Monday, November 28, 2022

அகத்திகீரை..

  இந்த கீரையை அதிகம் கண்டு கொள்வதே இல்லை அது ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால் இதில் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன...

இதில் மூன்று வகை உண்டு சிற்றகத்தி சீமை அகத்தி சாலைஅகத்தி ... நமக்கு தெரிந்தது வெள்ளை மற்றும் சிகப்பு தான்..
இதில் 63 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன..
இதை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பல விதமான பிரச்சினை சரியாகும்.
இது வாதம் பித்தம் கபம் மூன்றையும் சம நிலையில் வைக்கும்..
இது பிளட் பிரஸர் குறைக்கும்..
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூட்டு தேய்மானம் அடையும் ஜாய்ன்ட் பெயின் வரும் அதற்கு இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் நல்லது..
இது வாய்ப்புண் வயிற்றுப்புண் சரிசெய்யும் வயிற்றில் உள்ள புழுக்கள் பூச்சிகள் வெளியேறும்
குழந்தை பெற்ற பெண்கள் இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால் பால் சுரப்பு அதிகரிக்குமாம்.
இதில் விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் பார்வை தெளிவாக இருக்கும்..
சில பேர் சோம்பலாக எதையும் சிந்திக்காமல் இருப்பார்கள் அவர்களுக்கு இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள நல்ல மாற்றம் தெரியும்.‌‌‌.
புகை பிடிப்பவர் பான் பராக் ஹான்ஸ் போடுபவர்களுக்கு உடலில் ஒரு விதமான சூடு இருக்கும் என்னதான் பன்னினாலும் அந்த உடல் சூடு குறையாது அதற்கு இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால் சூடு தணியும் புகையை நாளடைவில் மறக்க செய்யும்.. அதன் விஷமும் நீங்கும்
சில பேர் கழுத்தில் தேமல் படை இருக்கும் அதற்கு இந்த கீரையை அரைத்து பூசி வர சரியாகும்..
காபி டீ அதிகம் குடிக்கும் நபர்கள் உடல் சூடு அதிகம் இருக்கும் அவர்களும் இதை சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
சரக்கு அடித்து விட்டு இதை சாப்பிட கூடாது சரக்கு அடிப்பவர் இதை சாப்பிட மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளதாக சொல்ல படுகிறது ஆக அவர்கள் தவிர்க்க வேண்டும்.
இது பொதுவாக அதிக உடல் சூடு குறைக்கும் எலும்பு பல் வளர்ச்சி நன்றாக இருக்கும்..
அசைவம் சாப்பிட்டு விட்டு இதை சாப்பிட கூடாது..
எதாவது நோய்க்கு மருந்து சாப்பிடும் நபர்கள் மருந்து சாப்பிடும் நாளில் இதை சாப்பிட கூடாது மருந்தை முறிக்கும்...
சித்த மருந்துகள் சாப்பிட்டு வருபவர்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்..
ஆங்கில மருந்துகள் எதாவது நோய்க்கு நீண்ட காலம் சாப்பிட்டு வருபவர்கள் இரத்தம் சூடு ஏறி அசுத்தம் அடைந்து இருக்கும் அதற்கு இதை சாப்பிட இரத்தம் சுத்தமாகும்..
இதை முறைப்படி நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும்... இல்லை சிறிது சிறிதாக கட் பண்ணி சூப் செய்து சாப்பிடலாம் மிக நன்று...
இதை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாது..
பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இதை சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது..
இந்த கீரையில் உள்ள கசப்பு தன்மை குறைய புழுங்கல் அரிசியை வறுத்து பொடி செய்து கீரை உடன் சேர்ந்து சமைக்கலாம்..
சில பேர் மருந்து வைத்து விட்டார்கள் என்று சொல்பவர்கள் இந்த கீரையை சாப்பிட்டால் மருந்து முறியும்..
ஒருவர் இறந்து விட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மூன்று நாட்கள் கழித்து இந்த கீரையை சமைத்து கொடுப்பார்கள் எதற்காக தெரியுமா துக்கம் தாளாமல் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் இரத்த ஓட்டம் சீராக இல்லாது இருக்கும் அதற்கு இதை சாப்பிட சரியாகும் மணம் அமைதி அடையும்..
இந்த கீரையை மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாருக்காவது தானம் கொடுக்க அவர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்...
இந்த கீரையை மகம் நட்சத்திரத்தில் எருமைகளுக்கு கொடுக்க எம பயம் நீங்கும் கடைசியில் சிவலோகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.‌‌...
இதை விதை மூலம் வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பசும் பாலில் ஒரு 12 மணி நேரம் ஊற வைத்து விதைத்தால். வரும் கீரை கசப்பு குறைவாக இருக்கும்...
இது செடியாகவும் கிடைக்கும் அதை மாடியில் வளர்க நினைப்பவர் 50 லிட்டர் 100 லிட்டர் கேனில் வைக்கலாம்...
May be an image of flower, nature and tree

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...