Tuesday, November 28, 2023

வாரியாரும் வாத்தியாரும்!!

 எம்.ஜி.ஆரின் ஏதகுப் பெருமைகளைக் கண்டு நாளாயிற்று!!

பொல்லாத சிரிப்போடு புண்ணாக்கும் இன்றைய ஆட்சியின் முன்னே--வாய்
கொள்ளாத சிரிப்போடு வாரியார் வாழ்த்த--
அப்படியென்ன செய்தார் எம்.ஜி.ஆர்??
ஆன்மிகத் தேடலில் அழிக்க முடியாத நிகழ்வு!!
உலகத் தமிழ் மா நாடு நடக்கிறது
முதல்வர் எம்.ஜி.ஆர்,,,உள்ளே நுழைந்தபோது--
அரசுப் பிரதானிகள் முதல்--அறிஞர்கள் வரை
அனைவரும் மரியாதை நிமித்தம் எழுந்திருக்க--
முதன் வரிசையில் உட்கார்ந்திருந்த வாரியாரும் எழுந்திருக்க--
அந்தக் கோடியில் இருந்த எம்.ஜி.ஆர்,,இதைக் கவனித்து
உடனே ஒரே பாய்ச்சலாக வந்து--
வாரியாரின் இரு கைகளையும் பற்றி--
நீங்கள் எனக்காக எழுந்திருப்பதா என்ற தொனியில் அவரை ஆசனத்தில் அமர்த்தினார்!!
இன்னொரு நிகழ்வு--
கோவையில்,,,சரவணப்பட்டியில்--
கௌமார மடம் என்றொரு முருகாஸ்ரமம்!1
அந்த மடத்தின் அருள் தலைவர்--சுந்தர ஸ்வாமிகள்
ஸத கஜ பூஜை செய்யவேண்டும் என்று சுந்தர ஸ்வாமிகள் விரும்புகிறார்
ஸத கஜ பூஜை என்றால்--
நூறு யானைகளை வைத்து பூஜை செய்வது!!
கோவை,,,வன இலாகா அனுமதி மறுத்துவிடுகிறது
சுந்தர ஸ்வாமிக்கு உற்ற நண்பர்--நம் வாரியார்
விஷயத்தை அறிந்து கொண்ட வாரியார்--
சுந்தர சுவாமிகளை அழைத்துக் கொண்டு தோட்டத்துக்கு செல்கிறார்
கந்தனுக்குக் கோட்டம் என்றால்
வாரியாருக்கு தோட்டம் தானே??
மிக மிக முக்கிய அரசியல் பிரமுகர்கள் வெகு நிறையபேர் காத்திருக்க--
முதல்வர் எம்.ஜி.ஆர்,,,இன்டர்காம் மூலம்,,,வாரியார் பெருமானை ,,,முதல் நபராக மேலே அழைக்கிறார்
முக்கால் மணி நேரம் வாரியார் ஸ்வாமிகளிடம் பேசிக் கொண்டிருந்த முதல்வர்--
எந்த நிலையில் அமர்ந்திருந்தார் எனத் தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்??
பெரிய சோஃபாவின் நுனியில்--பட்டும் படாமலும் உட்கார்ந்த நிலையில்????
கோ மாதா குளிரெனப் பெய்யும்--
கவ்யம் எவ்வளவு பரவசமோ அந்த அளவுக்கான
பவ்யம்??
வாரியார் ஸ்வாமிகளின் கஜ பூஜைக்காக--வனத் துறை அதிகாரியாரியிடம் அப்போதே பேசி அனுமதிக்கச் சொல்லிய எம்.ஜி.ஆர்--
வெகு திடீரென்று வாரியாரிடம் ஒரு உறுதி மொழி அளிக்கிறார்--
உங்களைப் போன்றவர்களின் மனம் சற்றும் நோகாதவாறு இந்த ராமச்சந்திரன் ஆட்சி செய்வான்???
ஆசிரியரிடம் மாணவன் உறுதியளிப்பது போல்--
ஜஸ்ட் ஒரு ஆன்மிக அருளாளரிடம்,,,ஒரு சி.எம்???
வாரி--யார் தருவார் என்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்று
வாரியார் ,,,அவருக்குக் கொடுத்த விருது--
பொன்மனச் செம்மல் என்பது என்ன சும்மாவா///
May be an image of 2 people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...