Tuesday, November 29, 2022

*இரண்டிற்கும் வித்தியாசம்,* *வயது மட்டுமே...*

 பல, வருடங்களுக்கு முன்னாள் பள்ளி பருவத்தில், எனது ஆசிரியர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்......

கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் என்று...,
அதற்கு ,
நான் சொன்ன பதில்...,.
இரண்டிற்கும்...
*வயதுதான் வித்தியாசம் என்றேன்.....*
கண்ணன் என்பது செல்ல பெயர்.
குழந்தை பருவம்.
கிருஷ்ணன் என்பது வளர்ந்த பிள்ளை.
இரண்டிற்கும் , வயதுதானே வித்தியாசம்
சின்ன உதாரணம்...
ஒருநாள், நான் ...
முகம் முழுக்க சோப்பு தேய்த்து ,
குளித்துக் கொண்டிருந்தேன்.
திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை. கண்ணை திறக்க முடியாமல்,
இரண்டு கையாலும்,
என்னை சுற்றி , சுற்றி,
சொம்பை, தேடினேன்.
அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது.
எனக்கு புரிந்து விட்டது.
சொம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று.
எனக்கு , கண் எரிகிறது
என்று அவளுக்கு தெரியவில்லை.
நான் , சொம்பை தேடுவதில்,
அவளுக்கு ஒரு ஆனந்தம்.
இதுதான்....
குழந்தையின் குறும்பு. என்பது.
தற்போது , எனது கண்ணில் ,
ஒரு தூசி விழுந்தாலும்
அவள் கண்ணில் நீர் வடிகிறது.
இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே....
மகாபாரதத்தில், கண்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது....
கோபிகளின் ஆடைகளை ,
மறைத்து வைத்து...
அவர்கள் தேடுவதை கண்டு
ஆனந்தப் பட்டான்.
அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....
மேலாடை இன்றி ஒரு பெண் தவிக்கும்போது...
மேலாடையை அவளுக்கு கொடுத்து,
அவள் மனதை, காத்து நின்றான்..
இரண்டிற்கும் வித்தியாசம் ,
வயது மட்டுமே.....
கண்ணன் சிறு பிள்ளையாக இருக்கும்போது....
நண்பர்களுடன் , பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான்.
தாய் கேட்கும் போது...
நான் திருடவே இல்லை என ,
பொய்யும் சொன்னான்...
அதே கண்ணன்
கிருஷ்ணனாக மாறும் போது....
திருடுவது கூடாது....
பொய் சொல்வது கூடாது ,
என கீதை உபதேசம் செய்தார்....
இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே.
அருமையான
கருத்துக்கள் செரிந்த பதிவு. *Simple but beautiful*..👌👌👌
சர்வம் *கிருஷ்ணார்ப்பணம்*..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...