Tuesday, November 28, 2023

அவர் மனக்கணக்கில் வாழ்கிறார்..

 ''பா.ஜ.,வுடன் ரகசிய உறவு இல்லை என்பதை மக்களிடம் சொல்லுங்கள் !''...

அதுவும் இஸ்லாமியர்களிடம் எடுத்து சொல்லுங்கள் என்று முழங்கி இருக்கிறார் பழனிசாமி,
கர்மா இருக்கின்றது என்றும் அதன் தாக்கம் என்பது விடாமல் துரத்தும் என்பதையும் பல இடங்களில் பலரிடம் கண்டுள்ளோம்.
அதிமுகவிற்கு இந்து மக்களிடம் உறவு இல்லை...
சிறுபான்மை மக்களிடம் மட்டுமே உறவு என்று ஓங்கி குரல் எழுப்புகிறார் எடப்பாடியார்..., ???
அவர் மனக்கணக்கில் வாழ்கிறார்..
சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பெற்று விடலாம் என்று தப்பான கணக்கை போட்டு விட்டார்.
அதே சமயம் ஒன்றுபட்ட இந்துக்கள் ஓட்டை அண்ணாமலை அறுவடை செய்ய ஆரம்பித்து விட்டார், பட்டிதொட்டியெல்லாம் அண்ணாமலையை பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்து விட்டார்கள்...
அண்ணாமலை அடிக்கும் அடியில் திராவிட சித்தாந்தங்கள் சுக்கு நூறாக உடையும் பொழுது அதிமுக எப்படி தாக்கு பிடிக்கும் ?
2 கோடி தொண்டர்கள் நம் கட்சியின் உறுப்பினர்கள் என்று சொல்லி, சொல்லி அவரை உசுப்பேத்தி விட்டு அதிமுகவை புதைகுழியில் தள்ள சில மேதாவிகள் தயாராகி வருகின்றனர்...
இவரும் பாவம் கனவில் மிதக்கிறார், அதனை பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பழனிச்சாமி அவர்கள் காண்பார். *
அவருக்கு அவரது கட்சியிலேயே பலத்த எதிர்ப்பு உருவாகத்தான் போகிறது,
இப்போது காலம் மாறி விட்டது என்பதை எடப்பாடிக்கு புரியாமலே பார்த்து கொண்டனர் அவரது அடிவருடிகள்...
முந்தைய காலங்களில் அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சிக்கு வரும்,
மக்களுக்கும் வேற வழி இல்லை,
திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒரு கட்சிக்கு ஒட்டு போட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை...
ஆனால் இனி வரும் தேர்தல் அப்படி அல்ல...
*
இனி வரும் தேர்தல் வித்தியாசமாக இருக்கும்..
இது படித்த IPSக்கும்,
படிக்காத திராவிட அரசியல்வாதிகளுக்கும் நடக்கும் போர்.
போர் என்று வந்து விடடால், உக்கிர போர் என்ற நிலைக்கு தள்ளப்படும்..
அன்று இரக்கம் பார்க்காது... 🔥 அதிமுகவையையும், திமுகவையும் சேர்த்து கிழித்து தொங்க விட போகிறார் அண்ணாமலை...
அந்த போர் முடிந்தவுடன் தெரியும் எடப்பாடிக்கு சேதாரம் எவ்வளவு என்று...
ஒரு படித்த மேதையால் , படிக்காத அரசியலில் தலைமை ஏற்றிருக்கும் தற்குறிகளுக்கு எவ்வளவு பெரிய சேதாரத்தை ஏற்படுத்த போகிறது என்பதை காணத்தான் போகிறது தமிழகம்...
இதை ஓட்டு வங்கியில் காணலாம், பொறுத்திருந்து பாருங்கள்...
அன்று...
எளிய மக்களின் தலைவராக இருந்த எம்ஜிஆர் கருணாநிதி யை எதிர்த்து தனிக்கட்சி யைப் தொடங்கிய போது...
கருணாநிதி யும்... அவரது கட்சி யினரும்...
எவ்வளவு பொய்பேசி... அவரைக் கேவலமாக ஏசி.. கீழ் த்தரமான அரசியல் செய்தனர்...
அதே நாலாந்தர அரசியலைத் தான் இன்று அண்ணாமலைக்கு எதிராக செய்கிறார்கள்...
அன்று இவர்களின் நாலாந்தர அரசியலை எதிர்த்து எம்ஜிஆர் வென்றதைப் போலவே...
இன்று அண்ணாமலையும் வெற்றி பெறுவது உறுதி...
இனியும் திமுகவினரின் பொய் அரசியல் வெற்றி பெறாது...
மக்கள் மிகவும் விழிப்புணர்வு பெற்று இருக்கிறார்கள்...
ஒன்றை நான் சொல்லுவேன்,.
.
திமுக திருடியே அழிய போகும் கட்சி... அதிமுகவை எடப்பாடியாரே எப்படியும் புதைத்து விடுவார்.
எப்படியோ திராவிட கும்பலிடமிருந்து தமிழகம் மீண்டால் சரி...!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...