Friday, November 25, 2022

மனச்சோர்வுக்கு தீர்வு .

 நமது மனம் சாதாரணமாக இருக்கும் போது சிந்திப்பதற்கும் அதீதமாக உணர்ச்சிவசப்படும் போது சிந்திப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒரு சண்டையின் போது கோபத்தில் நாம் என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்றெல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் போகிறதல்லவா? கொஞ்ச நேரம் கழித்து இதற்காகவா இப்படியெல்லாம் நடந்து கொண்டோம் என உணர்கிறோம் அல்லவா? காரணம் உணர்ச்சி வசப்படும்போது நமது மூளை தாறுமாறாக இயங்குகிறது. தீவிர மனச்சோர்வும் அப்படித்தான். அது தீவிரமான உணர்வு நிலை. அப்போது நமது உணர்வுகள், எண்ணங்கள், செயல்பாடுகள் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. எல்லாமே எதிர்மறையாகத் தோன்றும். எதுவுமே செய்யப் பிடிக்காது. ரசிக்காது. தற்கொலை எண்ணங்கள் தோன்றும். அந்த சமயம் எத்தனை அறிவுரை சொன்னாலும், பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளச் சொன்னாலும் முடியாது. பொறுமையாக அந்த காலகட்டத்தைக் கடப்பது, மனதை அமைதிப்படுத்தத் தேவைப்பட்டால் மருந்துகள் எடுத்துக் கொள்வதே அதற்கான சிகிச்சை. இசை, இயற்கையை ரசித்தல், உடற்பயிற்சி செய்தல், யோகா, பாசிட்டிவ் எண்ணங்கள் இதெல்லாம் லேசான மனச்சோர்வுக்குப் பயனளிக்கும். தீவிரமான மனச்சோர்வு இருப்பவரை இதையெல்லாம் பண்ணச் சொல்வது பிரயோசனப்படாது. இவற்றை எல்லாம் மனச்சோர்வு வராமல் காக்கும் தடுப்பு முறைகளாகக் கொள்ளலாம். வந்தபின் செய்யும் சிகிச்சைகள் அல்ல. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் தினமும் வாக்கிங், உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். ஆனால் மாரடைப்பு வந்த ஒருவரை வாக்கிங் போனால் போதும் மருத்துவமனைக்குப் போக வேண்டாம் எனச் சொல்வது அபத்தமாக இருக்கும் அல்லவா? அது போலத்தான் தீவிர மனச் சோர்வும். நமக்கு இருப்பது தீவிர மனச்சோர்வுதான் என எப்படி அறிவது? மேலே சொன்ன எந்த வழிமுறைகளாலும் பலனளிக்கவில்லை என்றால் அல்லது செய்ய முடியவில்லை என்றால் அது தீவிர மனச்சோர்வாக இருக்கலாம். மேலும் மன நோயில் பல வகைகள் இருக்கின்றன. மனச்சிதைவு , மனபிறழ்வு பைபோலார் டிஸார்டர், ஃபோபியா, மனப்பதட்டம், என பல வகைகள். பொத்தாம் பொதுவாக மன அழுத்தம், டிப்ரஷன் எனச் சொல்வதற்கு முன் அதற்குரிய நிபுணரை அணுக வேண்டும்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...