Wednesday, November 23, 2022

இவர் அரசு பேருந்து ஓட்டுனர்..

 இவர் பணி திருவண்ணாமலை முதல் சென்னை செல்லும் பேருந்தின் ஓட்டுனர்..

நடத்துநர் இல்லா சொகுசு பேருந்து..
சில தினங்களுக்கு முன் இவர் சென்னை சென்று பயணிகளை இறக்கி விட்டு சிரமபரிகாரம் செய்து விட்டு தடபலகை மாற்றம் செய்கையில் பேருந்தில் ஒரு பை கிடைப்பதை பார்த்து எடுத்து உள்ளே என்ன உள்ளது என்று பார்க்க அதர்ச்சி.‌
பணம், நகை, செல் போன் இருந்துள்ளது .‌..
சரி யாராவது வந்து கேட்க கொடுக்கலாம் என இருந்துள்ளார்..
சிறிது நேரத்தில் ஒரு பெண்மனி அழுது கொண்டு நிற்பதை பார்த்து இவர் நம் பேருந்தில் வந்த பெண் போல் உள்ளதே என்ற சந்தேகத்தின் பேரில் அவரை விசாரிக்கையில் பையை தவறவிட்டதாகவும் வந்த பேருந்து எது என தெரியவில்லை என்று அழுது கொண்டு தெரிவித்துள்ளார்..
அம்மா தாங்கள் வந்த பேருந்து ஓட்டுநர் நான் தான் ..
தங்கள் பை என்னிடம் உள்ளது.. வாங்க.. அதிகாரி முன்னிலையில் ஒப்படைக்கிறேன் என் கண்காணிப்பாளர் இடம் அழைத்து சென்று உள்ளார்..
கண்காணிப்பாளர் அப்பெண்மணியிடம் பையில் இருந்த விபரங்கள் கேட்க
15 பவுன் நகை, 2 லட்சம் ரொக்கம், செல் போன் எண்.. பேசிய விபரம் தெரிவிக்க ஆவணங்களை சரிபார்த்து அப்பெண்மணியிடம் பொருளை ஒப்படைத்துள்ளனர்..
ஏறக்குறைய 10 லட்சம் மதிப்புள்ள பொருள் .. ஓட்டுனர் மட்டுமே அறிந்தவர்.. வேறு யாருக்கும் தெரியாது..
மறைத்து இருக்க முடியும்..
ஆனால் நேர்மையாக உரியவரிடம் பொருளை சேர்த்த இந்த ஓட்டுநரை பாராட்டுவோம்..
வறுமையிலும் செம்மை!!!!
இது போன்று ஒட்டுனர்களை பயிற்றுவிக்கும் அரசு போக்குவரத்து கழகங்களை பாராட்டுவோம்!!!!
இவர் பெயர் சிவகுமார்..
நல்லவர்களை பாராட்ட நற்செயல்கள் கூடும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...