Monday, October 3, 2011

என்ன மானங்கெட்ட பொழப்புடா இது?

ஒரு தகுதியும் இல்லாத ஒரு எம்.பி க்கு (நாம் கட்டும் வரிப்பணமான) சம்பளம் ஒரு  ஆண்டு க்கு ரூவாய் 60 லட்சத்து 95 ஆயிரம். இந்த ரூவாய் அவர்களுக்கு போதவில்லை என்று ஒரு சில எம்.பிக்கள் கருத்துக்கள் தெரிவித்து இருக்கின்றார்களாம். அதாவது திருப்தி இல்லையாம். ஆனால் நாட்டுக்காக வேலை செய்கின்றார்களாம். 



நீங்கள் செலுத்தும் வரிப்பணம் எப்படி செலவிடப்படுகின்றது என்று உங்களுக்கு தெரிய வேண்டும் அல்லவா...அதற்காக இந்த பட்டியல்.

ஒரு எம்.பி க்கு  ரூவாய் 60 லட்சத்து 95 ஆயிரம்.

அப்படி எனில் இந்தியாவின் மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை 534 .

534 * 60 , 95 ,000 = Rs. 325,47,30,000



இது ஒரு வருடத்திற்கு உரிய தொகை. இதை ஐந்து வருடத்திற்கு மாற்றி பாருங்கள்.

3254730000 X 5 வருடங்கள் , அடேங்கப்பா, தலை சுற்றுகின்றதே..
Rs. 1627,36, 50000

கோடிகள் ஆயிரம் , எம்மாடியோவ்...

இதெல்லாம் பத்தாதுன்னு ரொம்ப பீல் பண்ணி இருக்காங்க..சரி அங்கே போய்  என்ன என்ன வேலை செய்யுறாங்க...நல்லா தூங்குறாங்க..யாராவது தூக்கத்துலே இருந்து எழுப்பிட்டா முழிச்சு என்னை ஏன் எழுப்பிநீங்கன்னு கூப்பாடு போடுறாங்க, ரொம்ப சத்தம் போட்டா தூக்கம்  கெடுதேனு  கோச்சிக்கிட்டு வெளியே கிளம்பிடுரானுங்க...அதுக்கு பேரு வெளிநடப்பு 



ஒரு தனியார் ஆபீசுல போய் பாருங்க...ஏதாவது யோசிக்கிறதுக்காக கண்ணை மூடினா கூட தூங்கிக்கிட்டு இருக்கான்னு சொல்லி வேலைய விட்டு தூக்கி வெளிய போட்டுர்றாங்க..ஆனா இவனுங்க தூங்குரதுக்குனே நாடாளுமன்றம் கிளம்பி போறானுங்க..

இவனுங்கள நம்பி இந்த பாரத தேசம்..

அதனால இவனுங்க கேட்ட 200 பெர்சென்ட் சம்பளத்த கொடுக்கிறதுக்கு மத்திய அரசாங்கம் ஏத்துகிட்டு தீர்மானம் போட்டிருக்காம் 




உடம்பே பத்திக்கிட்டு வருது...நீங்க என்னடா ஆக்கப்பூர்வமா செஞ்சீங்க...அதுவா தானா நடக்குது...இப்படி தூங்குனா அவனவன் வந்து உட்காந்திருக்கிற சீட்டுக்கு அடியிலே கூட வெடிகுண்டு வைப்பான்..

ஆனா உண்மையான தேசம் எப்படி இருக்குனு கீழே பாருங்க...

சோற்றுக்கு அலையும் சிறார் கூட்டம்









தண்ணீருக்கு அலையும் ஒரு கிராமம்

இதுதான் பொது மருத்துவமனை

 வறண்ட பூமியில் இன்னமும் தண்ணீரை தேடி கண்ணீரும் வற்றி போனதே...
குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து விட்டார்களாம். அப்படி எனில் இவர்கள் யார் தீவிரவாதிகளா? 

இந்த பதிவினை நீங்கள் கண்டும் காணாமல் செல்லலாம்...ஆனால்   இந்த தூங்குமூஞ்சிகளுக்கு இந்த சம்பளம் போதுமா அல்லது போதாதா என்று நீங்கள்தான் குறைந்தது வாக்கு கருத்துக்களாவது கொடுக்க வேண்டும். நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...