Thursday, October 13, 2011

கைப்புள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம்...!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கைப்புள்ள ஸ்டாலின் என்ற தலைப்பில் பத்திரிகையாளர் அன்பு புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் சென்ற தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த பல ஊழல்கள், மற்றும் முறைகேடுகளை தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை வைத்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

இத்தகவலை கூகிள் பஸ்ஸில் வெளியிட்டதுமே வழக்கம்போல தி.மு.க.வின் தொண்டரடிப் பொடியாழ்வார்களும், அடிமைகளும் அ, ஆ, இ, ஊ என்று துள்ளிக் குதித்தார்கள். கைப்புள்ள் என்ற பெயர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் தாக்குகிறது. இது தனி மனிதத் தாக்குதல் என்றெல்லாம் பொங்கித் தீர்த்தார்கள்.

ஸ்டாலின் வேறு கருணாநிதி வேறல்ல.. கருணாநிதி வேறு தி.மு.க. வேறல்ல.. தி.மு.க. வேறு ஊழல் வேறல்ல.. ஆக.. அடிப்படையே தவறாக இருக்கும்போது ஸ்டாலினை மட்டும் ஏதோ அவதாரப் புருஷனாக கற்பனை செய்து கொண்டு இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து ஸ்டாலினுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். அதனால்தான் சொல்கிறேன் அவர்கள் அடிமைகள் என்று..!

சரி.. போகட்டும். அந்தப் புத்தகத்தின் முதல் கட்டுரையே கைப்புள்ள ஸ்டாலினுக்கு தி.மு.க. தொண்டன் ஒருவன் எழுதியிருக்கும் உண்மைக் கடிதம்தான்.. இந்தப் பிரச்சினையைத் தொட்டுவிட்ட பாவத்திற்காக இந்தக் கடிதத்தையும் தட்டச்சு செய்து பதிவிட்டுள்ளேன்.. 

இதில் பல கருத்துக்கள் அடிமை உணர்வில் எழுதப்பட்டிருப்பதால் எனக்கு உடன்பாடில்லை என்றாலும், பத்திரிகையாளர் அன்பு இப்போதும் தி.மு.க.வின் தொண்டர் என்பதாலும் அவரைக் குறி வைத்து துள்ளிக் குதிக்கும் லேட்டஸ்ட் தொண்டர்கள், அன்புவை பற்றியும் தெரிந்து கொள்ளட்டுமே என்பதால் வேலைவெட்டியை விட்டுவிட்டு தட்டச்சு செய்து பதிவிட்டுள்ளேன்..

படித்துப் பாருங்கள்..!

அப்பாவித் தொண்டன்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...