Wednesday, October 5, 2011

இந்தியா தமிழனின் தாய்நாடா? அண்டை நாடா?

2011 ஜூலையில், இந்தியா இராணுவத்தின் போர் கப்பல் ஐராவதி வியட்நாம் போகும் போது சீனாவின் கடல் எல்லையை கடந்தது, அப்போது சீனா இராணுவத்தால் இனி எங்கள் கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைகூடாது என்று அச்சுறுத்தப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பின் வியட்நாம் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கடலுக்கு எல்லைகள் கிடையாது யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று பேசினார். இதே கிருஷ்ணா தமிழக மீனவர்கள் 550 பேரை இலங்கை ராணுவம் கொன்றப் போது பாராளுமன்றத்தில் பேசினார் "தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடத்தானேச் செய்வார்கள் என்று" இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் இவர்களுக்கு தமிழர்கள் என்றால் கிள்ளுகீரைகள் என்று.

தமிழர்கள் இனியும் பொருத்துகொண்டிருந்தால் இந்த குள்ளநரிகள் நம் தமிழ் இனத்தையே அழித்துவிடுவார்கள். இந்தியாவின் துரோகத்தை மக்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். ஏதோ காசு பணம் என்றால் கூட போனால் போகுது என்று பொறுமை காக்கலாம். ஆனால் அங்கே அப்பாவி தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்படுகிறது. இலங்கையில் ஈழத்தமிலர்களையும், தமிழக கடலோர மீனவர்களையும் அனாதைகள் போல் இலங்கை அரசு கொன்றுகுவித்து வருகிறது. அதை சிறிதும் சட்டை செய்யாமல், கண்டு கொள்ளாமல் இருக்கிறது இந்திய அரசு.

*உலகத்தில் எந்த இன மக்கள் செத்தாலும் இந்தியா வருத்தம், கண்டனம் தெரிவிக்கும்* ஆனால் தமிழர்கள் செத்தால் மட்டும் கவலைபடாது.* இந்தியா தமிழரின் தாய்நாடாக இருக்கவே முடியாது. இந்தியா என்ற எண்ணம் நீர்த்து போய்விட்டது. இந்தியா என்பது தமிழனின் தாய் நாடு அல்ல, தாய் நாடாக இருக்க முடியாது, இந்தியா தமிழனின் ஒரு அண்டை நாடு என்பதை தமிழன் உணர வேண்டும்,

இன்று இந்தியா தமிழனுக்கு துரோகம் செய்யும் நாடாக இருக்கிறது. நம் வரி பணத்தில் உண்டு வாழும் இந்த அரவேக்காடு ஹிந்திக்காரனிடம் தமிழன் அடிமை போல் மண்டியிட்டு தமிழ் மக்களை காக்க மன்றாடியும் இந்தியா சிறிதும் சட்டைசெய்யவில்லை, இந்தியா சொல்கிறது..........

1. அண்டை நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது:

சரிதான்! ஆனால் ஈழத்தமிழர்களின் 35 வருட போராட்டத்தை அழிக்க இலங்கைக்கு பணம், போர் கருவிகள் எல்லாம் கொடுத்து உதவியதை என்னவென்று சொல்வது. இந்தியாவின் துரோகத்தை தமிழ்மக்களிடத்தில் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் இலங்கைக்கு செய்த ஆயுத உதவிகளில் தமிழரின் வரிபணம் அடங்கி உள்ளது. தமிழர்களின் வரிப்பணத்தில் தமிழர்களை கொல்லும் இந்தியா. யார் வீட்டு பணத்தை யார் வீட்டுக்கு கொடுப்பது

2. இலங்கை தமிழர்களுக்கு போராடுபவர்கள் இந்திய இறையாண் மைக்கு எதிரானவர்கள்:

இலங்கைக்கு உதவினா நாட்டுபற்று! தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் தேசதுரோகம். அப்படிப்பட்ட ஒரு தேசம் தமிழர்களுக்கு தேவையில்லை. அப்படிப்பட்ட ஒரு போலி தேசபக்தியும் தேசமும் நமக்கு வேண்டாம்.

இலங்கை கடற்படை தமிழர்களை நாயை சுடுகிற மாதிரி சுட்டு கொல்லுகிறான். அதை பற்றி ஒரு சிறு கண்டனம் கூட சொல்ல இந்தியாவுக்கு நேரம் இல்லை. தமிழன் போலி தேசபக்தியில் மூழ்கி பாரத மாதாகீ ஜே என்று முழங்குவதால் தமிழக மீனவர்கள் கேட்க்க நாதியின்றி அனாதைகள் போல் செத்து மடிகிறார்கள். தமிழக மக்களை காபாற்ற தமிழ்நாடுஅரசு இந்திய அரசாங்கத்தின் காலை நக்கிக்கொண்டுயிருக்கிறது.

ஏன் இந்த இழிநிலை?. இந்தியாவும் இலங்கையும் குலாவிகொள்ள தமிழர்கள் (தமிழ் மீனவர்கள், இலங்கை தமிழர்கள்) என்ன பலிஆடா!!!தமிழர்கள்தான் தன்னை இந்தியர்கள் என்று உணர்ச்சி பொங்க சொல்லுகிறார்களே தவிர இந்தியா தமிழர்களை இந்தியர்களாய் பார்க்கவில்லை ஏன் மனிதர்களாய் கூட பார்க்கவில்லை. இந்திய ஆதிக்கதில் தமிழ்நாடு இருக்கும்வரை இந்த நிலைதான். தமிழ்நாடு இந்திய ஆதிக்கத்தில் இருந்துவிடுபட்டு தனிநாடாக வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...