Saturday, November 18, 2023

மிகுந்த கண்டனத்திற்குரிய செய்தி!...

 யாதவமகா சபை தலைமை அலுவலகத்தில் இருந்த பெயர் பலகையை 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய் துறை மாநகராட்சித்துறை என பல்வேறு துறையை சார்ந்தவர்கள் (17/11/23) இரவு ஒரு மணிக்கு மேல் யாரும் இல்லாத நேரத்தில் அகற்றினார்கள் என்பது மிகுந்த கண்டனத்திற்குரிய செய்தி!...

பெயர் பலகை அகற்ற காரணம் அதில் எழுதப்பட்டிருந்த வாசகம்: (கடவுள் இல்லை என்பவன் முட்டாள் ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி) கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று சொன்ன ஈவேரா ராமசாமி சிலைகளிலும்,நம்முடைய ஆலயங்களுக்கு முன்பாகவும் வாசகம் எழுதப்பட்டிருப்பது தவறில்லை....
ஆனால் நாம் நமது பெயர் பலகையில் கடவுள் இல்லை என்பவன் முட்டாள் என்று சொன்னால் தவறு!...
இதுதான் ஜனநாயகமா என்பது யாதவமகா சபை தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ் உடைய கேள்வி?...
இன்று தலைமை அலுவலக பெயர் பலகையை அராஜக ஆட்சி கொண்டும்,காவல்துறையின் வன்மத்தோடும் நீங்கள் எடுத்து எறியலாம்!...
தற்போது டாக்டர் தி.தேவநாதன் யாதவ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து யாதவ மகா சபை தலைமை அலுவலக பெயர் பலகையில்... கடவுள் இல்லை என்பவன் முட்டாள் ஆன்மிகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்கிற வாசகத்தோடு அனைத்து மாவட்டங்களிலும் உடனே பெயர் பலகை வைக்கப்பட இருக்கிறது என அறிவித்திருக்கிறார்..
May be an image of 10 people, lighting, van and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...