Monday, October 3, 2011

"அஞ்சா நெஞ்சனே" புழல் உங்களை அன்போடு வரவேற்கின்றது.....

நிலமோசடி விவகாரத்தில் அடுத்தடுத்து திமுக வினர் கைது செய்யப்படுவதை பலர் இது பழி வாங்கும் செயல் என்று கூறி கொண்டு வருகின்றனர்..... ஆனால் நிலத்தை பறிகொடுத்த அனைவருக்குமே நீதி பிழைத்து விட்டது என்றுதான் நினைப்பார்கள்.  இது சாதாரண விஷயம் அல்ல...ஒருவர் பல ஆண்டு காலம் ரத்தம் சிந்தி உழைத்த பொருளை எவ்வளவு எளிதாக அபகரித்து விட்டு சென்றனர்...அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நியாயமான தண்டனைதான் இது என்று நாங்கள் நினைக்கின்றோம்....

திமுகவிற்கு வக்காலத்து வாங்கும் ஒரு சில நண்பர்களுக்கு நான் கேட்பது என்னவெனில் திமுகவின் அராஜக போக்கினை தட்டி கேட்பதற்கு யாருக்காவது துணிவிருக்கின்றதா? மதுரையில் சென்று அழகிரி குழுவிடம் சென்று என் இடத்தை ஏன் அபகரித்தீர்கள் என்று யாரவது ஒருவரால் கேள்வி கேட்க முடியுமா? அப்படி கேட்டால் என்ன நடக்கும்?

மே 2007 இல் மதுரையில் நடந்த கோர சம்பவம் எல்லோர் கண்களிலும் வருகின்றதா? அதை எரித்தவர்கள் யார் என்று கண்கூடாய் ஆதாரம் இருந்தும் நீதிமன்றம் கேட்ட சாட்சியங்கள் இல்லாததால் அவர்கள் விடுவிக்க பட்டார்கள்....ஆனால் பலிகடா ஆக்கப்பட்ட (வினோத், கோபி மற்றும் முத்துபாண்டி) அவர்களின் குடும்பங்கள் திமுக வினரின் மீது எடுக்கபட்டிருக்கும் நடவடிக்கைகளினால் இன்று சற்று நிம்மதி அடைந்திருக்கும் என்றே நம்புகின்றோம்.....


கிருஷ்ணன் எப்படியோ இறந்து விட்டார்...அவராகவே வாக்கிங் போறப்ப அவராவே அரிவாள எடுத்து அவராவே வெட்டிகிட்டு போயிட்டாரு அப்படீன்னு நாம பேப்பர்ல படிச்சிட்டு போகலையா....


இவர்களை தடுப்பது யார்? நிச்சயம் ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியால்தான் முடியும், அதுவும் அந்த எதிர்கட்சியின் தலைமை ஒரு பெண்ணாக இருப்பதால் தான் இத்தனை பிரச்சினைகளுமே....சரி அந்த பெண் ஏன் இத்தனை தூரம் பழிவாங்க வேண்டும்...எல்லா அரசியல்வாதிகளுமே நல்லவர்கள் இல்லை என்ற போது.....

அந்த பெண் ஊழல் செய்தாள் என்று அவள் போட்டிருக்கும் உள்ளாடையில் இருந்து செருப்பு வரை அனைத்தையுமே படம் போட்டு காட்டியது யார்? ஜெயலலிதா செய்தது நியாயம் என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன்...ஆனால் அப்போது நீங்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்க வில்லையா?


நீ யோக்கியனாய் இருந்திருந்தால் அடுத்தவர்களை குறை கூறலாம்....நீயே அயோக்கியன் என்றால் பழி சாத்தப்படுபவர்கள் நிச்சயம் கோவப்படத்தான் செய்வார்கள்.....பழிவாங்கத்தான் துடிப்பார்கள்.....

செயலலிதா கோவிலுக்கு தான தர்மங்கள் செய்த போது எவ்வளவு இழிவுபடுத்தி பேசினார் கருணாநிதி...இன்று தனது துணைவியாரின் மகள் சிறைக்கு போய் விட்டாளே என்று உன் குடும்பமே கோவில் கோவிலாக சென்று பரிகார பூஜைகள் செய்கின்றதே அது ஏன்?

நான் அந்த பெண்ணை "அம்மையார்" என்றுதான் அழைப்பேன்...ஆனால் அந்த பெண் என்னை கருணாநிதி என்று பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள் என்று ஒரு கூட்டத்தில் பேசி அதற்கும் மக்களிடம் கைதட்டல் வாங்கினார் கருணாநிதி...

ஒரு பெண்ணை பொது இடத்தினில் வைத்து அவள் கட்டியிருக்கும் புடவையை உருவி அசிங்கபடுத்தினால் எந்த ஒரு பெண்ணும் அவனை எந்த ஒரு கால கட்டத்திலும் மன்னிக்க மாட்டாள்.....நிச்ச்ச்சயம் பழிவாங்கும் எண்ணம் இருந்துகொண்டே தான் இருக்கும்.... அதை அவருக்கு எடுத்து சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை....காரணம் கண்ணகியின் கணவனை ஒரு அரசன் கொன்று விட்டான் என்ற காரணத்திற்காக அவள் மதுரையையே எரித்ததாக வரலாறு பேசுகின்றது...." இப்படி அவர் திறந்து வைத்த கண்ணகி சிலையிடமே பழி வாங்கும் எண்ணம் இருந்த போது நிச்ச்ச்சயம் இந்த காலத்து பெண்மணி செயலலிதா விற்கு அந்த பழி வாங்கும் எண்ணம் இருப்பதில் தவறு இல்லை....

நில மோசடி என்றாலே அது அழகிரியைத்தான் முக்கிய புள்ளியாக எல்லா பத்திரிகைகளும் சொல்கின்றது..... இதை பற்றி கேள்வி கேட்டால் நீங்கள் எல்லாம் கூடா நட்பு, அப்படித்தான் எழுதுவீர்கள் என்று கருணாநிதி சொல்ல வேண்டியது.....பத்திரிக்கையாளர்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல அஞ்சியே கருணாநிதி அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்லி கொல்(ள்)கின்றார் என்றும் எனது நண்பர்கள் சொல்வார்கள்....


செயலலிதா பழி வாங்குகின்றார் என்று சொல்லும் கருணாநிதியால் காங்கிரஸ்காரர்கள் பழி வாங்குகின்றார்கள் என்று சொல்ல துணிவிருக்கின்றதா? மகள் செயிலுக்கு போய் விட்டாள்...அடுத்தது ஏதோ ஒரு 26 லட்சம் கோடி ஊழல் என்று சொன்னதும் மகன் அழகிரியும் போய் விடுவானோ என்ற அச்சத்தில் இன்னமும் காங்கிரசோடு எங்கள் உறவு இருக்கின்றது என்று சொல்கின்றார்....கட்சியா?? பிள்ளைகளா?? என்ற பட்டிமன்றத்திற்கு வந்து விட்டார் பாசத் தலைவன்....


எங்களை பொறுத்தவரை எங்களது நிலம் எங்களுக்கு மீண்டும் வேண்டும், அதை அபகரித்தவர்களுக்கு தண்டனை வழங்கல் வேண்டும்...அப்போதுதான் கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் பட்ட வேதனைக்கு தீர்வு கிடைக்கும்....

ஆகவே தமிழக அரசு புழல் சிறையை சுத்தம் செய்து வைத்து அனைத்து குற்றம் செய்தவர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.... .

 கிரிமினல் மினிஸ்டர் CM னு கூட சொல்லலாம்.......










அஞ்சா நெஞ்சனே புழல்  உங்களை அன்போடு வரவேற்கின்றது.... 



குறிப்பு *** :  சிறை கைதிகளுக்கு கருணாநிதி வழங்கிய முட்டை, மட்டன் எதுவுமே இன்னமும் தமிழக அரசால் ரத்து செய்யப்படவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.....

உலகிலேயே குற்றவாளிகளுக்கு மட்டன் உணவு கொடுத்து உபசரிக்கும் ஒரே தலைவர் உங்கள் கருணாநிதிதான்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...