விருதுநகரில் குறைகூற வந்த பெண்ணை வருவாய்துறை அமைச்சர் அடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர் அருகே பாலவநத்தத்தில் இலவச ஆடு வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் வருவாய்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பங்கேற்றார். அதே ஊரை சேர்ந்த கலாவதி அமைச்சரிடம் மனு அளிக்க வந்தார்.
மனுவில், "தனது குடும்பம் கஷ்டத்தில் வாடுகிறது. வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும்" என தெரிவித்து இருந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த மனுவை வாங்கி அந்த மனுவால் அப்பெண்ணை அடித்தார். இந்த சம்பவம் வீடியோவாக வைரலானது. இது குறித்து தி.மு.க., தரப்பில் விசாரித்த போது, 'மனு கொடுக்க வந்த பெண் உறவினர் முறை என்பதால், அவரை செல்லமாக தட்டிப் பேசியதாக'' தெரிவித்தனர்.
பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'கெடு
பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:மக்கள் என்ன உங்கள் அடிமைகளா. விருதுநகர், பாலவனத்தம் கிராமத்தில், தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த வருவாய் துறை அமைச்சர்ராமச்சந்திரன், அடுத்த, 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை, தமிழக பா.ஜ., முற்றுகையிடும்.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கவர்னருக்கு கடிதம்தேச பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போலி பாஸ்போர்ட் வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளை, உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும்.இந்த வழக்கை, சி.பி.ஐ., அல்லது தேசியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என, கவர்னருக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
No comments:
Post a Comment