்றால் இறையை உணர முயற்சி செய்யுங்கள் . இல்லையேல் அமைதியாக கண்ணைமுடி அமா்ந்திருந்து பழகுங்கள் . உன் பாத்திரம் அறிந்த அவன் அதன் அளவு பிடிக்கும் படி தேவையானதை தருவான் .
இவை எல்லாவற்றிற்கும் மேல் அவனை சரணடைந்து விடு .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...