Wednesday, November 23, 2022

காசித் தமிழ் சங்கமம்!

 இளையாராஜா மேடை பேச்சாளர் இல்லை சொல்ல போனால் அவருக்கு சுட்டு போட்டாலும் வராத ஒன்றுதான் பேச்சு!

ஆனால் மனதில் தோன்றுவதை பேசும் சுபாவம் கொண்டவர் அது நல்லதோ கெட்டதோ பேசிவிடுவார். பாட சொன்னால் இசைக்க சொன்னால் அவரை மிஞ்சி யாரும் இன்னும் பிறக்கவில்லை.
அப்படி பேசிய இளையராஜா இந்த சங்கமத்தை பற்றிய யோசனை மோதிஜிக்கு எப்படி வந்தது என வியந்தார் மேடையில். அவருக்கு மட்டுமல்ல மோதிஜியை எதிர்க்கும் யாவரின் புருவமும் சற்று வியப்போடுதான் உயர்ந்து நிற்கிறது.
செம்மொழியான தமிழ்... என ரகுமான் இழுக்க தொடங்கிய செம்மொழி மாநாட்டு கூத்துக்களை இன்றைய இளசுகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அன்று கருணாநிதி இதில் அடித்த குடும்ப கூத்து ஊரே சிரிக்கும்படி இருந்தது.
காசி எனும் புனித மண்ணில் என் தாய் மொழிக்கான இந்த நிகழ்ச்சியை புறகணித்த அனைத்து திமுக அடிப்பொடிகளும் வெட்கி போகும் நிலை வர வேண்டும். அவளை குதறியெடுத்த இந்த திக திமுக குரூப்புகளின் கொட்டம் அடங்கும் நாளும் வரும்...
அது அண்ணாமலை எனும் மனிதனால் வரும் மீண்டும் தமிழ் தரணியில் செழித்தோங்கும்!
தாமரையில் வீற்றிருக்க வேண்டிய சாந்தசொரூபியான என் தமிழ் அன்னையை தலைவிரிகோலமாக மாற்றிய திக வகையராக்கள் நிச்சயம் அதற்கான வினையை எதிர்கொள்வார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...