Thursday, October 20, 2011

ஜெயலலிதாவை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதியுண்டா?

டந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளராக மரியம் பிச்சை போட்டியிட்டு வெற்றி பெற்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஆனார். அமைச்சராக பதவியேற்ற  அவர், எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்கு முன்பே கார் விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.   இந்த தொகுதியில் முஸ்லிம் ஒருவருக்கே வாய்ப்பளிக்கப்படும் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. மு.பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டார். இது தமிழக முஸ்லிம்கள் மத்தியில் ஜெயலலிதா மீது அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவின் இந்த முஸ்லிம் விரோத போக்கை எதிர்கட்சியான திமுக தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வகையில் ஒரு நாடகம் ஆடியது. இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின், ''ஒரு காலத்தில் எனது ஆருயிர் நண்பர் அன்பில் பொய்யாமொழி இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அகால மரணம் அடைந்ததன் காரணமாக இடைத் தேர்தல் வந்தது. அப்போது வேட்பாளராக பொய்யாமொழியின் சகோதரர் பெரியசாமியை தலைவர் நிறுத்தினார். அது போல் இப்போது ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும்? இறந்துபோனவரின் குடும்பத்தில் இருந்து ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும். அல்லது, சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நமது தலைவர் அவர்கள் வேட்பாளரை நிறுத்தி இருக்க மாட்டார். அதுதான் தலைவரின் மாண்பு. ஆனால், ஜெயலலிதா இந்தத் தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத ஒருவரை நிறுத்தி இருக்கிறார்'' என்று பேசியுள்ளார்.
 
ஸ்டாலினின் பேச்சு மேலோட்டமாக பார்த்தால் சரிதானே என என்னத்தோன்றும். ஆனால் இதை சொல்லும் தகுதி ஸ்டாலினுக்கு உண்டா என்பதுதான் கவனிக்க வேண்டிய விசயமாகும். ஏனெனில் இந்த தேர்தலில் திமுகவிற்கு முன்பாகவே வேட்பாளரை அறிவித்து விட்டார் ஜெயலலிதா. ஸ்டாலினுக்கோ அவரது தந்தைக்கோ உண்மையில் முஸ்லிம்கள் மீது பற்று இருந்திருக்குமானால், ஜெயலலிதா செய்யத்தவறியதை செய்துவிட்டு, அதாவது திமுக சார்பாக முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி விட்டு ஜெயலலிதாவை விமர்சித்தால் அதில் அர்த்தமிருக்கும்.  ஆனால் அவ்வாறு செய்யாமல் வழக்கம்போல நேருவை நிறுத்தி விட்டு, முஸ்லிம்கள் விசயத்தில் ஜெயலலிதாவை மட்டும் விமர்சிப்பது ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது போல் உள்ளதை ஸ்டாலின் உணரவில்லையா? இதில் வேடிக்கை என்னவென்றால் ஸ்டாலினை போல சிந்தித்த ஒரு இயக்கம் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாத ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்டப் போகிறோம்[!] என்று ஓடிப்போய் நேருவுக்கு அதரவு என்று சொல்லி ஒட்டிக் கொண்டது தனிக்கதை. இவர்களின் அரசியல் ஆட்டத்திற்கு முஸ்லிம்களின் தலையை  உருட்டுவதுதான் வேதனைக்குரியது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...