Thursday, October 20, 2011

மருத்துவருக்கு இப்போதைக்கு தேவை வேகம் அல்ல விவேகம் தான்!


டந்த பாராளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தான் வெற்றி பெற்றதாகவும்  அதிகாரிகளின் கடைசி நேர உள்ளடிகளால்
ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டர்கள் என்று ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் சில கருப்பு ஆடுகள் இருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் தேர்தலை நியாயமாக நடத்திடத் தான் தேர்தல் ஆணையம் உள்ளது. தேர்தலில் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று ஆதாரப்பூர்வமாக அறியவந்தால் அவர்களை சட்டரீதியாக எதிர்கொள்ள  ஒவ்வொரு அரசியல்கட்சிக்கும் உரிமையுண்டு. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் இது குறித்து கூறியுள்ள வார்த்தைகள் அவரது 'பழைய' நடவடிக்கைகளை பிரதிபலிப்பதாக உள்ளது. தேர்தல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமதாஸ்,
 
''உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில், 50, 100 ஓட்டு வித்தியாசம் இருக்கும் பகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவிக்க அறிவுரை வழங்கியதாகக் கூறுகின்றனர். அதிகாரிகள் அப்படி அறிவித்தால், அவர்கள் வெளியில் நடமாட முடியாது. அந்த அதிகாரிகள் வீட்டின் முன், என்ன நடக்கும் எனத் தெரியாது. வீட்டில் இருந்து ஒருவர் கூட வெளியில் வர முடியாது என எச்சரிக்கிறேன். தமிழகத்தில் புரட்சி நடக்கும். கலகம் நடக்கும் என்று பேசியுள்ளார். 
 
தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளை வீட்டை விட்டு வெளியேவர முடியாது என மிரட்டுவதும், புரட்சி வெடிக்கும்; கலகம் நடக்கும் என்றெல்லாம் மிரட்டுவது ஒரு கட்சித்தலைவருக்கு அழகல்ல. இதுபோன்ற வார்த்தைகளை சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தான் பயன்படுத்துவார்கள். மருத்துவரும் அத்தகைய வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவது சமூகத்தில் அவருக்கு உள்ள மதிப்பை குறைக்கவே செய்யும். மருத்துவருக்கு இப்போதைக்கு தேவை வேகம் அல்ல விவேகம் தான் என்பதை புரிந்து கொண்டால் சரி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...