Tuesday, November 29, 2022

ஹோரை;

 ஹோரை அறிந்து நடப்பவனை யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர் வாக்கு, இங்கே 6 மணி என பொதுவாக கொடுத்தாலும் அன்றைய நாளின் அந்தந்த ஊர் சரியான சூரிய உதய நேரமே ஆரம்பம் அன்றைய சூரிய அஸ்தமன கால நேரம் வரை 12சம பாகமாக பிரித் astrosoft கொண்டு மொபைலில் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்,

ராகு காலம், எமகண்டம், குளிகையுடன் ஓரை அறிந்து செயல்பட ஏற்றம் உண்டு,
சூரிய ஓரை; அரசு வேலை, அரசு அதிகாரியை சந்தித்தல், பதவி ஏற்க, மருந்துண்ண, உயில் எழுத, தகப்பன் உதவி, சிவதரிசனம் செய்ய நலம்,
சுப நிகழ்ச்சி, சொந்த வாடகை வீட்டில் முதல் முறையாக பால் காய்ச்ச கூடாது,
சந்திரன் ஓரை; வளர்பிறை காலத்தில் மட்டும் பயணம், புது வியாபாரம், திருமணம் , சீமந்தம், மொட்டை அடித்தல், காது குத்தல், பெண் பார்ப்பது, பதவி ஏற்பது, அம்மன் தரிசனம், தாயார் உதவி,, வங்கி கணக்கு, பெண்கள் தொடர்பு காரியம் ஏற்றது,
சொத்து சம்பந்தமாக பேசுவது கூடாது,
செவ்வாய் ஓரை; நிலம் வாங்க விற்க, சொத்து பிரித்தல், விவசாயம் வீடு தோட்டம் பார்வை, சகோதரர் உதவி, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவி, முருகன் வழிபாடு, ஆயுத பிரயோகம், கடன் அடைக்க ஏற்ற காலம்,
கடன் வசூல் செய்ய போக கூடாது, கடன் கொடுக்ககூடாது, வீண் வாக்குவாதம், கடன் வாங்குதல், பெண் பார்ப்பது கூடாது,
புதன் ஓரை; ஜோதிடம், கல்வி பயில, சுப காரியம், பயணம்மேற்கொள்ளல்,
வங்கி கணக்கு, மாமன் உதவி, வக்கீல் உதவி, தூது போதல், பெருமாள் தரிசனம் ,
பெண் பார்ப்பது, வீடு நிலம் சொத்து பற்றி பேசுதல் பார்வையிடல் கூடாது,
குரு ஓரை; அனைத்து சுபம், வியாபாரம், விவசாயம்,, தங்க நகை,, குழந்தைகள் படிப்பு, பிரம்மன் தட்சணாமூர்த்தி வழிபாடு, குரு சந்திப்பு , வீடு மனை , கொடுக்கல் வாங்கள் சிறப்பு,
முதல் முறை விருந்து வைத்தல் அதுவும் புது தம்பதிகளுக்கு கூடாது, கடற்பயணம் கூடாது, சட்டத்திற்க்கு புறம்பான காரியம் கூடாது,
சுக்கிர ஓரை; பெண் பார்க்க, சுப காரியம், ஆடை வெள்ளி ஆபரண சேர்க்கை, அம்மன், ஆண்டாள் வழிபாடு, காதல், விருந்து. வாகனம். வீடு கட்ட, சாந்தி முகூர்த்தம், பயணம் ஏற்றது,
நகை இரவல் கூடாது, துக்கம் விசாரித்தல், பணம் கொடுத்தல் கூடாது
சனி ஓரை; விவசாயம், இரும்பு, சுத்தம் செய்தல், நவகிரக ,,ஊழ்வினை பாவம் போக்கும் வழிபாடு நலம். சுபம் தவிர்க்க நலம்,
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...